விவசாயத்தை அழிக்கும் திமுக!
Mar 15, 2026, 01:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விவசாயத்தை அழிக்கும் திமுக!

விவசாயிகள் மீது குண்டர் சட்டம்!

Murugesan M by Murugesan M
Nov 17, 2023, 05:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே சிப்காட் விரிவாக்க பணிக்காக, 3,174 ஏக்கர் விவசாய நிலங்களை திமுக அரசு கையகப்படுத்த முயன்றதை எதிர்த்து, போராட்டம் நடத்திய விவசாயிகள் 7 பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தாலுகா, மேல்மா சிப்காட் அலகு 3 திட்ட விரிவாக்க பணிக்காக மேல்மா, குரும்பூர், நர்மா பள்ளம், தேத்துறை, காட்டுக்குடிசை, நெடுங்கல் உள்ளிட்ட 11 ஊராட்சிகளில் இருந்து 3 ஆயிரித்து 174 ஏக்கர் விவசாய நிலங்களை கைப்பற்ற திமுக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

விவசாயத்தை அழிக்கும் திமுகவின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதியிலுள்ள விவசாயிகள் கடந்த ஜூலை 2-ஆம் தேதி முதல் 125 நாட்களுக்குத் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேல்மா கூட்டுச்சாலையில் பந்தல் அமைத்து அமைதியான முறையில் போராட்டம் நடத்தினர்.

இதைத்தொடர்ந்து, மேல்மா சிப்காட் திட்டத்தை கைவிட வலியுறுத்தி, கடந்த 2-ஆம் தேதி, செய்யாறு சார் ஆட்சியர் அலுவலகம் நோக்கி விவசாயிகள் பேரணியாக சென்றனர். அப்போது, விவசாயிகளை காவல் துறையினர் தடுத்து நிறுத்தியபோது, தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதனை அடுத்து, விவசாயிகள் மீது மேல்மா சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியது, தடையை மீறி பேரணியாக சென்றது, காவல்துறை வாகனங்களை சேதப்படுத்தியது, ஆட்சியர் அலுவலகத்தில் அனுமதியின்றி கூடியது என பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, கடந்த 4-ஆம் தேதி 22 விவசாயிகள் கைது செய்யப்பட்டு, வெவ்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட விவசாயிகளில் 7 பேர் மீது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் பரிந்துரையின் பேரில், கடந்த 15-ஆம் தேதி குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் முருகேஷ் உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து, பாளையங்கோட்டை சிறையில் உள்ள அருள், வேலூர் சிறையில் உள்ள மாசிலாமணி, பாக்கியராஜ், மதுரை சிறையில் உள்ள பச்சையப்பன், திருச்சி சிறையில் உள்ள திருமால், கோவை சிறையில் உள்ள தேவன், கடலூர் சிறையில் உள்ள சோழன் ஆகியோர் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான ஆணையை செய்யாறு காவல்துறையினர் வழங்கி உள்ளனர்.

Tags: dmk failsformer protest
ShareTweetSendShare
Previous Post

விமானப் போக்குவரத்து சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி!

Next Post

ஜெர்சியை மாற்றிக்கொண்ட ரோஹித் மற்றும் டேவிட் பெக்காம் !

Related News

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies