ஐ.எஸ். ஐ.எஸ்.தீவிரவாத அமைப்பின் இந்திய அமீருக்கு 10 நாள் போலீஸ் கஸ்டடி!
Jan 14, 2026, 04:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஐ.எஸ். ஐ.எஸ்.தீவிரவாத அமைப்பின் இந்திய அமீருக்கு 10 நாள் போலீஸ் கஸ்டடி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 18, 2023, 12:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சத்தீஸ்கரில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் இந்திய அமீரை 10 நாட்கள் போலீஸில் காவலில் விசாரிக்க தீவிரவாத எதிர்ப்புப் படைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கி இருக்கிறது.

உத்தரப் பிரதேச மாநிலம் அலிகார் பகுதியைச் சேர்ந்தவர் வாஜிஹுதீன் அலிகான். ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதியான இவரை, சத்தீஸ்கர் மாநிலம் துர்க் மாவட்டத்தின் சுபேலா காவல் நிலையப் பகுதிக்கு உட்பட்ட ஸ்மிருதி நகரில் போலீஸார் கைது செய்தனர். விசாரணையில் வாஜிஹுதீன், அலிகர் முஸ்லீம் பல்கலைக்கழக மாணவர்களுடனும், ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்புடனும் தொடர்புடையவர் என்பது தெரியவந்தது.

மேலும், டெல்லி காவல்துறையால் சமீபத்தில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதி முகமது ரிஸ்வானுடன் வாஜிஹுதீனுக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, வாஜிஹுதீனை ஜான்ஸி மாவட்ட தீவிரவாத எதிர்ப்புப் படையினரிடம் போலீஸார் ஒப்படைத்தனர். தொடர்ந்து, அவருக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம், 1967-ன் கீழ் லக்னோ தீவிரவாத எதிர்ப்புப் படை வழக்கு பதிவு செய்தது.

இந்த நிலையில்தான், வாஜிஹுதீன் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் இந்திய அமீராக (தலைவராக) செயல்பட்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும், இவர் டெல்லி மற்றும் புனேவிலுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் இணைந்து பல்வேறு சதிச் செயல்களில் ஈடுபட முயன்றதும அம்பலமாகி இருக்கிறது. குறிப்பாக, காஜியாபாத்திலுள்ள யதி நரசிங்கநந்த் சரஸ்வதி உட்பட பல்வேறு இலக்குகளை தாக்கு குறிவைத்திருப்பதும் தெரியவந்தது.

அதோடு, டெல்லியில் கைது செய்யப்பட்ட புனே பகுதியின் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் நிர்வாகி ஷாநவாஸுடன் இணைந்து வெடிகுண்டு பயிற்சி முகாம்களையும் நடத்தியது வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது. மேலும், இந்தியாவிற்கு எதிராக ஜிஹாத் நடத்துவதற்கு இஸ்லாமிய இராணுவத்தைக் கட்டமைப்பதில் வாஜிஹுதீன் தீவிரம் காட்டி வந்திருக்கிறார். இதற்காக, ஹயா என்கிற பெயரில் இஸ்லாமிய இளைஞர்களை மூளைச்சலவை செய்து தீவிரவாதத்தில் ஈடுபடச் செய்திருக்கிறார்.

இந்த நிலையில்தான், டெல்லியில் ஷாநவாஸ், அர்ஷத் வர்ஷி, ரிஸ்வான் ஆகியோரைத் தொடர்ந்து, வாஜிஹுதீனையும் தீவிரவாத எதிர்ப்புப் படையினர் கைது செய்திருக்கிறார்கள். தற்போது, வாஜிஹுதீனை போலீஸார் 10 நாட்கள் கஸ்டடியில் எடுத்திருக்கிறார்கள். இதில் நடைபெறும் விசாரணையில் வாஜிஹுதீனைப் பற்றியும், இந்தியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் செயல்பாடுகள் பற்றியும் கூடுதல் தகவல்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: uttar pradeshisisterroristAnti Terrorist Squard
ShareTweetSendShare
Previous Post

மேட்டூர் அணை: நீர்மட்டம் 61.51 அடியாக அதிகரிப்பு

Next Post

உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு நடுவர்கள் யார் ?

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies