ஐ.எஸ். ஐ.எஸ்.தீவிரவாத அமைப்பின் இந்திய அமீருக்கு 10 நாள் போலீஸ் கஸ்டடி!
Oct 26, 2025, 01:19 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஐ.எஸ். ஐ.எஸ்.தீவிரவாத அமைப்பின் இந்திய அமீருக்கு 10 நாள் போலீஸ் கஸ்டடி!

Web Desk by Web Desk
Nov 18, 2023, 12:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சத்தீஸ்கரில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் இந்திய அமீரை 10 நாட்கள் போலீஸில் காவலில் விசாரிக்க தீவிரவாத எதிர்ப்புப் படைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கி இருக்கிறது.

உத்தரப் பிரதேச மாநிலம் அலிகார் பகுதியைச் சேர்ந்தவர் வாஜிஹுதீன் அலிகான். ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதியான இவரை, சத்தீஸ்கர் மாநிலம் துர்க் மாவட்டத்தின் சுபேலா காவல் நிலையப் பகுதிக்கு உட்பட்ட ஸ்மிருதி நகரில் போலீஸார் கைது செய்தனர். விசாரணையில் வாஜிஹுதீன், அலிகர் முஸ்லீம் பல்கலைக்கழக மாணவர்களுடனும், ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்புடனும் தொடர்புடையவர் என்பது தெரியவந்தது.

மேலும், டெல்லி காவல்துறையால் சமீபத்தில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதி முகமது ரிஸ்வானுடன் வாஜிஹுதீனுக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, வாஜிஹுதீனை ஜான்ஸி மாவட்ட தீவிரவாத எதிர்ப்புப் படையினரிடம் போலீஸார் ஒப்படைத்தனர். தொடர்ந்து, அவருக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம், 1967-ன் கீழ் லக்னோ தீவிரவாத எதிர்ப்புப் படை வழக்கு பதிவு செய்தது.

இந்த நிலையில்தான், வாஜிஹுதீன் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் இந்திய அமீராக (தலைவராக) செயல்பட்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும், இவர் டெல்லி மற்றும் புனேவிலுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் இணைந்து பல்வேறு சதிச் செயல்களில் ஈடுபட முயன்றதும அம்பலமாகி இருக்கிறது. குறிப்பாக, காஜியாபாத்திலுள்ள யதி நரசிங்கநந்த் சரஸ்வதி உட்பட பல்வேறு இலக்குகளை தாக்கு குறிவைத்திருப்பதும் தெரியவந்தது.

அதோடு, டெல்லியில் கைது செய்யப்பட்ட புனே பகுதியின் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் நிர்வாகி ஷாநவாஸுடன் இணைந்து வெடிகுண்டு பயிற்சி முகாம்களையும் நடத்தியது வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது. மேலும், இந்தியாவிற்கு எதிராக ஜிஹாத் நடத்துவதற்கு இஸ்லாமிய இராணுவத்தைக் கட்டமைப்பதில் வாஜிஹுதீன் தீவிரம் காட்டி வந்திருக்கிறார். இதற்காக, ஹயா என்கிற பெயரில் இஸ்லாமிய இளைஞர்களை மூளைச்சலவை செய்து தீவிரவாதத்தில் ஈடுபடச் செய்திருக்கிறார்.

இந்த நிலையில்தான், டெல்லியில் ஷாநவாஸ், அர்ஷத் வர்ஷி, ரிஸ்வான் ஆகியோரைத் தொடர்ந்து, வாஜிஹுதீனையும் தீவிரவாத எதிர்ப்புப் படையினர் கைது செய்திருக்கிறார்கள். தற்போது, வாஜிஹுதீனை போலீஸார் 10 நாட்கள் கஸ்டடியில் எடுத்திருக்கிறார்கள். இதில் நடைபெறும் விசாரணையில் வாஜிஹுதீனைப் பற்றியும், இந்தியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் செயல்பாடுகள் பற்றியும் கூடுதல் தகவல்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: uttar pradeshisisterroristAnti Terrorist Squard
ShareTweetSendShare
Previous Post

மேட்டூர் அணை: நீர்மட்டம் 61.51 அடியாக அதிகரிப்பு

Next Post

உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு நடுவர்கள் யார் ?

Related News

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies