இவரால்தான் இந்தியாவுக்கு வெற்றி கிடைக்கும் - கம்பீர் !
Jul 26, 2025, 10:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இவரால்தான் இந்தியாவுக்கு வெற்றி கிடைக்கும் – கம்பீர் !

Web Desk by Web Desk
Nov 18, 2023, 11:54 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 

இந்தியா, ஆஸ்திரேலியா விளையாடவிருக்கும் இறுதிப் போட்டியை இந்திய அணிக்கு சாதகமாக மாற்றக் கூடிய ஆற்றல் படைத்தவர் விராட் கோலி, முகமது ஷமி அல்ல வேறு ஒரு வீரர் தான் என அடித்துக் கூறி இருக்கிறார் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர்.

2023 ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நாளை நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே நடைபெறவுள்ளது.

இந்தப் போட்டிக்கு முன்னதாக இந்தியா – ஆஸ்திரேலியா என இரண்டு அணிகளிலும் போட்டியை மாற்றக் கூடிய ஆற்றல் பெற்ற வீரர்கள் யார் என்ற விவாதம் தொலைக்காட்சியில் நடைபெற்றது.

அப்போது பேசிய கவுதம் கம்பீர், இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் தான் போட்டியை மாற்றக் கூடிய வீரர் என கூறி இருக்கிறார்.

அதற்கு அவர் கூறிய முக்கிய காரணம், மிடில் ஓவர்களில் ஆஸ்திரேலியாவின் சுழற் பந்துவீச்சை சமாளிப்பது கடினம். ஆடம் ஜம்பா, கிளென் மேக்ஸ்வெல் என இருவருமே இந்த உலகக்கோப்பைத் தொடரில் மிக சிறப்பாக பந்து வீசி உள்ளனர். மேக்ஸ்வெல் விக்கெட் வீழ்த்தாமல் போனாலும் கூட அவர் ஓவரில் ரன் எடுப்பது கடினமாக இருக்கிறது.

இந்த நிலையில், ஸ்ரேயாஸ் ஐயர் அவர்களின் ஓவர்களில் ரன் குவிப்பார் என உறுதியாக கூறி இருக்கிறார் கம்பீர்.

அரை இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியின் சுழற் பந்துவீச்சை சமாளித்து ஸ்ரேயாஸ் ஐயர் 70 பந்துகளில் சதம் அடித்ததை சுட்டிக் காட்டி அவர் இப்படி கூறி இருக்கிறார்.

இது பற்றி கவுதம் கம்பீர் கூறுகையில், “இந்த உலகக்கோப்பையில் ஸ்ரேயாஸ் ஐயர் தான் மிகப் பெரிய கேம் சேஞ்சர். அவர் அணியில் தன் இடத்துக்காக போராடி, இடம் பெற்றார். அதன் பின் அரை இறுதியில் அவர் 70 பந்துகளில் சதம் அடித்து இருக்கிறார். இறுதிப் போட்டியில் ஆடம் ஜம்பா, மேக்ஸ்வெல் பந்து வீசும் போது, ஸ்ரேயாஸ் ஐயர் தான் முக்கியமானவராக இருப்பார்” என தெரிவித்தார்.

ஸ்ரேயாஸ் ஐயர் இந்த உலகக்கோப்பை தொடரில் முதல் ஆறு போட்டிகளில் பெரிய அளவில் ரன் குவிக்காத போதும், கடைசி மூன்று லீக் போட்டிகளில் 82, 77, 128* ரன்கள் குவித்தார்.

அரை இறுதிப் போட்டியில் அதிரடி ஆட்டம் ஆடிய அவர் 70 பந்துகளில் சதம் அடித்து 105 ரன்கள் குவித்தார். மொத்தம் 10 உலகக்கோப்பைப் போட்டிகளில் 526 ரன் குவித்து இருக்கிறார் ஸ்ரேயாஸ் ஐயர்.

Tags: sportsnews
ShareTweetSendShare
Previous Post

மத்தியப் பிரதேசத்தில் 76%, சத்தீஸ்கரில் 75% வாக்குப்பதிவு!

Next Post

ஜெய்ஷா மீதான அர்ஜுன ரணதுங்க குற்றச்சாட்டு

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies