விவசாயத்தை அழிக்கும் திமுக!
Jan 14, 2026, 03:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

விவசாயத்தை அழிக்கும் திமுக!

விவசாயிகள் மீது குண்டர் சட்டம்!

Murugesan M by Murugesan M
Nov 17, 2023, 05:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே சிப்காட் விரிவாக்க பணிக்காக, 3,174 ஏக்கர் விவசாய நிலங்களை திமுக அரசு கையகப்படுத்த முயன்றதை எதிர்த்து, போராட்டம் நடத்திய விவசாயிகள் 7 பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தாலுகா, மேல்மா சிப்காட் அலகு 3 திட்ட விரிவாக்க பணிக்காக மேல்மா, குரும்பூர், நர்மா பள்ளம், தேத்துறை, காட்டுக்குடிசை, நெடுங்கல் உள்ளிட்ட 11 ஊராட்சிகளில் இருந்து 3 ஆயிரித்து 174 ஏக்கர் விவசாய நிலங்களை கைப்பற்ற திமுக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

விவசாயத்தை அழிக்கும் திமுகவின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதியிலுள்ள விவசாயிகள் கடந்த ஜூலை 2-ஆம் தேதி முதல் 125 நாட்களுக்குத் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேல்மா கூட்டுச்சாலையில் பந்தல் அமைத்து அமைதியான முறையில் போராட்டம் நடத்தினர்.

இதைத்தொடர்ந்து, மேல்மா சிப்காட் திட்டத்தை கைவிட வலியுறுத்தி, கடந்த 2-ஆம் தேதி, செய்யாறு சார் ஆட்சியர் அலுவலகம் நோக்கி விவசாயிகள் பேரணியாக சென்றனர். அப்போது, விவசாயிகளை காவல் துறையினர் தடுத்து நிறுத்தியபோது, தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதனை அடுத்து, விவசாயிகள் மீது மேல்மா சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியது, தடையை மீறி பேரணியாக சென்றது, காவல்துறை வாகனங்களை சேதப்படுத்தியது, ஆட்சியர் அலுவலகத்தில் அனுமதியின்றி கூடியது என பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, கடந்த 4-ஆம் தேதி 22 விவசாயிகள் கைது செய்யப்பட்டு, வெவ்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட விவசாயிகளில் 7 பேர் மீது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் பரிந்துரையின் பேரில், கடந்த 15-ஆம் தேதி குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் முருகேஷ் உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து, பாளையங்கோட்டை சிறையில் உள்ள அருள், வேலூர் சிறையில் உள்ள மாசிலாமணி, பாக்கியராஜ், மதுரை சிறையில் உள்ள பச்சையப்பன், திருச்சி சிறையில் உள்ள திருமால், கோவை சிறையில் உள்ள தேவன், கடலூர் சிறையில் உள்ள சோழன் ஆகியோர் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான ஆணையை செய்யாறு காவல்துறையினர் வழங்கி உள்ளனர்.

Tags: former protestdmk fails
ShareTweetSendShare
Previous Post

விமானப் போக்குவரத்து சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி!

Next Post

ஜெர்சியை மாற்றிக்கொண்ட ரோஹித் மற்றும் டேவிட் பெக்காம் !

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies