நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தின் ரூ.752 கோடி சொத்துக்கள் முடக்கம்!
Jan 14, 2026, 04:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தின் ரூ.752 கோடி சொத்துக்கள் முடக்கம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 22, 2023, 12:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ், காங்கிரஸ் கட்சியின் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நிறுவனத்துக்குச் சொந்தமான 752 கோடி ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி இருக்கிறது.

1937-ம் ஆண்டு ஜவகர்லால் நேருவால் தொடங்கப்பட்ட அசோசியேட்டட் ஜா்னல் நிறுவனம் (ஏ.ஜே.எல்), நேஷனல் ஹெரால்டு உள்ளிட்ட பத்திரிகைகளை நடத்தி வந்தது. அப்பத்திரிகை, காங்கிரஸ் கட்சி தொடர்பான செய்திகளை பிரதானமாகத் தாங்கி வந்தது. 1947-ம் ஆண்டு சுதந்திரத்துக்கு பிறகு முதல் பிரதமராக பதவியேற்றதால் இயக்குனர் பதவியில் இருந்து நேரு விலகினாா்.

இதனிடையே, அப்பத்திரிகை கடனில் சிக்கித் தவித்ததால், 2008-ம் ஆண்டு மூடப்பட்டது. அப்போது, அந்நிறுவனம் (ஏ.ஜே.எல்.) காங்கிரஸ் கட்சிக்கு 90.21 கோடி ரூபாய் கடன் வைத்திருந்தது. இதையடுத்து, தலா 38 சதவீதம் பங்குகளை வைத்திருக்கும் காங்கிரஸ் மூத்த தலைவா்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தியின் யங் இந்தியா நிறுவனம் 2012-ம் ஆண்டு ஏ.ஜே.எல். நிறுவனத்தை வாங்கியது.

இந்த பணப் பரிமாற்றத்தில், காங்கிரஸ் கட்சியின் பணத்தைப் பயன்படுத்தி நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தின் பல கோடி சொத்துகள் அபகரிக்கப்பட்டதாக பா.ஜ.க. மூத்த தலைவா் சுப்பிரமணியன் சுவாமி வழக்குத் தொடுத்தாா். இது தொடர்பாக, அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது.

இது தொடர்பாக, காங்கிரஸ் முன்னாள் மூத்த தலைவா்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, தற்போதைய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே உள்ளிட்டோருக்கு கடந்த ஆண்டு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி விசாரணை நடத்தியது. இதைத் தொடர்ந்து, நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தின் 752 கோடி ரூபாய் அசையா சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி இருக்கிறது.

இது தொடர்பாக அமலாக்கத்துறை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், அசோசியேட்டட் ஜர்னல் நிறுவனம் மற்றும் யங் இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமாக டெல்லியிலுள்ள நேஷனல் ஹெரால்டு அலுவலகம், லக்னோவில் உள்ள நேரு பவன், மும்பையிலுள்ள நேஷனல் ஹெரால்டு அலுவலம் ஆகிய சொத்துகள் முடக்கப்பட்டிருக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும், சட்ட விரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் சோனியா மற்றும் ராகுல் காந்தி உள்ளிட்ட 7 பேரிடம் மீண்டும் விசாரணை நடத்தி 2-வது குற்றப்பத்திரிகையை அமலாக்கத்துறை விரைவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags: Enforcement departmentNational Herald
ShareTweetSendShare
Previous Post

குஜராத்தின் காந்திநகருக்குக் குடியரசு துணைத்தலைவர் பயணம்!

Next Post

ஐ.நா. சபை : பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் கண்டனம்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies