திருச்செந்தூர் கோவிலில் கட்டணக் கொள்ளை - எல்.முருகன்
Jul 25, 2025, 06:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருச்செந்தூர் கோவிலில் கட்டணக் கொள்ளை – எல்.முருகன்

இது தான் திராவிட மாடலா? என மத்திய அமைச்சர் கேள்வி

Web Desk by Web Desk
Nov 18, 2023, 03:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 

திருச்செந்தூர் கோவிலில் கட்டணக்கொள்ளை நடப்பதாகவும், அதனை அறநிலையத்துறை அமைச்சசர் மறைக்க முயல்வதாகவும் மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் திருக்கோவிலில் சஷ்டி திருவிழாவை முன்னிட்டு தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை பக்தர்களிடம் ஆயிரம், இரண்டாயிரம், மூவாயிரம் என வசூல் வேட்டை நடத்தி வருகிறது. திருச்செந்தூரில் உலக புகழ் பெற்ற கந்த சஷ்டி திருவிழா நடந்து வரும் வேளையில் லட்சக்கணக்கான பக்தர்கள் அங்கு திரண்டு வரும் நிலையில் தமிழக அரசின் கட்டணக் கொள்ளை பக்தர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பக்தர்களிடம் நேரிடையாக பணத்தை வாங்கிக்கொண்டு முறைகேடாக அதிகாரிகள் சிலர் அனுமதிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளிவந்ததுள்ளது. ஆனால் காவல்துறை, அரசு அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
திருச்செந்தூரில் சஷ்டி திருவிழாவுக்காக உயர்த்தப்பட்டுள்ள கட்டண தரிசனத்தை அனைத்து வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் அமல்படுத்தி வசூல் வேட்டை நடத்தலாம் என்ற எண்ணத்தில் அறநிலையத்துறை இருப்பதாக தெரிகிறது.

இந்து கோவில்களை கொள்ளையடிக்கவும், இந்து பக்தர்களை சுரண்டி பிழைக்கவும் திராவிட மாடல் திமுக அரசு தொடர்ந்து செய்து வரும் திட்டமிட்ட சதியின் ஒரு பகுதியே இது என்பது உறுதியாகிறது.

திருச்செந்தூர் கோவிலில் தரிசன கட்டண விவகாரத்தில் ஏற்கெனவே நீதிமன்றம் தலையிட்டு உத்தரவிட்டுள்ளது. இதனையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து கட்டணக் கொள்ளையில் அறநிலையத்துறை ஈடுபடுவது சட்டவிரோத செயலாகும். ஆனால் அறநிலையத்துறை அமைச்சர் . சேகர் பாபுவோ கட்டணக் கொள்ளையை மறைப்பதிலேயே ஆர்வம் காட்டி வருகிறார்.

திருச்செந்தூரில் எந்தவித கட்டணமும் உயர்த்தப்படவில்லை, ஏற்கெனவே உள்ளது தான் என அவர் அளிக்கும் விளக்கத்தை யாரும் ஏற்க மாட்டார்கள். அவரது திராவிட மாடல் புளுகு மூட்டைகளை மக்கள் நம்ப தயாரில்லை. திருச்செந்தூர் கோவிலில் நடக்கும் கட்டணக் கொள்ளையை மறைப்பதை நிறுத்தி விட்டு அறநிலையத்துறை அமைச்சர் என்ற முறையில் அவர், கட்டணக் கொள்ளையை நிறுத்த முன் வரவேண்டும்.

அதுமட்டுமின்றி திருச்செந்தூர் கோவிலில் அராஜகமான முறையில் முறைகேடுகளில் ஈடுபடுவோர் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தான் தமிழக மக்களின் எண்ணமாக உள்ளது.

தமிழக அரசின் கட்டணக் கொள்ளையை நிறுத்தக் கோரி முருக பக்தர்கள் மற்றும் இந்து முன்னணியினர் திரண்டு அறப்போராட்டம் நடத்தினர். அறவழியில் போராடிய பக்தர்கள் மீது காவல் துறை கடுமையான பலபிரயோகத்தை கையாண்டுள்ளது. இதில் சிலர் படுகாயமடைந்து மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர். மக்களின் கோரிக்கையை ஏற்று கட்டண தரிசனத்தை ரத்து செய்யாமல் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ள செயல் வன்மையாக கண்டிக்க தக்கது.

இந்து விரோதமாக செயல்படும் இந்த திமுக அரசுக்கு வரும் தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். இந்து சமய அறநிலையத் துறை உயர்த்தி உள்ள கட்டணங்களை உடனடியாக திரும்ப பெற வேண்டும். எந்த வகையிலும் சுவாமி தரிசனம் செய்ய கட்டணம் வசூலிக்கக் கூடாது என தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என அமைச்சர் எல்,முருகன் கூறியுள்ளார்.

Tags: lmuruganthiruchendur murugan temple
ShareTweetSendShare
Previous Post

தலித்துகளுக்கு எதிரானது காங்கிரஸ்: பிரதமர் மோடி கடும் தாக்கு!

Next Post

94 மின்சார இரயில்கள் ரத்து!-காரணம் என்ன ?

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

50 பேருடன் மாயமான ரஷ்ய விமானம் : உடைந்த பாகங்கள் மீட்பு – பயணிகள் நிலை என்ன?

மோசடியில் புது ரூட் : போலி தூதரகம் தொடங்கி பணம் சுருட்டிய கில்லாடி!

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.96 கோடி அம்போ… : ரவுடிகளின் ராஜ்ஜியமான ஈரடுக்கு பேருந்து நிலையம்!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

தமிழக பெண்கள் திமுக அரசின் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள் : அண்ணாமலை

கழிவறையில் ரேஷன் கடையின் அரிசி மூட்டைகள் : திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

எடப்பாடி பழனிசாமிக்கு இந்து முன்னணி கண்டனம்!

முதலமைச்சர் ஸ்டாலின் நலமுடன் உள்ளார் – மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை!

இரண்டு குழந்தைகளை கொன்ற அபிராமிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை!

திமுக  ஆட்சியில் உடனடி சிகிச்சை என்பது ஏழை எளியோருக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

மீன்பிடி தடை கால நிவாரணம் உயர்த்தி வழங்கப்படும் – எடப்பாடி பழனிசாமி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies