இந்தியாவுக்கு வந்த சரக்குக் கப்பல் கடத்தல்!
Sep 12, 2026, 10:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவுக்கு வந்த சரக்குக் கப்பல் கடத்தல்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 20, 2023, 12:18 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

துருக்கியில் இருந்து 50 பணியாளர்களுடன் இந்தியா நோக்கி வந்த “கேலக்ஸி லீடர்” என்கிற சரக்குக் கப்பல், ஏமன் நாட்டின் செங்கடல் பகுதியில் ஹவுதி கிளர்ச்சியாளர்களால் கடத்தப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. இக்கப்பலில் இந்தியர்கள் யாராவது உள்ளனரா என்பது பற்றிய தகவல் இல்லை.

இஸ்ரேல் நாட்டின் மீது பாலஸ்தீனத்தின் காஸா நகரைச் சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த மாதம் 7-ம் தேதி திடீரென ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். மேலும், இஸ்ரேலுக்குள் ஊடுருவி கண்ணில் பட்டவர்களை எல்லாம் கண்மூடித்தனமாகச் சுட்டுக் கொன்றதோடு, 200-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாகவும் பிடித்துச் சென்றனர்.

இத்தாக்குதலில் வெளிநாட்டினர் உட்பட 1,400 பேர் உயிரிழந்த நிலையில், ஹமாஸ் தீவிரவாதிகள் மீது இஸ்ரேல் இராணுவம் அசுரத் தாக்குதலை நடத்தி வருகிறது. இத்தாக்குதலில் 1,000 ஹமாஸ் தீவிரவாதிகள் உட்பட 12,000 பேர் உயிரிழந்திருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், 25,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கின்றனர்.

இப்போரில் லெபனான் நாட்டின் ஹிஸ்புல்லா தீவிரவாதிகளும், ஏமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சியாளர்களும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர். ஆகவே, இஸ்ரேல் நாட்டின் கப்பல்கள் மற்றும் இஸ்ரேல் கொடி பறக்கக்கூடிய கப்பல்கள் செங்கடல் பகுதியில் சென்றால் கடத்துவோம் என்று ஹவுதி கிளர்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த நிலையில், துருக்கியில் இருந்து 50 பணியாளர்களுடன் இந்தியாவுக்கு வந்த ‘கேலக்ஸி லீடர்’ என்கிற சரக்குக் கப்பலை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நேற்று கடத்திச் சென்றனர். இதை இஸ்ரேலிய இராணுவமும் உறுதி செய்திருக்கிறது.

இது          குறித்து இஸ்ரேலிய இராணுவம் வெளியிட்டிருக்கும் எக்ஸ் பதிவில், “ஏமன் அருகே தெற்கு செங்கடலில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சரக்குக் கப்பல் ஒன்றைக் கடத்தி இருக்கிறார்கள். இது உலகளாவிய விளைவுகளை ஏற்படுத்தும் மிக மோசமான சம்பவம். இக்கப்பலில் இஸ்ரேலியர்கள் உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் பணிபுரிகின்றனர்.

எனினும், அக்கப்பல் இஸ்ரேலுக்குச் சொந்தமானது அல்ல. ஆபிரஹாம் உங்கர் என்னும் இஸ்ரேலிய தொழிலதிபருக்குச் சொந்தமானது” என்று தெரிவித்திருக்கிறது. அதேசமயம், அக்கப்பல் ஒரு பிரிட்டிஷ் நிறுவனத்திற்குச் சொந்தமானது என்றும், ஜப்பானிய நிறுவனத்தால் இயக்கப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, ஈரானின் வழிகாட்டுதலுடன் ஏமனைச் சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்களால் கப்பல் கடத்தப்பட்டிருக்கிறது. இக்கடத்தலை இஸ்ரேல் கடுமையாக கண்டிக்கிறது என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது எக்ஸ் பதிவில் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

Tags: Indiashiphijackhouthi rebels
Share
Tweet
SendShare
Previous Post

குமரி மாவட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம்!

Next Post

விசாகப்பட்டினம் துறைமுகத்தில் தீ விபத்து : 30 படகுகள் சேதம்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies