தேசிய சீனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் ஆந்திரா அணி 3-1 என்ற கோல் கணக்கில் கோவாவை வீழ்த்தியது.
13 வது தேசிய சீனியர் ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி தொடர் நடைபெற்றுவருகிறது. நவம்பர் 18 தொடங்கிய இப்போட்டிகள் நவம்பர் 28 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன.
இதில் நேற்று ஆந்திரா மற்றும் கோவா அணிகளுக்கிடையே போட்டிகள் நடைபெற்றது. இதில் ஆந்திரா அணி 3-1 என்ற கோல் கணக்கில் கோவாவை வீழ்த்தியது.
இதில் ஆந்திரா சார்பாக கல்லா சிவா பிரமோத் 8 வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். அவரைத் தொடர்ந்து கோவா வீரர் சுபம் சர்மா 28 வது நிமிடத்தில் ஒரு அடித்தார்.
அப்போது இரு அணிகளின் ஸ்கோரும் சமமாக 1-1 என்று இருந்தது. பிறகு கடுமையாக சென்ற போட்டியில் யார் தங்களது 2 வது கோலை அடிக்க போகிறார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் ஆந்திரா அணியின் குமார் ராகிபதி சந்தீப் 36 வது நிமிடத்தில் கோல் அடித்தார்.
பின்னர் நீண்ட நேரமாக போராடியும் இரு அணிகளுக்கும் கோல் அடிக்காத நிலையில் 57 வது நிமிடத்தில் ஆந்திரா அணியின் புச்சலப்பள்ளி சாந்தகுமார் ஒரு கோல் அடித்தார்.
இதனால் ஆந்திரா 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றிப் பெற்றது.