ஐ.ஆர்.பி. வீரர் உட்பட 2 பேர் சுட்டுக்கொலை: மணிப்பூரில் மீண்டும் பதற்றம்!
Mar 15, 2026, 08:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஐ.ஆர்.பி. வீரர் உட்பட 2 பேர் சுட்டுக்கொலை: மணிப்பூரில் மீண்டும் பதற்றம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 21, 2023, 12:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மணிப்பூர் மாநிலம் காங்போக்பி மாவட்டத்தில் இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதலில் ஐ.ஆர்.பி. வீரர் உட்பட 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 2 பேரும் கூகி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அச்சமூகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மணிப்பூர் மாநிலத்தில் இட ஒதுக்கீடு தொடர்பாக கூகி மற்றும் மெயிட்டி சமூகத்தினருக்கு இடையே கடந்த மே மாதம் 3-ம் தேதி முதல் மோதல் போக்கு இருந்து வருகிறது.

கடந்த நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடருக்கு முன்னதாக, கூகி சமூகத்தைச் சேர்ந்த 2 பெண்களுக்கு எதிரான நடைபெற்ற வன்முறை வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதன் தொடர்ச்சியாக அம்மாநிலத்தில் மிகப்பெரிய கலவரம் வெடித்தது. இதில், ஏராளமானோர் கொல்லப்பட்டனர். தொடர்ந்து, மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட நடவடிக்கையின் காரணமாக மாநிலத்தில் அமைதி திரும்பியது.

எனினும், அவ்வப்போது சிறு சிறு சச்சரவுகள் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன. கடந்த ஆகஸ்ட் மாதம் கூகி சமூகத்தைச் சேர்ந்த 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில் நேற்று இரு பிரிவினருக்கு இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் இந்திய ரிசர்வ் பட்டாலியன் (ஐ.ஆர்.பி.) வீரரும், அவரது டிரைவரும் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

ஹராதெல் மற்றும் கோப்ஷா கிராமங்களுக்கு இடையே இந்த மோதல் சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. இச்சம்பவத்தில் உயிரிழந்த இருவருமே கூகி சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

ஆகவே,  காங்போக்பி மாவட்டத்தைத் தளமாகக் கொண்ட பழங்குடியினர் ஒற்றுமை குழு, தங்களது எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் காங்போக்பி மாவட்டம் முழுவதும் உடனடி கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டது.

அப்போது, மணிப்பூரில் பழங்குடியின சமூகங்களுக்கு தனி நிர்வாக அமைப்பை நிறுவ வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, அப்பகுதியில் கூடுதல் படைகள் குவிக்கப்பட்டு வன்முறையில் ஈடுபட்டவர்களை கைது செய்ய தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

Tags: manipurviolence2 killed
ShareTweetSendShare
Previous Post

விவசாயிகளுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்த அரசு தரப்பு வழக்கறிஞர்!

Next Post

கடைசி தங்கப்பதக்கம் : முதலும் இவரே முடிவும் இவரே !!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies