விவசாயத்தை அழிக்கும் திமுக!
Jun 14, 2026, 05:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விவசாயத்தை அழிக்கும் திமுக!

விவசாயிகள் மீது குண்டர் சட்டம்!

Murugesan M by Murugesan M
Nov 17, 2023, 05:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே சிப்காட் விரிவாக்க பணிக்காக, 3,174 ஏக்கர் விவசாய நிலங்களை திமுக அரசு கையகப்படுத்த முயன்றதை எதிர்த்து, போராட்டம் நடத்திய விவசாயிகள் 7 பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தாலுகா, மேல்மா சிப்காட் அலகு 3 திட்ட விரிவாக்க பணிக்காக மேல்மா, குரும்பூர், நர்மா பள்ளம், தேத்துறை, காட்டுக்குடிசை, நெடுங்கல் உள்ளிட்ட 11 ஊராட்சிகளில் இருந்து 3 ஆயிரித்து 174 ஏக்கர் விவசாய நிலங்களை கைப்பற்ற திமுக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

விவசாயத்தை அழிக்கும் திமுகவின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதியிலுள்ள விவசாயிகள் கடந்த ஜூலை 2-ஆம் தேதி முதல் 125 நாட்களுக்குத் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேல்மா கூட்டுச்சாலையில் பந்தல் அமைத்து அமைதியான முறையில் போராட்டம் நடத்தினர்.

இதைத்தொடர்ந்து, மேல்மா சிப்காட் திட்டத்தை கைவிட வலியுறுத்தி, கடந்த 2-ஆம் தேதி, செய்யாறு சார் ஆட்சியர் அலுவலகம் நோக்கி விவசாயிகள் பேரணியாக சென்றனர். அப்போது, விவசாயிகளை காவல் துறையினர் தடுத்து நிறுத்தியபோது, தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதனை அடுத்து, விவசாயிகள் மீது மேல்மா சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியது, தடையை மீறி பேரணியாக சென்றது, காவல்துறை வாகனங்களை சேதப்படுத்தியது, ஆட்சியர் அலுவலகத்தில் அனுமதியின்றி கூடியது என பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, கடந்த 4-ஆம் தேதி 22 விவசாயிகள் கைது செய்யப்பட்டு, வெவ்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட விவசாயிகளில் 7 பேர் மீது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் பரிந்துரையின் பேரில், கடந்த 15-ஆம் தேதி குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் முருகேஷ் உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து, பாளையங்கோட்டை சிறையில் உள்ள அருள், வேலூர் சிறையில் உள்ள மாசிலாமணி, பாக்கியராஜ், மதுரை சிறையில் உள்ள பச்சையப்பன், திருச்சி சிறையில் உள்ள திருமால், கோவை சிறையில் உள்ள தேவன், கடலூர் சிறையில் உள்ள சோழன் ஆகியோர் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான ஆணையை செய்யாறு காவல்துறையினர் வழங்கி உள்ளனர்.

Tags: former protestdmk fails
ShareTweetSendShare
Previous Post

விமானப் போக்குவரத்து சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி!

Next Post

ஜெர்சியை மாற்றிக்கொண்ட ரோஹித் மற்றும் டேவிட் பெக்காம் !

Related News

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

சட்டமன்ற தேர்தல் தோல்வி – அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் இபிஎஸ் ஆலோசனை!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

Load More

அண்மைச் செய்திகள்

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் – இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies