நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தின் ரூ.752 கோடி சொத்துக்கள் முடக்கம்!
Jul 26, 2025, 06:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தின் ரூ.752 கோடி சொத்துக்கள் முடக்கம்!

Web Desk by Web Desk
Nov 22, 2023, 12:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ், காங்கிரஸ் கட்சியின் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நிறுவனத்துக்குச் சொந்தமான 752 கோடி ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி இருக்கிறது.

1937-ம் ஆண்டு ஜவகர்லால் நேருவால் தொடங்கப்பட்ட அசோசியேட்டட் ஜா்னல் நிறுவனம் (ஏ.ஜே.எல்), நேஷனல் ஹெரால்டு உள்ளிட்ட பத்திரிகைகளை நடத்தி வந்தது. அப்பத்திரிகை, காங்கிரஸ் கட்சி தொடர்பான செய்திகளை பிரதானமாகத் தாங்கி வந்தது. 1947-ம் ஆண்டு சுதந்திரத்துக்கு பிறகு முதல் பிரதமராக பதவியேற்றதால் இயக்குனர் பதவியில் இருந்து நேரு விலகினாா்.

இதனிடையே, அப்பத்திரிகை கடனில் சிக்கித் தவித்ததால், 2008-ம் ஆண்டு மூடப்பட்டது. அப்போது, அந்நிறுவனம் (ஏ.ஜே.எல்.) காங்கிரஸ் கட்சிக்கு 90.21 கோடி ரூபாய் கடன் வைத்திருந்தது. இதையடுத்து, தலா 38 சதவீதம் பங்குகளை வைத்திருக்கும் காங்கிரஸ் மூத்த தலைவா்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தியின் யங் இந்தியா நிறுவனம் 2012-ம் ஆண்டு ஏ.ஜே.எல். நிறுவனத்தை வாங்கியது.

இந்த பணப் பரிமாற்றத்தில், காங்கிரஸ் கட்சியின் பணத்தைப் பயன்படுத்தி நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தின் பல கோடி சொத்துகள் அபகரிக்கப்பட்டதாக பா.ஜ.க. மூத்த தலைவா் சுப்பிரமணியன் சுவாமி வழக்குத் தொடுத்தாா். இது தொடர்பாக, அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது.

இது தொடர்பாக, காங்கிரஸ் முன்னாள் மூத்த தலைவா்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, தற்போதைய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே உள்ளிட்டோருக்கு கடந்த ஆண்டு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி விசாரணை நடத்தியது. இதைத் தொடர்ந்து, நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தின் 752 கோடி ரூபாய் அசையா சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி இருக்கிறது.

இது தொடர்பாக அமலாக்கத்துறை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், அசோசியேட்டட் ஜர்னல் நிறுவனம் மற்றும் யங் இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமாக டெல்லியிலுள்ள நேஷனல் ஹெரால்டு அலுவலகம், லக்னோவில் உள்ள நேரு பவன், மும்பையிலுள்ள நேஷனல் ஹெரால்டு அலுவலம் ஆகிய சொத்துகள் முடக்கப்பட்டிருக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும், சட்ட விரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் சோனியா மற்றும் ராகுல் காந்தி உள்ளிட்ட 7 பேரிடம் மீண்டும் விசாரணை நடத்தி 2-வது குற்றப்பத்திரிகையை அமலாக்கத்துறை விரைவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags: Enforcement departmentNational Herald
ShareTweetSendShare
Previous Post

குஜராத்தின் காந்திநகருக்குக் குடியரசு துணைத்தலைவர் பயணம்!

Next Post

ஐ.நா. சபை : பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் கண்டனம்!

Related News

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

பிரதமர் மோடி தமிழகம் வருகை – அரியலூர் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு!

மதுரையில் திமுக நிர்வாகிக்கு சொந்தமான ஐடி நிறுவனத்தில் GST நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை!

செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் குழாய்களில் இணைப்பு பணி!

ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள இலவச கழிப்பறைகளில் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

ஆண்டிப்பட்டி பகுதியில் வாட்டர் ஆப்பிள் எனப்படும் நீர்க்குமிழி பழ சீசன் தொடங்கியது – விவசாயிகள் மகிழ்ச்சி!

கோயம்பேடு அருகே தனிநபர் ஆக்கிரமித்துள்ள சாலை – பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் வலியுறுத்தல்!

பிரிட்டன் : 5 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகைக்கு ஆசைப்பட்டு, கால்களை வெட்டி கொண்ட மருத்துவர் கைது!

பிரதமரை எதிர்ப்பதாக நினைத்து, காங்கிரஸ் கட்சியினர் தேசத்தை எதிர்க்கின்றனர் : சிவராஜ் சிங் சௌகான்

இந்திய ராணுவம் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் தயார்நிலை இருக்க வேண்டும் : முப்படைகளின் தலைமை தளபதி அனில் சௌகன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies