மணிப்பூர் வான்வெளியில் பறந்த மர்ம பொருளால் பரபரப்பு: ஏலியன்களா என மக்கள் பீதி!
Mar 15, 2026, 01:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மணிப்பூர் வான்வெளியில் பறந்த மர்ம பொருளால் பரபரப்பு: ஏலியன்களா என மக்கள் பீதி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 20, 2023, 03:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மணிப்பூர் தலைநகர் இம்பாலில் விமான நிலையத்துக்கு மேலே பறந்த மர்மப் பொருளால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக வான்வெளி மூடப்பட்டதால் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது.

உலகின் பல்வேறு நாடுகளில் வானில் மர்ம பொருள் பறந்ததாக ஏராளமான செய்திகள் வந்திருக்கின்றன. அந்த வகையில், இந்தியாவின் பல்வேறு இடங்களிலும் இதுபோன்ற மர்ம பொருள் பறந்ததாக தகவல்கள் உண்டு. இவை தட்டு வடிவில் இருப்பதாகவும், இது வேற்று கிரக வாசிகளான ஏலியன்களாக இருக்கலாம் என்கிற செய்திகளும் உலா வருகின்றன. எனவே, இந்த பறக்கும் தட்டை வைத்தும், ஏலியன்களை வைத்தும் ஏராளமான திரைப்படங்களும் எடுக்கப்பட்டன.

இந்த நிலையில், மணிப்பூர் மாநிலத்தின் தலைநகர் இம்பாலில் மர்மப் பொருள் பறந்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது, நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் இம்பால் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறைக்கு மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் கட்டுப்பாட்டு அறையிலிருந்து ஒரு அவசர அழைப்பு வந்திருக்கிறது. அப்போது, விமான கட்டுப்பாட்டு அறைக்கு மேலே அடையாளம் தெரியாத மர்ம, பறக்கும் பொருள் இருப்பதாகப் பாதுகாப்புப் படையினர் தெரிவித்திருக்கின்றனர்.

விமான கட்டுப்பாட்டு அறையின் கோபுரத்தின் மொட்டை மாடியில் இருந்து பார்த்தாலே, அந்த மர்மப் பொருள் தெரிந்திருக்கிறது. இதை விமான நிறுவன ஊழியர்கள், பாதுகாப்புப் படையினர் மற்றும் பொதுமக்கள் என பலரும் பார்த்திருக்கிறார்கள்.

அந்த மர்மப் பொருள் வெள்ளை நிறத்தில் தட்டு வடிவில் இருந்திருக்கிறது. இது டெர்மினல் கட்டடத்தின் மேல் பறந்து, விமான கட்டுப்பாட்டு அறையின் கோபுரத்திற்கு மேலே தெற்கு நோக்கி நகர்ந்து சிறிது நேரம் அங்கேயே நின்றிருக்கிறது.

இதன் பிறகு, விமான ஓடுபாதையில் தென்மேற்கு நோக்கி நகர்ந்திருக்கிறது. அந்த மர்ம பொருள் விமான ஓடுபாதைக்கு மேலே இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. எனவே, உடனடியாக வான்வெளி மூடப்பட்டது.

இதனால், இம்பால் விமான நிலையத்திலிருந்து விமானங்கள் புறப்படவும், தரை இறங்கவும் அனுமதிக்கப்படவில்லை. அந்த வகையில், கொல்கத்தாவில் இருந்து 173 பயணிகளுடன் இம்பாலுக்கு வந்த இண்டிகோ ஏ320 விமானம் தரையிறங்க அனுமதி தரப்படவில்லை.

இதையடுத்து, அந்த விமானம் சுமார் 20 நிமிடங்கள் வானத்திலேயே வட்டமடித்துக் கொண்டிருந்தது. பின்னர், பிற்பகல் 3 மணிக்கு அந்த விமானம் அஸ்ஸாம் மாநிலம் கௌஹாத்திக்கு திருப்பி விடப்பட்டது.

அதேபோல, டெல்லியில் இருந்து 193 பயணிகளுடன் இம்பாலுக்கு வந்த மற்றொரு இண்டிகோ விமானமும் கொல்கத்தாவுக்கு திரும்பி விடப்பட்டது. இதனால், சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக இம்பால் விமான நிலையத்தில் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதனிடையே, மாலை 4.05 மணியளவில் அந்த மர்மப் பொருள் அப்படியே காணாமல் போய்விட்டது. இதன் பிறகு, ஏதாவது அச்சுறுத்தல் இருக்கிறதா என்பது குறித்து இம்பால் வான்வெளியை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

மாலை 5.35 மணி வரை நடந்த சோதனையில் எந்தவொரு அச்சுறுத்தல்களும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட பிறகு, இம்பால் விமான நிலையத்தில் விமான சேவையை மீண்டும் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டது.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், பறக்கும் தட்டில் வந்தது ஏலியன்களா என்று பொதுமக்கள் பீதியடைந்திருக்கின்றனர்.

Tags: manipurImphal airportunidentified flying object
ShareTweetSendShare
Previous Post

டெல்லியில் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டன!

Next Post

உலகக்கோப்பை மீது கால் வைத்து போஸ் கொடுத்த ஆஸ்திரேலிய வீரர்!

Related News

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies