இந்தியாவுக்கு வந்த சரக்குக் கப்பல் கடத்தல்!
Apr 29, 2026, 08:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவுக்கு வந்த சரக்குக் கப்பல் கடத்தல்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 20, 2023, 12:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

துருக்கியில் இருந்து 50 பணியாளர்களுடன் இந்தியா நோக்கி வந்த “கேலக்ஸி லீடர்” என்கிற சரக்குக் கப்பல், ஏமன் நாட்டின் செங்கடல் பகுதியில் ஹவுதி கிளர்ச்சியாளர்களால் கடத்தப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. இக்கப்பலில் இந்தியர்கள் யாராவது உள்ளனரா என்பது பற்றிய தகவல் இல்லை.

இஸ்ரேல் நாட்டின் மீது பாலஸ்தீனத்தின் காஸா நகரைச் சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த மாதம் 7-ம் தேதி திடீரென ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். மேலும், இஸ்ரேலுக்குள் ஊடுருவி கண்ணில் பட்டவர்களை எல்லாம் கண்மூடித்தனமாகச் சுட்டுக் கொன்றதோடு, 200-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாகவும் பிடித்துச் சென்றனர்.

இத்தாக்குதலில் வெளிநாட்டினர் உட்பட 1,400 பேர் உயிரிழந்த நிலையில், ஹமாஸ் தீவிரவாதிகள் மீது இஸ்ரேல் இராணுவம் அசுரத் தாக்குதலை நடத்தி வருகிறது. இத்தாக்குதலில் 1,000 ஹமாஸ் தீவிரவாதிகள் உட்பட 12,000 பேர் உயிரிழந்திருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், 25,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கின்றனர்.

இப்போரில் லெபனான் நாட்டின் ஹிஸ்புல்லா தீவிரவாதிகளும், ஏமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சியாளர்களும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர். ஆகவே, இஸ்ரேல் நாட்டின் கப்பல்கள் மற்றும் இஸ்ரேல் கொடி பறக்கக்கூடிய கப்பல்கள் செங்கடல் பகுதியில் சென்றால் கடத்துவோம் என்று ஹவுதி கிளர்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த நிலையில், துருக்கியில் இருந்து 50 பணியாளர்களுடன் இந்தியாவுக்கு வந்த ‘கேலக்ஸி லீடர்’ என்கிற சரக்குக் கப்பலை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நேற்று கடத்திச் சென்றனர். இதை இஸ்ரேலிய இராணுவமும் உறுதி செய்திருக்கிறது.

இது          குறித்து இஸ்ரேலிய இராணுவம் வெளியிட்டிருக்கும் எக்ஸ் பதிவில், “ஏமன் அருகே தெற்கு செங்கடலில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சரக்குக் கப்பல் ஒன்றைக் கடத்தி இருக்கிறார்கள். இது உலகளாவிய விளைவுகளை ஏற்படுத்தும் மிக மோசமான சம்பவம். இக்கப்பலில் இஸ்ரேலியர்கள் உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் பணிபுரிகின்றனர்.

எனினும், அக்கப்பல் இஸ்ரேலுக்குச் சொந்தமானது அல்ல. ஆபிரஹாம் உங்கர் என்னும் இஸ்ரேலிய தொழிலதிபருக்குச் சொந்தமானது” என்று தெரிவித்திருக்கிறது. அதேசமயம், அக்கப்பல் ஒரு பிரிட்டிஷ் நிறுவனத்திற்குச் சொந்தமானது என்றும், ஜப்பானிய நிறுவனத்தால் இயக்கப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, ஈரானின் வழிகாட்டுதலுடன் ஏமனைச் சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்களால் கப்பல் கடத்தப்பட்டிருக்கிறது. இக்கடத்தலை இஸ்ரேல் கடுமையாக கண்டிக்கிறது என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது எக்ஸ் பதிவில் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

Tags: Indiashiphijackhouthi rebels
ShareTweetSendShare
Previous Post

குமரி மாவட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம்!

Next Post

விசாகப்பட்டினம் துறைமுகத்தில் தீ விபத்து : 30 படகுகள் சேதம்!

Related News

தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும் – கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

Load More

அண்மைச் செய்திகள்

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies