ஒப்பந்ததாரருக்கு ரூ.18 லட்சம் பாக்கி: பொறியாளர் அலுவலகம் ஜப்தி!
Jan 14, 2026, 09:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஒப்பந்ததாரருக்கு ரூ.18 லட்சம் பாக்கி: பொறியாளர் அலுவலகம் ஜப்தி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 18, 2023, 06:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஒடிஸாவில் ஒப்பந்ததாரருக்கு 18 லட்சம் ரூபாய் செலுத்தாததால் கோட்ட முதன்மை பொறியாளர் அலுவலகத்தை நீதிமன்றம் ஜப்தி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஒடிஸா மாநிலம் புவனேஸ்வர் மாவட்டத்தில் கன்ஸ்ட்ரக்ஷன் இந்தியா நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் கடந்த 42 ஆண்டுகளுக்கு முன்பு, 1981-ம் ஆண்டு புவனேஸ்வரில் நா தலா என்று அழைக்கப்படும் துறைத் தலைவர்களின் 9 மாடிக் கட்டடத்தை கட்டியது. இக்கட்டடம் கட்டிய வகையில், இந்தியா கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்துக்கு புவனேஸ்வர் கோட்ட முதன்மைப் பொறியாளர் துகாபந்து பெஹாரா 6 லட்சம் ரூபாய் பாக்கி வைத்திருந்தார்.

நீண்ட காலமாக இப்பணம் செலுத்தப்படாததால், கன்ஸ்ட்ரக்ஷன் இந்தியாவின் நிர்வாகக் கூட்டாளர்களில் ஒருவரான பிரேந்திர குமார் பதக், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த உயர் நீதிமன்றம் ஒரு மத்தியஸ்தரை நியமித்தது.  அந்த மத்தியஸ்தர், கடந்த 1982-ம் ஆண்டில் கன்ஸ்ட்ரக்ஷன் இந்தியா நிறுவனத்திற்கு மாநில அரசு 6 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.

ஆனால், இதன் பிறகும் பணம் வழங்கப்படவில்லை. எனவே, இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்திற்கு சென்றது. அப்போது, மத்தியஸ்தரின் தீர்ப்பையே உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது. ஆனாலும், இதன் பின்னரும் பணம் செலுத்தப்படவில்லை. இதையடுத்து, நகரிலுள்ள சிவில் நீதிபதி மூத்த பிரிவு நீதிமன்றம், நிலுவையில் உள்ள நிலுவைத் தொகையை கன்ஸ்ட்ரக்ஷன் இந்தியா நிறுவனத்திற்கு வட்டியுடன் செலுத்துமாறு கடந்த ஆண்டு மாநில அரசுக்கு உத்தரவிட்டது.

இது தொடர்பாக அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸும் அனுப்பியது. எனினும், கட்டணம் செலுத்தப்படவில்லை. எனவே, தலைமைப் பொறியாளர் அலுவலகத்தில் உள்ள பொருட்களை ஏலம் விடவும், அந்தப் பணத்தைப் பயன்படுத்தி நிலுவையில் உள்ள நிலுவைத் தொகையை வட்டியுடன் சேர்த்து மொத்தம் சுமார் 18 லட்சம் ரூபாய் செலுத்தும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், 18 லட்சத்தை ஒப்பந்ததாரருக்குச் செலுத்தவில்லை.

இதைத் தொடர்ந்து, புவனேஸ்வர் கோட்ட முதன்மைப் பொறியாளர் துகாபந்து பெஹாராவுக்குச் சொந்தமான தளபாடங்கள் மற்றும் பொருட்களை நீதிமன்ற அதிகாரிகள் ஜப்தி செய்தனர். அதன்படி, எக்ஸிகியூட்டிவ் நாற்காலி, டேபிள், அலுவலக நாற்காலிகள், சோஃபாக்கள், ஸ்டேண்டிங் ஏ.சி., டெல்-ஆல்-இன்-ஒன்-1, ஹெச்பி லேசர்ஜெட் பிரிண்டர், ப்ளைன் டேபிள்கள், எல்.ஜி. ஸ்மார்ட் டி.வி., கீபோர்டுகள், ஆப்டிகல் மவுஸ் உள்ளிட்டவை அலுவலர்கள் ஜப்தி செய்தனர்.

தொடர்ந்து, இப்பொருட்களை ஏலம் விடும்படி புவனேஸ்வர் மூத்த பிரிவு துணை நீதிபதி. எனினும், மாநில அரசு ஒப்பந்ததாரருக்கு ஆன்லைன் முறையில் முழுமையாக பணம் செலுத்தியதால் ஏலம் நிறுத்தப்பட்டது.

Tags: OdissaContractorGoverment officeSeizes
ShareTweetSendShare
Previous Post

சிங்கப்பூரில் ராஜ்நாத் சிங்: இந்திய வீரர்களுக்கு அஞ்சலி!

Next Post

தமிழக மீனவர்கள் 22 பேரை விடுவிக்கக் கோரி மத்திய அமைச்சருக்கு அண்ணாமலை கடிதம்!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies