ஒப்பந்ததாரருக்கு ரூ.18 லட்சம் பாக்கி: பொறியாளர் அலுவலகம் ஜப்தி!
Oct 26, 2025, 06:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஒப்பந்ததாரருக்கு ரூ.18 லட்சம் பாக்கி: பொறியாளர் அலுவலகம் ஜப்தி!

Web Desk by Web Desk
Nov 18, 2023, 06:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஒடிஸாவில் ஒப்பந்ததாரருக்கு 18 லட்சம் ரூபாய் செலுத்தாததால் கோட்ட முதன்மை பொறியாளர் அலுவலகத்தை நீதிமன்றம் ஜப்தி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஒடிஸா மாநிலம் புவனேஸ்வர் மாவட்டத்தில் கன்ஸ்ட்ரக்ஷன் இந்தியா நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் கடந்த 42 ஆண்டுகளுக்கு முன்பு, 1981-ம் ஆண்டு புவனேஸ்வரில் நா தலா என்று அழைக்கப்படும் துறைத் தலைவர்களின் 9 மாடிக் கட்டடத்தை கட்டியது. இக்கட்டடம் கட்டிய வகையில், இந்தியா கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்துக்கு புவனேஸ்வர் கோட்ட முதன்மைப் பொறியாளர் துகாபந்து பெஹாரா 6 லட்சம் ரூபாய் பாக்கி வைத்திருந்தார்.

நீண்ட காலமாக இப்பணம் செலுத்தப்படாததால், கன்ஸ்ட்ரக்ஷன் இந்தியாவின் நிர்வாகக் கூட்டாளர்களில் ஒருவரான பிரேந்திர குமார் பதக், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த உயர் நீதிமன்றம் ஒரு மத்தியஸ்தரை நியமித்தது.  அந்த மத்தியஸ்தர், கடந்த 1982-ம் ஆண்டில் கன்ஸ்ட்ரக்ஷன் இந்தியா நிறுவனத்திற்கு மாநில அரசு 6 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.

ஆனால், இதன் பிறகும் பணம் வழங்கப்படவில்லை. எனவே, இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்திற்கு சென்றது. அப்போது, மத்தியஸ்தரின் தீர்ப்பையே உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது. ஆனாலும், இதன் பின்னரும் பணம் செலுத்தப்படவில்லை. இதையடுத்து, நகரிலுள்ள சிவில் நீதிபதி மூத்த பிரிவு நீதிமன்றம், நிலுவையில் உள்ள நிலுவைத் தொகையை கன்ஸ்ட்ரக்ஷன் இந்தியா நிறுவனத்திற்கு வட்டியுடன் செலுத்துமாறு கடந்த ஆண்டு மாநில அரசுக்கு உத்தரவிட்டது.

இது தொடர்பாக அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸும் அனுப்பியது. எனினும், கட்டணம் செலுத்தப்படவில்லை. எனவே, தலைமைப் பொறியாளர் அலுவலகத்தில் உள்ள பொருட்களை ஏலம் விடவும், அந்தப் பணத்தைப் பயன்படுத்தி நிலுவையில் உள்ள நிலுவைத் தொகையை வட்டியுடன் சேர்த்து மொத்தம் சுமார் 18 லட்சம் ரூபாய் செலுத்தும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், 18 லட்சத்தை ஒப்பந்ததாரருக்குச் செலுத்தவில்லை.

இதைத் தொடர்ந்து, புவனேஸ்வர் கோட்ட முதன்மைப் பொறியாளர் துகாபந்து பெஹாராவுக்குச் சொந்தமான தளபாடங்கள் மற்றும் பொருட்களை நீதிமன்ற அதிகாரிகள் ஜப்தி செய்தனர். அதன்படி, எக்ஸிகியூட்டிவ் நாற்காலி, டேபிள், அலுவலக நாற்காலிகள், சோஃபாக்கள், ஸ்டேண்டிங் ஏ.சி., டெல்-ஆல்-இன்-ஒன்-1, ஹெச்பி லேசர்ஜெட் பிரிண்டர், ப்ளைன் டேபிள்கள், எல்.ஜி. ஸ்மார்ட் டி.வி., கீபோர்டுகள், ஆப்டிகல் மவுஸ் உள்ளிட்டவை அலுவலர்கள் ஜப்தி செய்தனர்.

தொடர்ந்து, இப்பொருட்களை ஏலம் விடும்படி புவனேஸ்வர் மூத்த பிரிவு துணை நீதிபதி. எனினும், மாநில அரசு ஒப்பந்ததாரருக்கு ஆன்லைன் முறையில் முழுமையாக பணம் செலுத்தியதால் ஏலம் நிறுத்தப்பட்டது.

Tags: OdissaContractorGoverment officeSeizes
ShareTweetSendShare
Previous Post

சிங்கப்பூரில் ராஜ்நாத் சிங்: இந்திய வீரர்களுக்கு அஞ்சலி!

Next Post

தமிழக மீனவர்கள் 22 பேரை விடுவிக்கக் கோரி மத்திய அமைச்சருக்கு அண்ணாமலை கடிதம்!

Related News

நாளை உருவாகிறது மோந்தா புயல் – சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

Load More

அண்மைச் செய்திகள்

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies