ஆர்.எஸ்.எஸ் பேரணி : தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Jul 26, 2025, 12:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆர்.எஸ்.எஸ் பேரணி : தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Web Desk by Web Desk
Nov 20, 2023, 07:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

எதிர்காலத்தில் நீதிமன்றத்தின் தலையீடு இல்லாமல் ஆர்.எஸ்.எஸ் பேரணி ஊர்வலத்திற்கு அனுமதிப்பது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கம் சார்பில் (ஆர்.எஸ்.எஸ்.), விஜயதசமியை முன்னிட்டு ஆண்டுதோறும் நாடு முழுவதும் அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பேரணி நடந்து வருகின்றன. அந்த வகையில், தமிழகத்திலும் பல்வேறு சந்தர்ப்பங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடந்திருக்கிறது.

இந்த ஆண்டும் விஜயதசமியை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் 55 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்த ஆர்.எஸ்.எஸ். அனுமதி கோரியது. ஆனால், தமிழக அரசு மறுப்புத் தெரிவித்து விட்டது. எனவே. ஆர்.எஸ்.எஸ். சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து, கடந்தாண்டு உச்ச நீதிமன்றம் அளித்த வழிகாட்டுதலின்படி அணிவகுப்பு ஊர்வலம் நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டது. அதன்படி, தமிழகம் முழுவதும் 55 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் அமைதியாக நடந்து முடிந்தது.

இந்நிலையில் எதிர்காலத்தில் நீதிமன்றத்தின் தலையீடு இல்லாமல் ஆர்எஸ்எஸ் பேரணி ஊர்வலத்திற்கு அனுமதிப்பது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

நீதிபதிகள் சூர்ய காந்த், நீதிபதி தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், ஆர்எஸ்எஸ்ஸிடமிருந்து ஆட்சேபனைகள், பரிந்துரைகளை கேட்ட பின்னரே உயர் நீதிமன்றம் அத்தகைய திட்டத்தை பரிசீலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

இந்த மாத தொடக்கத்தில், நவம்பர் 19 அல்லது 26 ஆம் தேதிகளில் மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் (ஆர்.எஸ்.எஸ் ) அணிவகுப்பு நடத்த அனுமதிப்பதாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு ஒப்புக்கொண்டது.

அதன்படி, ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தெரிவித்துள்ள வழித்தடங்களை மூன்று நாட்களுக்குள் மாநில அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், நவம்பர் 15 ஆம் தேதிக்குள் பாதைகள் குறித்து அரசு முடிவெடுக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.

இந்நிலையில் இன்று தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், நவம்பர் 19-ஆம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த அனுமதி வழங்கப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு ஊர்வலம் நடத்த அனுமதி வழங்கியது தொடர்பாக, ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவுகளை தமிழக அரசு நிறைவேற்றத் தவறியதாக, நவம்பர் 1ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் விமர்சித்தது.

மாநிலத்தில் உள்ள காவல்துறை அதிகாரிகளுக்கு அனுமதி வழங்குமாறு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தும், ஊர்வலம் நடத்த அரசு அனுமதி மறுத்ததையடுத்து நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இன்று, பிரதிவாதிக்கு (ஆர்.எஸ்.எஸ் ) நிவாரணம் கிடைத்துள்ளதால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என்று கபில் சிபல் வலியுறுத்தியுள்ளார். ஆனால் இதற்கு மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ண குமார் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்,

நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடிக்க மறுத்ததோடு, நீதிமன்ற அவமதிப்பு நீதிமன்றத்தின் முன் முன்மொழிவை சமர்ப்பிக்குமாறு தமிழக அரசை நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.

எதிர்காலத்தில் நீதிமன்றத்தின் தலையீடு இல்லாமல் ஆர்எஸ்எஸ் பேரணி ஊர்வலத்திற்கு அனுமதிப்பது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

Tags: supreme courtRSS RALLY
ShareTweetSendShare
Previous Post

உலக அழகியாக ஷென்னிஸ் பலாசியஸ் தேர்வு!

Next Post

பழங்குடி சமூக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது ஒரு முக்கியமான பணி! – குடியரசுத் தலைவர்

Related News

அமெரிக்கா : சூறைக்காற்றில் உருண்டோடிய கேம்பர் வாகனம்!

பிரேசில் : கார்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து!

போலந்து முதல்முறையாக ‘ஏர் பைக்கை’ உருவாக்கிய ஸ்டார்ட் அப் நிறுவனம்!

கன்னியாகுமரி : கூடுதல் பேருந்துகள் இயக்க கோரி பாஜக எம்.எல்.ஏ மனு!

திமுக ஆட்சியில் காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை – அண்ணாமலை

தூத்துக்குடியில் ரூ.4,500 கோடி திட்டங்களை அர்ப்பணிக்கும் பிரதமர் மோடி!

Load More

அண்மைச் செய்திகள்

பிரான்ஸ் அதிபருக்கு அமெரிக்கா கண்டனம்!

ராமநாதபுரம் : டிராக்டர் கவிழ்ந்து விபத்து – 3 பெண்கள் பலி!

சேலம் : சாமி சிலைகளை எடுத்து சென்ற விஏஓ மீது நடவடிக்கை எடுத்திடுக – முதியவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்!

சென்னை : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு கொடுக்க நீண்ட நேரம் காத்திருப்பு!

ராணுவ வீரர்களின்  துணிச்சலுக்கும், அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கும் வணக்கம் செலுத்துவோம் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

டெல்லி : யமுனை நதியில் நீர்வரத்து அதிகரிப்பு!

தாய்நாட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் மீட்டெடுத்த மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துவோம் – அண்ணாமலை

சென்னை : இறுதி ஊர்வலத்தின் போது நாட்டு வெடி வெடித்து மாணவி படுகாயம்!

திமுகவுக்கு எதிராக போராட்டம் நடத்தினால் போலீசார் அனுமதி வழங்குவதில்லை : இந்து முன்னணியினர் குற்றச்சாட்டு!

நாட்டை காக்க வீர மரணமடைந்த ராணுவ வீரர்களை நினைவுகூர்வோம் – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies