கேரள காங்கிரஸ் எம்.பி. சர்ச்சை பேச்சு!
Jan 14, 2026, 07:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கேரள காங்கிரஸ் எம்.பி. சர்ச்சை பேச்சு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 19, 2023, 03:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு போர்க் குற்றம் புரிந்திருக்கிறார். ஆகவே, எந்த விசாரணையும் நடத்தாமல் அவரை சுட்டுக் கொல்ல வேண்டும் என்று கேரள மாநில காங்கிரஸ் கட்சி எம்.பி. பேசியிருப்பது கடும் சர்ச்சையையும், சலசலப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

இஸ்ரேல் நாட்டின் மீது காஸா நகரின் ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த மாதம் 7-ம் தேதி திடீர் ஏவுகணைத் தாக்குதலை நடத்தினர். இத்தாக்குதலில் 1,400 பேர் உயிரிழந்தனர். இதற்கு இஸ்ரேல் இராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. இத்தாக்குதலில் 11,750 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.

இஸ்ரேல் தாக்குதலில் பொதுமக்கள் உயிரிழப்பதற்கு தனது கண்டனத்தை பதிவு செய்திருக்கும் இந்தியா, தீவிரவாதத்தை ஒடுக்கும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு ஆதரவும் தெரிவித்திருக்கிறது. அதேசமயம், பாதிக்கப்பட்ட பாலஸ்தீன மக்களுக்கு மனிதாபிமான உதவிகளையும் வழங்கி வருகிறது.

ஏற்கெனவே 38 டன் நிவாரணப் பொருட்களுடன் முதல் விமானம் சென்ற நிலையில், இன்று 32 டன் நிவாரணப் பொருட்களுடன் 2-வது விமானம் புறப்பட்டுச் சென்றிருக்கிறது. ஆனால், இந்த விஷயத்தில் காங்கிரஸ் கட்சி பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறது. அதேபோல, கேரள முதல்வர் பினராயி விஜயனும் பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்.

ஆகவே, கேரளாவில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவான பேரணிகள் மற்றும் கூட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. அந்த வகையில், கேரளாவில் சமீபத்தில் நடந்த பேரணியில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் முன்னாள் தலைவர் கலீத் மஷால், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில்தான், ஐக்கிய முஸ்லிம் ஜமாத் சார்பில் பாலஸ்தீன ஆதரவு பேரணி காசர்கோட்டில் நடந்தது. இதில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சியின் காசர்கோடு எம்.பி. ராஜ்மோகன் உன்னிதான், “ஜெனீவா ஒப்பந்தத்தை மீறி போர்க்குற்றத்தில் ஈடுபட்டுள்ளவர்களை என்ன செய்வது என்ற கேள்வி எழலாம். இதற்கு நூரெம்பர்க் மாடலை நாம் பின்பற்ற வேண்டும்.

2-ம் உலகப் போருக்குப் பிறகு நாஜி படையைச் சேர்ந்தவர்களை ஐரோப்பிய நாடான ஜெர்மனியின் நூரெம்பர்க்கில் வைத்து விசாரித்தபோது, எவ்வித விசாரணையும் இல்லாமல் சுட்டுக் கொல்லும் வகையில் தீர்ப்பளித்தனர். அந்த மாடலை தற்போது இஸ்ரேலுக்கு எதிராக செயல்படுத்த வேண்டிய நேரம் வந்து விட்டது.

இந்த உலகின் முன்பு போர்க்குற்றவாளியாக நிற்கும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை, எந்த விசாரணையும் இல்லாமல் உடனடியாக சுட்டுக் கொல்ல வேண்டும்” என்று கூறினார். ராஜ்மோகன் உன்னிதானின் இந்த பேச்சுதான் பெரும் சலசலப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தி இருக்கிறது.

ஒரு நாட்டின் பிரதமரை சுட்டுக் கொல்ல வேண்டும் என்று அவர் பேசியிருப்பது காங்கிரஸ் தலைமைக்கே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags: Israel PMKerala MP
ShareTweetSendShare
Previous Post

தைவான் எல்லையில் வட்டமிடும் சீன போர் விமானங்கள்!

Next Post

காஸாவுக்கு 32 டன் உதவிப் பொருட்கள்: புறப்பட்டது இந்தியாவின் 2-வது விமானம்!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies