விவசாயிகளுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்த அரசு தரப்பு வழக்கறிஞர்!
Jul 31, 2026, 01:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விவசாயிகளுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்த அரசு தரப்பு வழக்கறிஞர்!

Murugesan M by Murugesan M
Nov 21, 2023, 12:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருவண்ணாமலை மாவட்டத்தில் சிப்காட் விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது போடப்பட்ட குண்டர் சட்டம் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், விவசாயிகளுக்கு ஜாமீன் வழங்க அரசு தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் சிப்காட் விரிவாக்கத்துக்கு நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததற்காக கைது செய்யப்பட்ட 19 விவசாயிகள் மற்றும் ஒரு சமூக ஆர்வலர் ஆகியோருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செய்யாறு அருகே சிப்காட் தொழிற்பேட்டை 3-வது யூனிட் விரிவாக்கத்துக்காக, மேல்மா உட்பட 11 கிராமங்களில் 3,174 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து மேல்மா சிப்காட் எதிர்ப்பு விவசாயிகள் இயக்கம் சார்பில் கடந்த ஜுலை 2ஆம் தேதி காத்திருப்பு போராட்டம் தொடங்கப்பட்டது.

125 நாட்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த 20 விவசாயிகளை கடந்த 4ஆம் தேதி போலீசார் கைது செய்தனர். இதில் 7 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து 6 பேர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்வதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.

இந்நிலையில் சமூக ஆர்வலர் ஏ.அருள் (குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதை திரும்பப் பெறவில்லை) உட்பட 20 பேரும் திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்ற நீதிபதி முன் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர்.

அரசு வழக்கறிஞர் கே.வி. மனோகரன் ஜாமீன் வழங்குவதற்கு எதிராக வாதிட்டார், குறிப்பாக 7 பேர் மீதான குண்டர் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கு (ரத்து உத்தரவு) தலைமை செயலகத்தில் நிலுவையில் உள்ளதாக வாதிட்டார்.

விவசாயிகள் தரப்பில் வழக்கறிஞர் எம்.அன்பழகன் வாதிடுகையில், போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 3 மாதங்களுக்கு பிறகு கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட விவசாயிகள் தங்கள் கிராமங்களில் வசிப்பவர்கள், ஜாமீனில் விடுவிக்கப்பட்டால் அவர்கள் தலைமறைவாக மாட்டார்கள் என்றார்.

இதனையடுத்து 19 பேருக்கு ஜாமின் வழங்குவதாக உத்தரவிட்ட நீதிபதி, பி.மதுசூதனன் வேலூரில் உள்ள ஜூடிசியல் மாஜிஸ்திரேட் முன் ஆஜராக வேண்டும் என நிபந்தனை விதித்தார். அருள் கிருஷ்ணகிரி ஜூடிசியல் மாஜிஸ்திரேட் முன் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு ஜாமின் வழங்கினார்.

Tags: protesttiruvannamalaifomers protest
ShareTweetSendShare
Previous Post

அலுவலகத்தில் ஜெபக் கூட்டம்: பெண் அதிகாரி சஸ்பெண்ட்!

Next Post

ஐ.ஆர்.பி. வீரர் உட்பட 2 பேர் சுட்டுக்கொலை: மணிப்பூரில் மீண்டும் பதற்றம்!

Related News

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு

மாணவிக்கு பாலியல் தொல்லை; தனியார் கல்லூரி தாளாளர் கைது

மேகதாது அணை தீர்மானத்தை எதித்த வழக்கு; தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவு

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies