ஐ.ஆர்.பி. வீரர் உட்பட 2 பேர் சுட்டுக்கொலை: மணிப்பூரில் மீண்டும் பதற்றம்!
Aug 25, 2025, 08:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஐ.ஆர்.பி. வீரர் உட்பட 2 பேர் சுட்டுக்கொலை: மணிப்பூரில் மீண்டும் பதற்றம்!

Web Desk by Web Desk
Nov 21, 2023, 12:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மணிப்பூர் மாநிலம் காங்போக்பி மாவட்டத்தில் இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதலில் ஐ.ஆர்.பி. வீரர் உட்பட 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 2 பேரும் கூகி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அச்சமூகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மணிப்பூர் மாநிலத்தில் இட ஒதுக்கீடு தொடர்பாக கூகி மற்றும் மெயிட்டி சமூகத்தினருக்கு இடையே கடந்த மே மாதம் 3-ம் தேதி முதல் மோதல் போக்கு இருந்து வருகிறது.

கடந்த நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடருக்கு முன்னதாக, கூகி சமூகத்தைச் சேர்ந்த 2 பெண்களுக்கு எதிரான நடைபெற்ற வன்முறை வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதன் தொடர்ச்சியாக அம்மாநிலத்தில் மிகப்பெரிய கலவரம் வெடித்தது. இதில், ஏராளமானோர் கொல்லப்பட்டனர். தொடர்ந்து, மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட நடவடிக்கையின் காரணமாக மாநிலத்தில் அமைதி திரும்பியது.

எனினும், அவ்வப்போது சிறு சிறு சச்சரவுகள் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன. கடந்த ஆகஸ்ட் மாதம் கூகி சமூகத்தைச் சேர்ந்த 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில் நேற்று இரு பிரிவினருக்கு இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் இந்திய ரிசர்வ் பட்டாலியன் (ஐ.ஆர்.பி.) வீரரும், அவரது டிரைவரும் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

ஹராதெல் மற்றும் கோப்ஷா கிராமங்களுக்கு இடையே இந்த மோதல் சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. இச்சம்பவத்தில் உயிரிழந்த இருவருமே கூகி சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

ஆகவே,  காங்போக்பி மாவட்டத்தைத் தளமாகக் கொண்ட பழங்குடியினர் ஒற்றுமை குழு, தங்களது எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் காங்போக்பி மாவட்டம் முழுவதும் உடனடி கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டது.

அப்போது, மணிப்பூரில் பழங்குடியின சமூகங்களுக்கு தனி நிர்வாக அமைப்பை நிறுவ வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, அப்பகுதியில் கூடுதல் படைகள் குவிக்கப்பட்டு வன்முறையில் ஈடுபட்டவர்களை கைது செய்ய தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

Tags: manipurviolence2 killed
ShareTweetSendShare
Previous Post

விவசாயிகளுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்த அரசு தரப்பு வழக்கறிஞர்!

Next Post

கடைசி தங்கப்பதக்கம் : முதலும் இவரே முடிவும் இவரே !!

Related News

ஸ்பெயினில் அதிக வெப்பம் காரணமாக தீப்பற்றி எரிந்த சோலார் பேனல்கள்!

உ.பி.யில் ஸ்பைடர் மேன் வேடம் அணிந்து எல்லை மீறிய இளைஞர்!

சிம்லாவில் ரூபாய் நோட்டுகளை வீசி எறிந்த நபர் – போலீஸ் விசாரணை!

ஜம்மு காஷ்மீரில் கொட்டித் தீர்த்த மழை – சாகர் காட் ஆற்றுப்பாலம் சேதம்!

ராஜஸ்தானில் கனமழையை தொடர்ந்து உருவான புதிய நீர்வீழ்ச்சி!

திருப்பூரில் 100 வயது பாட்டியின் பிறந்த நாள் – 97 பேரன், பேத்திகளுடன் களைகட்டிய கொண்டாட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

முதல்முறையாக கடன் பெறுவோருக்கு சிபில் ஸ்கோர் கட்டாயமில்லை – நிதியமைச்சகம் விளக்கம்!

உள்நாட்டு தயாரிப்புகளை வாங்கி பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டும் – பிரதமர் மோடி

ஜம்மு காஷ்மீர், ஹரியானா, உத்தராகண்ட் மாநிலங்களில் தொடர் மழை – இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

மதுரை சுற்றுவட்டார பகுதிகளில் கொட்டி தீர்த்த மழை!

வடமேற்கு வங்கக்கடலில் இன்று உருவாகுகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி – வானிலை ஆய்வு மையம் தகவல்!

நோயாளி இல்லாமல் இபிஎஸ் கூட்டத்திற்குள் சென்ற ஆம்புலன்ஸ் – சரமாரி கேள்வி கேட்ட அதிமுகவினர்!

குறைந்த விலைக்கு கிடைக்கும் அனைத்து நாடுகளிடம் இருந்தும் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வோம் – இந்தியா திட்டவட்டம்!

அமெரிக்காவுக்கான அஞ்சல் சேவை இன்று முதல் தற்காலிகமாக நிறுத்தம் – மத்திய அரசு அறிவிப்பு!

மின்வாரிய அலட்சியத்தால் பறிபோன உயிர் : தாயை இழந்து தவிக்கும் குழந்தைகள்!

திருத்தணி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிறுத்தம் – நோயாளிகள் அவதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies