கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது, பொதுமக்கள் மலர் தூவி வரவேற்பு அளித்தனர்.
தமிழக அரசு அனுமதி மறுத்த நிலையில், உயர் நீதிமன்றத்தின் அனுமதி பெற்று, மாநிலம் முழுவதும் 55 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. அந்த வகையில், கன்னியாகுமரி மேற்கு மாவட்டம் சார்பில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கன்னியாகுமரி மூசாரி சந்திப்பு பகுதியில் இருந்து தொடங்கிய ஊர்வலம் பாலப்பள்ளம் வடக்கு பிடாரை வரை நடைபெற்றது. காவிக் கொடி அணிவகுப்புடன் நடந்த இந்த ஊர்வலத்துக்கு பொதுமக்கள் மலர் தூவி வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து, பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் யோகா, சிலம்பாட்டம் உட்பட தற்காப்புக் கலைகள் செய்து காண்பிக்கப்பட்டது. ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கான ஸ்வயம் சேவகர்களும், பொதுமக்களும் கலந்துகொண்டனர்.