ஜம்மு காஷ்மீரில் 5 லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் என்கவுன்ட்டர்!
Sep 14, 2026, 05:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் 5 லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் என்கவுன்ட்டர்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 17, 2023, 01:10 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஜம்மு காஷ்மீரில் கூட்டு நடவடிக்கைக் குழுவினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 5 தீவிரவாதிகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதம் தலைவிரித்தாடிய நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு அம்மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. இதன் பிறகு, தீவிரவாதிகளையும், தீவிரவாதத்தையும் ஒடுக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது.

இதற்காக, இராணுவம், துணை இராணுவம், மத்திய ரிசர்வ் போலீஸ் படை மற்றும் மாநில காவல்துறை அடங்கிய கூட்டு நடவடிக்கைக் குழு அமைக்கப்பட்டது.

இக்குழுவினர் ஜம்மு காஷ்மீர் மாநிலம் முழுவதும் சல்லடை போட்டுத் தேடி தீவிரவாதிகளை கைது செய்தனர். அதேசமயம், அடங்க மறுத்து அத்துமீறும் தீவிரவாதிகள் என்கவுன்ட்டரில் போட்டுத் தள்ளப்பட்டனர்.

எனவே, ஜம்மு காஷ்மீரில் இருந்த தீவிரவாதிகள், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளுக்குச் சென்று பதுங்கிக் கொண்டனர். இதனால், மாநிலத்தில் தீவிரவாதம் படிப்படியாகக் குறைந்து வருகிறது.

அதேசமயம், உள்ளூரில் பதுங்கி இருக்கும் தீவிரவாதிகள், அவ்வப்போது அத்துமீறி கூட்டு நடவடிக்கைக் குழுவினர் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். அந்த வகையில், கடந்த செப்டம்பர் மாதம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இராணுவ கர்னல், மேஜர், இராணுவ வீரர், மாநில காவல்துறை டி.எஸ்.பி. ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதையடுத்து, மாநிலத்தில் மீண்டும் தீவிரவாத வேட்டை தொடங்கி இருக்கிறது.

இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக நேற்று ரகசியத் தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, இராணுவத்தின் 34 ராஷ்டிரிய ரைஃபிள்ஸ், 9 பாரா (உயர் சிறப்புப் படை பிரிவு), மாநில போலீஸ் மற்றும் சி.ஆர்.பி.எஃப். ஆகியோர் அடங்கிய கூட்டு நடவடிக்கைக் குழு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது. நேற்று முழுவதும் நடந்த தேடுதல் வேட்டையில் தீவிரவாதிகள் யாரும் சிக்கவில்லை.

இதையடுத்து, இன்று காலையும் தேடுதல் வேட்டை தொடர்ந்தது. குல்காம் மாவட்டம் நெஹாமா பகுதியில் உள்ள சாம்னோ என்ற இடத்தில் கூட்டு நடவடிக்கைக் குழுவினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தபோது, அப்பகுதியில் பதுங்கி இருந்த தீவிரவாதிகள் திடீரென பாதுகாப்புப் படையினரை நோக்கித் துப்பாக்கிச்சூடு நடத்தினர். எனவே, கூட்டு நடவடிக்கைக் குழுவினரும் பதிலடித் தாக்குதலில் ஈடுபட்டனர்.

இத்தாக்குதலில் 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட தீவிரவாதிகள் அனைவரும் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று காவல்துறை தெரிவித்திருக்கிறது.

மேலும், கொல்லப்பட்ட நபர்களிடம் இருந்து துப்பாக்கிகள் உள்ளிட்ட பயங்கர ஆயதங்கள் மற்றும் வெடி பொருட்கள் மீட்கப்பட்டதாகவும் காவல்துறைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனினும், கொல்லப்பட்டவர்களின் பெயர் விவரங்கள் எதுவும் தற்போது வரை வெளிவரவில்லை.

Tags: encounterjammu kashmirkilled5 terrorist
Share
Tweet
SendShare
Previous Post

திருவண்ணாமலையில் நாளை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்! – அண்ணாமலை அறிவிப்பு!

Next Post

ரயில்களில் காத்திருப்போர் பட்டியல் பூஜ்யம் இலக்கு!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies