இவரால்தான் இந்தியாவுக்கு வெற்றி கிடைக்கும் - கம்பீர் !
Mar 15, 2026, 03:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இவரால்தான் இந்தியாவுக்கு வெற்றி கிடைக்கும் – கம்பீர் !

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 18, 2023, 11:54 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 

இந்தியா, ஆஸ்திரேலியா விளையாடவிருக்கும் இறுதிப் போட்டியை இந்திய அணிக்கு சாதகமாக மாற்றக் கூடிய ஆற்றல் படைத்தவர் விராட் கோலி, முகமது ஷமி அல்ல வேறு ஒரு வீரர் தான் என அடித்துக் கூறி இருக்கிறார் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர்.

2023 ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நாளை நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே நடைபெறவுள்ளது.

இந்தப் போட்டிக்கு முன்னதாக இந்தியா – ஆஸ்திரேலியா என இரண்டு அணிகளிலும் போட்டியை மாற்றக் கூடிய ஆற்றல் பெற்ற வீரர்கள் யார் என்ற விவாதம் தொலைக்காட்சியில் நடைபெற்றது.

அப்போது பேசிய கவுதம் கம்பீர், இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் தான் போட்டியை மாற்றக் கூடிய வீரர் என கூறி இருக்கிறார்.

அதற்கு அவர் கூறிய முக்கிய காரணம், மிடில் ஓவர்களில் ஆஸ்திரேலியாவின் சுழற் பந்துவீச்சை சமாளிப்பது கடினம். ஆடம் ஜம்பா, கிளென் மேக்ஸ்வெல் என இருவருமே இந்த உலகக்கோப்பைத் தொடரில் மிக சிறப்பாக பந்து வீசி உள்ளனர். மேக்ஸ்வெல் விக்கெட் வீழ்த்தாமல் போனாலும் கூட அவர் ஓவரில் ரன் எடுப்பது கடினமாக இருக்கிறது.

இந்த நிலையில், ஸ்ரேயாஸ் ஐயர் அவர்களின் ஓவர்களில் ரன் குவிப்பார் என உறுதியாக கூறி இருக்கிறார் கம்பீர்.

அரை இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியின் சுழற் பந்துவீச்சை சமாளித்து ஸ்ரேயாஸ் ஐயர் 70 பந்துகளில் சதம் அடித்ததை சுட்டிக் காட்டி அவர் இப்படி கூறி இருக்கிறார்.

இது பற்றி கவுதம் கம்பீர் கூறுகையில், “இந்த உலகக்கோப்பையில் ஸ்ரேயாஸ் ஐயர் தான் மிகப் பெரிய கேம் சேஞ்சர். அவர் அணியில் தன் இடத்துக்காக போராடி, இடம் பெற்றார். அதன் பின் அரை இறுதியில் அவர் 70 பந்துகளில் சதம் அடித்து இருக்கிறார். இறுதிப் போட்டியில் ஆடம் ஜம்பா, மேக்ஸ்வெல் பந்து வீசும் போது, ஸ்ரேயாஸ் ஐயர் தான் முக்கியமானவராக இருப்பார்” என தெரிவித்தார்.

ஸ்ரேயாஸ் ஐயர் இந்த உலகக்கோப்பை தொடரில் முதல் ஆறு போட்டிகளில் பெரிய அளவில் ரன் குவிக்காத போதும், கடைசி மூன்று லீக் போட்டிகளில் 82, 77, 128* ரன்கள் குவித்தார்.

அரை இறுதிப் போட்டியில் அதிரடி ஆட்டம் ஆடிய அவர் 70 பந்துகளில் சதம் அடித்து 105 ரன்கள் குவித்தார். மொத்தம் 10 உலகக்கோப்பைப் போட்டிகளில் 526 ரன் குவித்து இருக்கிறார் ஸ்ரேயாஸ் ஐயர்.

Tags: sportsnews
ShareTweetSendShare
Previous Post

மத்தியப் பிரதேசத்தில் 76%, சத்தீஸ்கரில் 75% வாக்குப்பதிவு!

Next Post

ஜெய்ஷா மீதான அர்ஜுன ரணதுங்க குற்றச்சாட்டு

Related News

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies