அலுவலகத்தில் ஜெபக் கூட்டம்: பெண் அதிகாரி சஸ்பெண்ட்!
Jul 31, 2026, 12:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அலுவலகத்தில் ஜெபக் கூட்டம்: பெண் அதிகாரி சஸ்பெண்ட்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 21, 2023, 12:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அலுவலகத்தில் தீய சக்திகள் இருப்பதாகக் கூறி, அதை விரட்டுவதற்காக ஜெபக் கூட்டம் நடத்திய பெண் அதிகாரி கேரளாவில் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்.

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரியாக இருப்பவர் கே.ஏ.பிந்து. இவர், மேற்கண்ட அலுவலகத்தில் தீய சக்திகள் இருப்பதாகக் கூறி, கிறிஸ்துவ மத பிரார்த்தனை நிகழ்ச்சியை (ஜெபக் கூட்டம்) நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் பணியாற்றி சமீபத்தில் ஓய்வுபெற்ற ஊழியர் ஒருவர், கலெக்டரிடம் புகார் அளித்தார்.

இதையடுத்து, துணை கலெக்டர் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனடிப்படையில், குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி பிந்துவை சஸ்பெண்ட் செய்து மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்தார்.

இதுகுறித்து மேற்கண்ட அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் சிலர் கூறுகையில், “இந்த பிரார்த்தனைக் கூட்டம் கடந்த செப்டம்பர் மாதம் நடந்தது.

அலுவலகத்தில் உள்ள தீய சக்திகளை வெளியேற்றுவதற்காக, கிறிஸ்துவ மதத் தலைவர் ஒருவரின் அறிவுரையின்படி, இந்த பிரார்த்தனை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மேலும், பிரார்த்தனையின்போது குறிப்பிட்ட சில வாசகங்களை உச்சரித்தால் வேலை நெருக்கடி, மனப்பதற்றம் குறையும் என்று கூறப்பட்டது.

இதன் காரணமாகவே அந்த பிரார்த்தனைக் கூட்டம் நடத்தப்பட்டது. அதுவும் அலுவலக வேலை நேரம் முடிந்தது மாலை 5:30 மணிக்குத்தான் பிரார்த்தனைக் கூட்டம் நடந்தது. இதனால் அலுவல்கள் எதுவும் பாதிக்கப்படவில்லை. இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்ட பெண் அதிகாரி தரப்பு வாதத்தை கேட்காமல் சஸ்பெண்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது” என்றார்கள்.

இதுகுறித்து குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி பிந்து கூறுகையில், “நேற்று காலை அலுவலகத்துக்கு வந்ததும் சஸ்பெண்ட் உத்தரவு என்னிடம் தரப்பட்டது. அதில், உடனடியாக இந்த உத்தரவு அமலுக்கு வருவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே, அலுவலகத்தில் இருந்து வெளியேறினேன்” என்றார்.

Tags: Keralagovt officeprayersuspend
ShareTweetSendShare
Previous Post

சங்கர நேத்ராலயா மருத்துவமனையின் நிறுவனர், டாக்டர் எஸ்.எஸ்.பத்ரிநாத் மறைவு!

Next Post

விவசாயிகளுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்த அரசு தரப்பு வழக்கறிஞர்!

Related News

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு

மாணவிக்கு பாலியல் தொல்லை; தனியார் கல்லூரி தாளாளர் கைது

மேகதாது அணை தீர்மானத்தை எதித்த வழக்கு; தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவு

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies