13 வது தேசிய சீனியர் ஆடவர் ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டி தொடர் இன்று சென்னையில் தொடங்கியது. இன்று முதல் 28 ஆம் தேதி வரை இப்போட்டிகள் நடைபெறவுள்ளன.
இந்தத் தொடரில் 29 அணிகள் பங்கேற்றன. மேலும் 29 அணிகளும் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இன்றைய நாளில் நான்கு போட்டிகள் நடைபெற்றது. அதில் தமிழக அணி , அசாம் அணியுடன் சென்னையில் இன்று விளையாடியது.
சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானதில் நடைபெற்றப் போட்டியில் தமிழ் நாடு 15-1 என்ற என்ற கோல் கணக்கில் அசாமை வீழ்த்தியது.
தமிழ்நாடு ஹாக்கி யூனிட் சார்பில் சதீஷ் முதல் நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். அவரைத் தொடர்ந்து தனுஷ் 2 வது நிமிடத்திலும், ப்ருத்வி 8 வது நிமிடத்திலும், சுந்தரபாண்டி 10 வது நிமிடத்திலும் அடுத்தடுத்து கோல் அடித்தனர்.
அப்போது ஆசாம் அணி ஒரு கோல் கூட அடிக்காமல் இருந்தது. அப்போது 16 வது நிமிடத்தில் தமிழ் அணிக்கு மீண்டும் ஒரு கோல் கிடைத்தது. ஜே.கவின் கிஷோர் 16 வது நிமிடத்திலும் கார்த்தி 18 வது நிமிடத்திலும், கோல் அடித்தனர்.
பின்பு 22 வது நிமிடத்தில் சுந்தரபாண்டி மீண்டும் ஒரு கோல் அடித்தார். ஜோஷ்வா பெனடிக்ட் வெஸ்லி 23 வது நிமிடத்திலும், தினேஷ் குமார் 25 வது நிமிடத்திலும், அடித்தனர்.
அப்போது மீண்டும் ஜோஷ்வா பெனடிக்ட் வெஸ்லி 40 வது நிமிடத்தில் கோல் அடித்தார். இப்படி தமிழகம் கோல் அடித்துக்கொண்டே போக அசாம் ஒரு கோல் கூட அடிக்காமல் இருந்த சமயத்தில் அசாம் அணியின் ரூப்சந்த் போரோ 42 வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.
அவரைத் தொடர்ந்து தமிழக வீரர் கனகராஜ் செல்வராஜ் 43 வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். பின்பு தினேஷ் குமார் 45 வது நிமிடத்திலும், மீண்டும் கனகராஜ் செல்வராஜ் 49 வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.
இவரைகளை தொடர்ந்து 52 வது நிமிடத்தில் பி.பி.சோமன்னா ஒரு கோல் அடித்தார். தமிழக அணியின் கடைசி கோலாக 59 வது நிமிடத்தில் சுந்தரபாண்டி தனது மூன்றாவது கோலை பதிவு செய்தார்.
இறுதியாக தமிழக ஹாக்கி யூனிட் 15-1 என்ற கோல் கணக்கில் அசாமை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.