ஐ.எஸ். ஐ.எஸ்.தீவிரவாத அமைப்பின் இந்திய அமீருக்கு 10 நாள் போலீஸ் கஸ்டடி!
Jul 24, 2025, 07:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஐ.எஸ். ஐ.எஸ்.தீவிரவாத அமைப்பின் இந்திய அமீருக்கு 10 நாள் போலீஸ் கஸ்டடி!

Web Desk by Web Desk
Nov 18, 2023, 12:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சத்தீஸ்கரில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் இந்திய அமீரை 10 நாட்கள் போலீஸில் காவலில் விசாரிக்க தீவிரவாத எதிர்ப்புப் படைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கி இருக்கிறது.

உத்தரப் பிரதேச மாநிலம் அலிகார் பகுதியைச் சேர்ந்தவர் வாஜிஹுதீன் அலிகான். ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதியான இவரை, சத்தீஸ்கர் மாநிலம் துர்க் மாவட்டத்தின் சுபேலா காவல் நிலையப் பகுதிக்கு உட்பட்ட ஸ்மிருதி நகரில் போலீஸார் கைது செய்தனர். விசாரணையில் வாஜிஹுதீன், அலிகர் முஸ்லீம் பல்கலைக்கழக மாணவர்களுடனும், ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்புடனும் தொடர்புடையவர் என்பது தெரியவந்தது.

மேலும், டெல்லி காவல்துறையால் சமீபத்தில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதி முகமது ரிஸ்வானுடன் வாஜிஹுதீனுக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, வாஜிஹுதீனை ஜான்ஸி மாவட்ட தீவிரவாத எதிர்ப்புப் படையினரிடம் போலீஸார் ஒப்படைத்தனர். தொடர்ந்து, அவருக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம், 1967-ன் கீழ் லக்னோ தீவிரவாத எதிர்ப்புப் படை வழக்கு பதிவு செய்தது.

இந்த நிலையில்தான், வாஜிஹுதீன் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் இந்திய அமீராக (தலைவராக) செயல்பட்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும், இவர் டெல்லி மற்றும் புனேவிலுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் இணைந்து பல்வேறு சதிச் செயல்களில் ஈடுபட முயன்றதும அம்பலமாகி இருக்கிறது. குறிப்பாக, காஜியாபாத்திலுள்ள யதி நரசிங்கநந்த் சரஸ்வதி உட்பட பல்வேறு இலக்குகளை தாக்கு குறிவைத்திருப்பதும் தெரியவந்தது.

அதோடு, டெல்லியில் கைது செய்யப்பட்ட புனே பகுதியின் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் நிர்வாகி ஷாநவாஸுடன் இணைந்து வெடிகுண்டு பயிற்சி முகாம்களையும் நடத்தியது வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது. மேலும், இந்தியாவிற்கு எதிராக ஜிஹாத் நடத்துவதற்கு இஸ்லாமிய இராணுவத்தைக் கட்டமைப்பதில் வாஜிஹுதீன் தீவிரம் காட்டி வந்திருக்கிறார். இதற்காக, ஹயா என்கிற பெயரில் இஸ்லாமிய இளைஞர்களை மூளைச்சலவை செய்து தீவிரவாதத்தில் ஈடுபடச் செய்திருக்கிறார்.

இந்த நிலையில்தான், டெல்லியில் ஷாநவாஸ், அர்ஷத் வர்ஷி, ரிஸ்வான் ஆகியோரைத் தொடர்ந்து, வாஜிஹுதீனையும் தீவிரவாத எதிர்ப்புப் படையினர் கைது செய்திருக்கிறார்கள். தற்போது, வாஜிஹுதீனை போலீஸார் 10 நாட்கள் கஸ்டடியில் எடுத்திருக்கிறார்கள். இதில் நடைபெறும் விசாரணையில் வாஜிஹுதீனைப் பற்றியும், இந்தியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் செயல்பாடுகள் பற்றியும் கூடுதல் தகவல்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: uttar pradeshisisterroristAnti Terrorist Squard
ShareTweetSendShare
Previous Post

மேட்டூர் அணை: நீர்மட்டம் 61.51 அடியாக அதிகரிப்பு

Next Post

உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு நடுவர்கள் யார் ?

Related News

சிறுநீரக அறுவை சிகிச்சை செய்ய இரு மருத்துவமனைகளுக்கு இடைக்கால தடை!

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் காவல்துறை!

அஜித்குமார் கொலை வழக்கு – சிசிடிவி காட்சி தரவுகள் சேகரிப்பு!

இங்கிலாந்தில் பிரதமர் மோடி – உற்சாக வரவேற்பு அளித்த இந்திய வம்சாவளியினர்!

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

Load More

அண்மைச் செய்திகள்

உடல் எடையை குறைக்கும் மருந்து : அதிகரிக்கும் டிமாண்ட் உற்பத்தி தளமாகும் இந்தியா!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

கொரோனா பணியில் உயிரிழப்பு : மருத்துவர் குடும்பத்தை கைவிட்ட தமிழக அரசு!

சினிமாவை விஞ்சிய கொலை – 10 ஆண்டு ரிவென்ஞ்ச் – பழிதீர்த்த இளைஞர்!

TNPSC குரூப் 4 : தமிழ் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தமிழகத்தில் ஆன்மிக சிந்தனையை முடக்கிவிடலாம் என்று திமுக நினைக்கிறதா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

பாரதிய அஞ்சல் ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்!

எம்பி ராபர்ட் புரூஸ் வெற்றி : ஆவணங்களைத் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies