காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை மக்கள் நம்பவில்லை: ஜெ.பி.நட்டா!
Mar 15, 2026, 06:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை மக்கள் நம்பவில்லை: ஜெ.பி.நட்டா!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 21, 2023, 08:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை மக்கள் நம்பத் தயாராக இல்லை. அப்படி அவர்கள் வாக்குறுதி அளிப்பதாக இருந்தால், ஏற்கெனவே பிரதமர் நரேந்திர மோடி அளித்த வாக்குறுதிகளைத்தான் மீண்டும் அளிக்க முடியும் என்று பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா கூறியிருக்கிறார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் வரும் 25-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதையொட்டி, ஆளும் காங்கிரஸ் கட்சியும், பா.ஜ.க.வும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கின்றன. அந்த வகையில், பா.ஜ.க. சார்பில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் மத்திய அமைச்சர்கள் பலரும் ராஜஸ்தானில் முகாமிட்டு தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலம் பிகானர் மற்றும் சிகாரில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, “பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 4 கோடி வீடுகளை பிரதமர் மோடி உருவாக்கினார். அந்தவகையில், ராஜஸ்தான் மாநிலத்துக்கு 22 லட்சம் வீடுகள் ஒதுக்கப்பட்டன. ஆனால், இவற்றில் 9 லட்சம் வீடுகளை கட்ட விடாமல் அசோக் கெலாட் தடுத்து விட்டார்.

பிரதமர் மோடி தலைமையின் கீழ் ஏறக்குறைய 80 கோடி மக்கள் 5 கிலோ கோதுமை அல்லது 5 கிலோ அரிசி பெறுகிறார்கள். அசோக் கெலாட் ஆட்சியில் பெட்ரோல், டீசல் விலை 100 ரூபாய்க்கு மேல் விற்கப்படுகிறது. எங்களது அரசு வந்தால் சாதாரண மக்களுக்கு குறைந்த விலைக்கு பெட்ரோல், டீசல் கிடைக்கும்.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை யாரும் நம்பவில்லை. ஊழல், அட்டூழியங்கள், பெண்கள் துன்புறுத்தலுக்கு மட்டுமே காங்கிரஸால் உத்தரவாதம் அளிக்க முடியும். அப்படி அவர்கள் வாக்குறுதி அளிப்பதாக இருந்தால், ஏற்கெனவே பிரதமர் மோடி அளித்த வாக்குறுதிகளைத்தான் திரும்பமும் அளிக்க முடியும். இந்த தேசமும், நாட்டு மக்களும் பிரதமர் மோடியுடன் இருக்கிறார்கள்” என்றார்.

தொடர்ந்து, ஜெ.பி.நட்டா பிகானரில் ரோடு ஷோவையும் நடத்தினார்.

Tags: RajasthanJ.P.Naddaelection compaign
ShareTweetSendShare
Previous Post

ஞானவாபி மசூதி வழக்கு: நவம்பர் 28-ம் தேதி அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு!

Next Post

கால்பந்து தகுதிச்சுற்று : கத்தார் வெற்றி!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies