மணிப்பூர் வான்வெளியில் பறந்த மர்ம பொருளால் பரபரப்பு: ஏலியன்களா என மக்கள் பீதி!
Sep 12, 2026, 08:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மணிப்பூர் வான்வெளியில் பறந்த மர்ம பொருளால் பரபரப்பு: ஏலியன்களா என மக்கள் பீதி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 20, 2023, 03:57 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மணிப்பூர் தலைநகர் இம்பாலில் விமான நிலையத்துக்கு மேலே பறந்த மர்மப் பொருளால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக வான்வெளி மூடப்பட்டதால் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது.

உலகின் பல்வேறு நாடுகளில் வானில் மர்ம பொருள் பறந்ததாக ஏராளமான செய்திகள் வந்திருக்கின்றன. அந்த வகையில், இந்தியாவின் பல்வேறு இடங்களிலும் இதுபோன்ற மர்ம பொருள் பறந்ததாக தகவல்கள் உண்டு. இவை தட்டு வடிவில் இருப்பதாகவும், இது வேற்று கிரக வாசிகளான ஏலியன்களாக இருக்கலாம் என்கிற செய்திகளும் உலா வருகின்றன. எனவே, இந்த பறக்கும் தட்டை வைத்தும், ஏலியன்களை வைத்தும் ஏராளமான திரைப்படங்களும் எடுக்கப்பட்டன.

இந்த நிலையில், மணிப்பூர் மாநிலத்தின் தலைநகர் இம்பாலில் மர்மப் பொருள் பறந்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது, நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் இம்பால் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறைக்கு மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் கட்டுப்பாட்டு அறையிலிருந்து ஒரு அவசர அழைப்பு வந்திருக்கிறது. அப்போது, விமான கட்டுப்பாட்டு அறைக்கு மேலே அடையாளம் தெரியாத மர்ம, பறக்கும் பொருள் இருப்பதாகப் பாதுகாப்புப் படையினர் தெரிவித்திருக்கின்றனர்.

விமான கட்டுப்பாட்டு அறையின் கோபுரத்தின் மொட்டை மாடியில் இருந்து பார்த்தாலே, அந்த மர்மப் பொருள் தெரிந்திருக்கிறது. இதை விமான நிறுவன ஊழியர்கள், பாதுகாப்புப் படையினர் மற்றும் பொதுமக்கள் என பலரும் பார்த்திருக்கிறார்கள்.

அந்த மர்மப் பொருள் வெள்ளை நிறத்தில் தட்டு வடிவில் இருந்திருக்கிறது. இது டெர்மினல் கட்டடத்தின் மேல் பறந்து, விமான கட்டுப்பாட்டு அறையின் கோபுரத்திற்கு மேலே தெற்கு நோக்கி நகர்ந்து சிறிது நேரம் அங்கேயே நின்றிருக்கிறது.

இதன் பிறகு, விமான ஓடுபாதையில் தென்மேற்கு நோக்கி நகர்ந்திருக்கிறது. அந்த மர்ம பொருள் விமான ஓடுபாதைக்கு மேலே இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. எனவே, உடனடியாக வான்வெளி மூடப்பட்டது.

இதனால், இம்பால் விமான நிலையத்திலிருந்து விமானங்கள் புறப்படவும், தரை இறங்கவும் அனுமதிக்கப்படவில்லை. அந்த வகையில், கொல்கத்தாவில் இருந்து 173 பயணிகளுடன் இம்பாலுக்கு வந்த இண்டிகோ ஏ320 விமானம் தரையிறங்க அனுமதி தரப்படவில்லை.

இதையடுத்து, அந்த விமானம் சுமார் 20 நிமிடங்கள் வானத்திலேயே வட்டமடித்துக் கொண்டிருந்தது. பின்னர், பிற்பகல் 3 மணிக்கு அந்த விமானம் அஸ்ஸாம் மாநிலம் கௌஹாத்திக்கு திருப்பி விடப்பட்டது.

அதேபோல, டெல்லியில் இருந்து 193 பயணிகளுடன் இம்பாலுக்கு வந்த மற்றொரு இண்டிகோ விமானமும் கொல்கத்தாவுக்கு திரும்பி விடப்பட்டது. இதனால், சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக இம்பால் விமான நிலையத்தில் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதனிடையே, மாலை 4.05 மணியளவில் அந்த மர்மப் பொருள் அப்படியே காணாமல் போய்விட்டது. இதன் பிறகு, ஏதாவது அச்சுறுத்தல் இருக்கிறதா என்பது குறித்து இம்பால் வான்வெளியை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

மாலை 5.35 மணி வரை நடந்த சோதனையில் எந்தவொரு அச்சுறுத்தல்களும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட பிறகு, இம்பால் விமான நிலையத்தில் விமான சேவையை மீண்டும் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டது.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், பறக்கும் தட்டில் வந்தது ஏலியன்களா என்று பொதுமக்கள் பீதியடைந்திருக்கின்றனர்.

Tags: manipurImphal airportunidentified flying object
Share
Tweet
SendShare
Previous Post

டெல்லியில் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டன!

Next Post

உலகக்கோப்பை மீது கால் வைத்து போஸ் கொடுத்த ஆஸ்திரேலிய வீரர்!

Related News

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies