அலுவலகத்தில் ஜெபக் கூட்டம்: பெண் அதிகாரி சஸ்பெண்ட்!
Sep 14, 2026, 02:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அலுவலகத்தில் ஜெபக் கூட்டம்: பெண் அதிகாரி சஸ்பெண்ட்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 21, 2023, 12:15 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அலுவலகத்தில் தீய சக்திகள் இருப்பதாகக் கூறி, அதை விரட்டுவதற்காக ஜெபக் கூட்டம் நடத்திய பெண் அதிகாரி கேரளாவில் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்.

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரியாக இருப்பவர் கே.ஏ.பிந்து. இவர், மேற்கண்ட அலுவலகத்தில் தீய சக்திகள் இருப்பதாகக் கூறி, கிறிஸ்துவ மத பிரார்த்தனை நிகழ்ச்சியை (ஜெபக் கூட்டம்) நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் பணியாற்றி சமீபத்தில் ஓய்வுபெற்ற ஊழியர் ஒருவர், கலெக்டரிடம் புகார் அளித்தார்.

இதையடுத்து, துணை கலெக்டர் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனடிப்படையில், குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி பிந்துவை சஸ்பெண்ட் செய்து மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்தார்.

இதுகுறித்து மேற்கண்ட அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் சிலர் கூறுகையில், “இந்த பிரார்த்தனைக் கூட்டம் கடந்த செப்டம்பர் மாதம் நடந்தது.

அலுவலகத்தில் உள்ள தீய சக்திகளை வெளியேற்றுவதற்காக, கிறிஸ்துவ மதத் தலைவர் ஒருவரின் அறிவுரையின்படி, இந்த பிரார்த்தனை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மேலும், பிரார்த்தனையின்போது குறிப்பிட்ட சில வாசகங்களை உச்சரித்தால் வேலை நெருக்கடி, மனப்பதற்றம் குறையும் என்று கூறப்பட்டது.

இதன் காரணமாகவே அந்த பிரார்த்தனைக் கூட்டம் நடத்தப்பட்டது. அதுவும் அலுவலக வேலை நேரம் முடிந்தது மாலை 5:30 மணிக்குத்தான் பிரார்த்தனைக் கூட்டம் நடந்தது. இதனால் அலுவல்கள் எதுவும் பாதிக்கப்படவில்லை. இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்ட பெண் அதிகாரி தரப்பு வாதத்தை கேட்காமல் சஸ்பெண்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது” என்றார்கள்.

இதுகுறித்து குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி பிந்து கூறுகையில், “நேற்று காலை அலுவலகத்துக்கு வந்ததும் சஸ்பெண்ட் உத்தரவு என்னிடம் தரப்பட்டது. அதில், உடனடியாக இந்த உத்தரவு அமலுக்கு வருவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே, அலுவலகத்தில் இருந்து வெளியேறினேன்” என்றார்.

Tags: Keralagovt officeprayersuspend
Share
Tweet
SendShare
Previous Post

சங்கர நேத்ராலயா மருத்துவமனையின் நிறுவனர், டாக்டர் எஸ்.எஸ்.பத்ரிநாத் மறைவு!

Next Post

விவசாயிகளுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்த அரசு தரப்பு வழக்கறிஞர்!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies