நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தின் ரூ.752 கோடி சொத்துக்கள் முடக்கம்!
Mar 15, 2026, 03:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தின் ரூ.752 கோடி சொத்துக்கள் முடக்கம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 22, 2023, 12:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ், காங்கிரஸ் கட்சியின் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நிறுவனத்துக்குச் சொந்தமான 752 கோடி ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி இருக்கிறது.

1937-ம் ஆண்டு ஜவகர்லால் நேருவால் தொடங்கப்பட்ட அசோசியேட்டட் ஜா்னல் நிறுவனம் (ஏ.ஜே.எல்), நேஷனல் ஹெரால்டு உள்ளிட்ட பத்திரிகைகளை நடத்தி வந்தது. அப்பத்திரிகை, காங்கிரஸ் கட்சி தொடர்பான செய்திகளை பிரதானமாகத் தாங்கி வந்தது. 1947-ம் ஆண்டு சுதந்திரத்துக்கு பிறகு முதல் பிரதமராக பதவியேற்றதால் இயக்குனர் பதவியில் இருந்து நேரு விலகினாா்.

இதனிடையே, அப்பத்திரிகை கடனில் சிக்கித் தவித்ததால், 2008-ம் ஆண்டு மூடப்பட்டது. அப்போது, அந்நிறுவனம் (ஏ.ஜே.எல்.) காங்கிரஸ் கட்சிக்கு 90.21 கோடி ரூபாய் கடன் வைத்திருந்தது. இதையடுத்து, தலா 38 சதவீதம் பங்குகளை வைத்திருக்கும் காங்கிரஸ் மூத்த தலைவா்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தியின் யங் இந்தியா நிறுவனம் 2012-ம் ஆண்டு ஏ.ஜே.எல். நிறுவனத்தை வாங்கியது.

இந்த பணப் பரிமாற்றத்தில், காங்கிரஸ் கட்சியின் பணத்தைப் பயன்படுத்தி நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தின் பல கோடி சொத்துகள் அபகரிக்கப்பட்டதாக பா.ஜ.க. மூத்த தலைவா் சுப்பிரமணியன் சுவாமி வழக்குத் தொடுத்தாா். இது தொடர்பாக, அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது.

இது தொடர்பாக, காங்கிரஸ் முன்னாள் மூத்த தலைவா்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, தற்போதைய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே உள்ளிட்டோருக்கு கடந்த ஆண்டு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி விசாரணை நடத்தியது. இதைத் தொடர்ந்து, நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தின் 752 கோடி ரூபாய் அசையா சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி இருக்கிறது.

இது தொடர்பாக அமலாக்கத்துறை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், அசோசியேட்டட் ஜர்னல் நிறுவனம் மற்றும் யங் இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமாக டெல்லியிலுள்ள நேஷனல் ஹெரால்டு அலுவலகம், லக்னோவில் உள்ள நேரு பவன், மும்பையிலுள்ள நேஷனல் ஹெரால்டு அலுவலம் ஆகிய சொத்துகள் முடக்கப்பட்டிருக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும், சட்ட விரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் சோனியா மற்றும் ராகுல் காந்தி உள்ளிட்ட 7 பேரிடம் மீண்டும் விசாரணை நடத்தி 2-வது குற்றப்பத்திரிகையை அமலாக்கத்துறை விரைவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags: Enforcement departmentNational Herald
ShareTweetSendShare
Previous Post

குஜராத்தின் காந்திநகருக்குக் குடியரசு துணைத்தலைவர் பயணம்!

Next Post

ஐ.நா. சபை : பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் கண்டனம்!

Related News

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies