கலந்தாய்வில் முறைகேடு - செவிலியர்கள் சங்கம் பரபரப்பு புகார்!
Nov 11, 2025, 03:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கலந்தாய்வில் முறைகேடு – செவிலியர்கள் சங்கம் பரபரப்பு புகார்!

Web Desk by Web Desk
Nov 21, 2023, 03:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் தொகுப்பூதிய செவிலியர்களுக்குப் பணியிட மாற்ற கலந்தாய்வு வெளிப்படைத்தன்மை இல்லாமல் நடைபெற்று வருவதாகப் புகார் எழுந்துள்ளது.

இது தொடர்பாக, தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர்கள் மேம்பாட்டுச் சங்க பொதுச் செயலாளர் சுபின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் தொகுப்பூதிய செவிலியர்களுக்குப் பணியிட மாற்ற கலந்தாய்வு 20-ம் தேதி முதல் முதல் 22-ம் தேதி வரை நடத்தப்படுகிறது. ஆனால், இந்த பணியிட மாற்ற கலந்தாய்வில் வெளிப்படை தன்மை இல்லை.

கலந்தாய்வில் ஏற்கனவே இருந்த காலி பணியிடங்கள் பட்டியலில் காண்பிக்கப்படாமல் ஒரு சில இடங்கள் மட்டுமே காண்பிக்கப் பட்டுள்ளது.

குறிப்பாக, ஈரோடு மாவட்டம் பெருந்துறை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 80 பணியிடங்கள் காலியாக இருந்த நிலையில், வெறும் இரண்டு பணியிடங்கள் மட்டுமே கலந்தாய்வில் காண்பிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில், 27 காலி பணியிடங்களுக்கு 6 பணியிடங்களும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 45 பணியிடங்களுக்கு வெறும் 9 பணியிடங்களும், தருமபுரி மாவட்டத்தில் 56 பணியிடங்களுக்கு வெறும் 16 பணியிடங்கள் மட்டுமே கலந்தாய்வில் காண்பிக்கப்பட்டுள்ளது. இது போல், தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்டங்களில் இதே போன்ற நிலைதான் பின்பற்ற பட்டுள்ளது.

மேலும் பணியிட மாற்ற கலந்தாய்வு விண்ணப்பங்கள் கொடுத்த பல செவிலியர்களின் பெயர் கலந்தாய்வு பட்டியலில் இடம் பெறாமல் அந்தச் செவிலியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

கடந்த காலங்களில் நடந்த கலந்தாய்வுகளில் முதல் நாளில் பங்கு பெற்று வேறு பணியிடத்தைத் தேர்வு செய்த செவிலியர்களின் பணியிடங்களைக் காலி பணியிடங்களாக அறிவித்து மீண்டும் அந்தப் பணியிடங்களைச் செவிலியர்கள் தேர்வு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டது. அதுவும் இந்தக் கலந்தாய்வில் மறுக்கப்பட்டுள்ளது.

தற்போது வெளிப்படை தன்மையற்ற பல குறைகளுடன் நடத்தப்படும் கலந்தாய்வால் செவிலியர்கள் மிகவும் வேதனையில் உள்ளனர்.

இதனால், பெரும்பாண்மையான செவிலியர்கள் பணியிடம் ஏதும் தேர்வு செய்யாமல் வருத்தத்துடனும் பெரும் ஏமாற்றத்துடனும் சென்றுள்ளனர். இது அரசுக்கு மிகவும் அவப்பெயரை ஏற்படுத்தும்.

எனவே, இந்த விவகாரத்தில் குறைகளைக் களைந்து அனைத்து பணியிடங்களையும் வெளிப்படையாகக் காண்பிப்பதுடன் அனைத்து செவிலியர்களின் பெயர்களும் பட்டியலில் இடம் பெறவும் முதல் நாளில் காலியாகும் பணியிடங்களை மீண்டும் பட்டியலில் சேர்த்து செவிலியர்களுக்குப் பயன் பயக்கும் விதமான கலந்தாய்வை மீண்டும் நடத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

Tags: Nurses strike
ShareTweetSendShare
Previous Post

கால்பந்து தகுதிச்சுற்று : இந்தியா vs கத்தார்!

Next Post

சங்கர நேத்ராலயா நிறுவனர் எஸ்.எஸ்.பத்ரிநாத் மறைவு!

Related News

THAR கார் வைத்திருப்பவர்கள் பைத்தியக்காரர்கள் – ஹரியானா டிஜிபி கருத்தால் இணையத்தில் தீ பறக்கும் வாதம்!

சதுரங்க வேட்டை பாணியில் சுருட்டல் : வீடுகளை காட்டி மோசடி – சிக்கிய ஜென்டில் மேன்!

டெல்லி கார் வெடிப்பு : சிசிடிவியில் பதிவான முக்கிய தடயங்கள் என்ன?

அவதூறு வழக்கில் திமுக எம்.பி. டி. ஆர். பாலு கட்டாயம் குறுக்கு விசாரணையைச் சந்தித்துதான் ஆக வேண்டும் – நீதிமன்றம்

சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் ஆஜர்!

மதுரை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மாற்றுத்திறனாளிகள்!

Load More

அண்மைச் செய்திகள்

சீண்டினால் சிதறடிக்கப்படுவீர்கள் : வாலாட்டும் யூனுஸிற்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை!

சேலம் அருகே சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேச 12 பேரை அகதிகள் முகாமில் அடைத்த போலீசார்!

பிஎஃப்ஐ பினாமிகள் பெயரில் அறக்கட்டளைகளை தொடங்கி வெளிநாடுகளில் இருந்து நிதி வசூல் – அமலாக்கத்துறை விசாரணை!

டெல்லி கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 4 பேர் கைது!

கார் வெடிப்பு சம்பவத்திற்கு காரணமானவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் – ராஜ்நாத் சிங்

டெல்லியில் கார் வெடித்து சிதறிய சம்பவத்தில் உயிரிழந்த அரசுப் பேருந்து ஓட்டுநர்!

டெல்லியில் கார் வெடிப்பு சம்பவம் – 3 மணி நேரமாகக் காரில் காத்திருந்த உமர் நபி!

பயங்கரவாதிகளிடம் இருந்து கொடிய விஷத்தன்மை கொண்ட ரிசின் பறிமுதல்!

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு – 5 ஆம்புலன்ஸ் உரிமையாளர் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்!

சீனா : 15வது தேசிய விளையாட்டு போட்டிகள் கோலாகலமாக தொடக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies