அமைதியாக நடந்து முடிந்த ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம்!
Jan 14, 2026, 11:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமைதியாக நடந்து முடிந்த ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம்!

தமிழகம் முழுவதும் இன்று 55 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 19, 2023, 05:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகம் முழுவதும் இன்று 55 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் அமைதியாக நடந்து முடிந்தது. சென்னையில் மணலி, குரோம்பேட்டை, கொரட்டூர் ஆகிய 3 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது.

ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கம் சார்பில் (ஆர்.எஸ்.எஸ்.), விஜயதசமியை முன்னிட்டு ஆண்டுதோறும் நாடு முழுவதும் அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பேரணி ஆகியவை நடந்து வருகின்றன. அந்த வகையில், தமிழகத்திலும் பல்வேறு சந்தர்ப்பங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடந்திருக்கிறது.

இந்த சூழலில், கடந்தாண்டு தமிழகம் முழுவதும் 55 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்த ஆர்.எஸ்.எஸ். சார்பில் அனுமதி கோரப்பட்டது. ஆனால், தமிழக காவல்துறை அனுமதி மறுத்துவிட்டது. எனவே, ஆர்.எஸ்.எஸ். இயக்கம் உயர் நீதிமன்றத்தை நாடியது.

இதற்கு உயர் நீதிமன்றம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து அனுமதி அளித்தது. எனவே, உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அப்போது, உச்ச நீதிமன்றம் சில வழிகாட்டுதலுடன் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடத்த அனுமதி வழங்கியது. இதன் பிறகு, தமிழகத்தில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்தப்பட்டது.

இந்த நிலையில், இந்த ஆண்டும் விஜயதசமியை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் 55 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்த ஆர்.எஸ்.எஸ். அனுமதி கோரியது. ஆனால், வழக்கம்போல தமிழக அரசு மறுப்புத் தெரிவித்து விட்டது. எனவே. ஆர்.எஸ்.எஸ். சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து, கடந்தாண்டு உச்ச நீதிமன்றம் அளித்த வழிகாட்டுதலின்படி அணிவகுப்பு ஊர்வலம் நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டது. அதன்படி, தமிழகம் முழுவதும் இன்று மாலை 55 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் அமைதியாக நடந்து முடிந்திருக்கிறது.

அந்த வகையில், சென்னையில் மணலி, கொரட்டூர், குரோம்பேட்டை ஆகிய 3 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலமும், பொதுக்கூட்டமும் நடைபெற்றன.

Tags: tamilnaduRSS RALLY55 places
ShareTweetSendShare
Previous Post

ஓடும் இரயில் பெண்ணிடம் அத்துமீறிய போலீஸ் – சிறையில் அடைப்பு!

Next Post

குட்கா – பான்மசாலா விற்பனை செய்யும் திமுக கவுன்சிலர் – மன்னார்குடியில் பரபரப்பு!

Related News

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

Load More

அண்மைச் செய்திகள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies