ஒப்பந்ததாரருக்கு ரூ.18 லட்சம் பாக்கி: பொறியாளர் அலுவலகம் ஜப்தி!
Jul 29, 2026, 02:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஒப்பந்ததாரருக்கு ரூ.18 லட்சம் பாக்கி: பொறியாளர் அலுவலகம் ஜப்தி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 18, 2023, 06:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஒடிஸாவில் ஒப்பந்ததாரருக்கு 18 லட்சம் ரூபாய் செலுத்தாததால் கோட்ட முதன்மை பொறியாளர் அலுவலகத்தை நீதிமன்றம் ஜப்தி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஒடிஸா மாநிலம் புவனேஸ்வர் மாவட்டத்தில் கன்ஸ்ட்ரக்ஷன் இந்தியா நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் கடந்த 42 ஆண்டுகளுக்கு முன்பு, 1981-ம் ஆண்டு புவனேஸ்வரில் நா தலா என்று அழைக்கப்படும் துறைத் தலைவர்களின் 9 மாடிக் கட்டடத்தை கட்டியது. இக்கட்டடம் கட்டிய வகையில், இந்தியா கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்துக்கு புவனேஸ்வர் கோட்ட முதன்மைப் பொறியாளர் துகாபந்து பெஹாரா 6 லட்சம் ரூபாய் பாக்கி வைத்திருந்தார்.

நீண்ட காலமாக இப்பணம் செலுத்தப்படாததால், கன்ஸ்ட்ரக்ஷன் இந்தியாவின் நிர்வாகக் கூட்டாளர்களில் ஒருவரான பிரேந்திர குமார் பதக், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த உயர் நீதிமன்றம் ஒரு மத்தியஸ்தரை நியமித்தது.  அந்த மத்தியஸ்தர், கடந்த 1982-ம் ஆண்டில் கன்ஸ்ட்ரக்ஷன் இந்தியா நிறுவனத்திற்கு மாநில அரசு 6 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.

ஆனால், இதன் பிறகும் பணம் வழங்கப்படவில்லை. எனவே, இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்திற்கு சென்றது. அப்போது, மத்தியஸ்தரின் தீர்ப்பையே உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது. ஆனாலும், இதன் பின்னரும் பணம் செலுத்தப்படவில்லை. இதையடுத்து, நகரிலுள்ள சிவில் நீதிபதி மூத்த பிரிவு நீதிமன்றம், நிலுவையில் உள்ள நிலுவைத் தொகையை கன்ஸ்ட்ரக்ஷன் இந்தியா நிறுவனத்திற்கு வட்டியுடன் செலுத்துமாறு கடந்த ஆண்டு மாநில அரசுக்கு உத்தரவிட்டது.

இது தொடர்பாக அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸும் அனுப்பியது. எனினும், கட்டணம் செலுத்தப்படவில்லை. எனவே, தலைமைப் பொறியாளர் அலுவலகத்தில் உள்ள பொருட்களை ஏலம் விடவும், அந்தப் பணத்தைப் பயன்படுத்தி நிலுவையில் உள்ள நிலுவைத் தொகையை வட்டியுடன் சேர்த்து மொத்தம் சுமார் 18 லட்சம் ரூபாய் செலுத்தும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், 18 லட்சத்தை ஒப்பந்ததாரருக்குச் செலுத்தவில்லை.

இதைத் தொடர்ந்து, புவனேஸ்வர் கோட்ட முதன்மைப் பொறியாளர் துகாபந்து பெஹாராவுக்குச் சொந்தமான தளபாடங்கள் மற்றும் பொருட்களை நீதிமன்ற அதிகாரிகள் ஜப்தி செய்தனர். அதன்படி, எக்ஸிகியூட்டிவ் நாற்காலி, டேபிள், அலுவலக நாற்காலிகள், சோஃபாக்கள், ஸ்டேண்டிங் ஏ.சி., டெல்-ஆல்-இன்-ஒன்-1, ஹெச்பி லேசர்ஜெட் பிரிண்டர், ப்ளைன் டேபிள்கள், எல்.ஜி. ஸ்மார்ட் டி.வி., கீபோர்டுகள், ஆப்டிகல் மவுஸ் உள்ளிட்டவை அலுவலர்கள் ஜப்தி செய்தனர்.

தொடர்ந்து, இப்பொருட்களை ஏலம் விடும்படி புவனேஸ்வர் மூத்த பிரிவு துணை நீதிபதி. எனினும், மாநில அரசு ஒப்பந்ததாரருக்கு ஆன்லைன் முறையில் முழுமையாக பணம் செலுத்தியதால் ஏலம் நிறுத்தப்பட்டது.

Tags: OdissaContractorGoverment officeSeizes
ShareTweetSendShare
Previous Post

சிங்கப்பூரில் ராஜ்நாத் சிங்: இந்திய வீரர்களுக்கு அஞ்சலி!

Next Post

தமிழக மீனவர்கள் 22 பேரை விடுவிக்கக் கோரி மத்திய அமைச்சருக்கு அண்ணாமலை கடிதம்!

Related News

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies