காஸாவுக்கு 32 டன் உதவிப் பொருட்கள்: புறப்பட்டது இந்தியாவின் 2-வது விமானம்!
Jul 31, 2026, 04:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காஸாவுக்கு 32 டன் உதவிப் பொருட்கள்: புறப்பட்டது இந்தியாவின் 2-வது விமானம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 19, 2023, 03:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இஸ்ரேல் – ஹமாஸ் போரால் சிக்கித் தவிக்கும் காஸா நகர பொதுமக்களுக்கு 32 டன் உதவிப் பொருட்களுடன் இந்திய விமானப் படையின் C17 விமானம் இன்று எகிப்தில் உள்ள எல்-அரிஷ் விமான நிலையத்திற்கு புறப்பட்டுச் சென்றது.

இஸ்ரேல் நாட்டின் மீது பாலஸ்தீனத்தைச் சேர்ந்த காஸா நகரின் ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த மாதம் 7-ம் தேதி திடீர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். மேலும், இஸ்ரேல் நாட்டுக்குள் ஊடுருவி கண்ணில் பட்டவர்களை எல்லாம் கண்மூடித்தனமாகச் சுட்டுக் கொன்றனர்.

அதோடு, வெளிநாட்டினர் உட்பட 200-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாகவும் பிடித்துச் சென்றனர். இத்தாக்குதலில் இஸ்ரேலில் 1,400 பேர் உயிரிழந்தனர்.

இதையடுத்து, இஸ்ரேல் இராணுவம் பதிலடித் தாக்குதல் நடத்தி வருகிறது. விமானப்படை, கப்பல்படை, காலாட்படை என முப்படைகளையும் ஏவிவிட்டு, மூர்க்கத்தனமாகத் தாக்குதல் நடத்தி வருகிறது.

45-வது நாளை போர் நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில், 750-க்கும் மேற்பட்ட ஹமாஸ் தீவிரவாதிகள் உட்பட காஸா நகரில் 11,750 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். மேலும், ஹமாஸ் தலைமையகம் உட்பட ஏராளமான தீவிரவாத முகாம்களும் அழிக்கப்பட்டிருக்கின்றன.

அதேசமயம், இஸ்ரேல் போரால் காஸா நகரமே மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கிக் கிடப்பதோடு, தண்ணீர் வசதி, மருத்துவ வசதி என எந்த அடிப்படை வசதிகளும் இன்றி மக்கள் பரிதவித்து வருகிறார்கள். எனவே, காஸா நகர வாசிகளுக்கு இந்தியா சார்பில் மனிதாபிமான உதவிகள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், சமீபத்தில் 32 டன் நிவாரணப் பொருட்களுடன் இந்தியாவின் விமானப்படை விமானம் எகிப்து நாட்டுக்குச் சென்றது.

இந்த நிலையில், 32 டன் நிவாரணப் பொருட்களுடன் இந்தியாவின் 2-வது விமானம் எகிப்து நாட்டுக்கு புறப்பட்டுச் சென்றிருக்கிறது. இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “பாலஸ்தீன மக்களுக்கு நாங்கள் தொடர்ந்து மனிதாபிமான உதவிகளை வழங்குகிறோம்.

இந்தியாவின் 2-வது MCC C17 விமானம் 32 டன் உதவிகளை ஏற்றிக் கொண்டு எகிப்தில் உள்ள எல்-அரிஷ் விமான நிலையத்திற்குச் செல்கிறது” என்று தெரிவித்திருக்கிறார்.

அதேபோல, மத்திய வெளிவிவகார அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்ஸி வெளியிட்டிருக்கும் எக்ஸ் பதிவில், “பாலஸ்தீன மக்களுக்கு இந்தியா மனிதாபிமான உதவிகளை அனுப்புகிறது! இந்திய விமானப்படையின் C-17 விமானம் கிட்டத்தட்ட 6.5 டன் மருத்துவ உதவி மற்றும் பாலஸ்தீன மக்களுக்கான 32 டன் பேரிடர் நிவாரணப் பொருட்களை ஏற்றிக்கொண்டு எகிப்தில் உள்ள எல்-அரிஷ் விமான நிலையத்திற்கு புறப்பட்டுச் சென்றது” என்று தெரிவித்திருக்கிறார்.

இந்த நிவாரணப் பொருட்களில், அத்தியாவசிய உயிர்காக்கும் மருந்துகள், அறுவை சிகிச்சைப் பொருட்கள், கூடாரங்கள், தூக்கப் பைகள், தார்ப்பாய்கள், சுகாதாரப் பொருட்கள் மற்றும் நீர் சுத்திகரிப்பு மாத்திரைகள் ஆகியவை அடங்கும்.

Tags: IndiaWARIsraelHamasEmergency Aid
ShareTweetSendShare
Previous Post

கேரள காங்கிரஸ் எம்.பி. சர்ச்சை பேச்சு!

Next Post

விராட்டுக்கு சச்சின் கொடுத்த பரிசு!

Related News

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு

மாணவிக்கு பாலியல் தொல்லை; தனியார் கல்லூரி தாளாளர் கைது

மேகதாது அணை தீர்மானத்தை எதித்த வழக்கு; தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவு

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies