நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தின் ரூ.752 கோடி சொத்துக்கள் முடக்கம்!
Sep 12, 2026, 10:20 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தின் ரூ.752 கோடி சொத்துக்கள் முடக்கம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 22, 2023, 12:23 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ், காங்கிரஸ் கட்சியின் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நிறுவனத்துக்குச் சொந்தமான 752 கோடி ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி இருக்கிறது.

1937-ம் ஆண்டு ஜவகர்லால் நேருவால் தொடங்கப்பட்ட அசோசியேட்டட் ஜா்னல் நிறுவனம் (ஏ.ஜே.எல்), நேஷனல் ஹெரால்டு உள்ளிட்ட பத்திரிகைகளை நடத்தி வந்தது. அப்பத்திரிகை, காங்கிரஸ் கட்சி தொடர்பான செய்திகளை பிரதானமாகத் தாங்கி வந்தது. 1947-ம் ஆண்டு சுதந்திரத்துக்கு பிறகு முதல் பிரதமராக பதவியேற்றதால் இயக்குனர் பதவியில் இருந்து நேரு விலகினாா்.

இதனிடையே, அப்பத்திரிகை கடனில் சிக்கித் தவித்ததால், 2008-ம் ஆண்டு மூடப்பட்டது. அப்போது, அந்நிறுவனம் (ஏ.ஜே.எல்.) காங்கிரஸ் கட்சிக்கு 90.21 கோடி ரூபாய் கடன் வைத்திருந்தது. இதையடுத்து, தலா 38 சதவீதம் பங்குகளை வைத்திருக்கும் காங்கிரஸ் மூத்த தலைவா்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தியின் யங் இந்தியா நிறுவனம் 2012-ம் ஆண்டு ஏ.ஜே.எல். நிறுவனத்தை வாங்கியது.

இந்த பணப் பரிமாற்றத்தில், காங்கிரஸ் கட்சியின் பணத்தைப் பயன்படுத்தி நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தின் பல கோடி சொத்துகள் அபகரிக்கப்பட்டதாக பா.ஜ.க. மூத்த தலைவா் சுப்பிரமணியன் சுவாமி வழக்குத் தொடுத்தாா். இது தொடர்பாக, அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது.

இது தொடர்பாக, காங்கிரஸ் முன்னாள் மூத்த தலைவா்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, தற்போதைய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே உள்ளிட்டோருக்கு கடந்த ஆண்டு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி விசாரணை நடத்தியது. இதைத் தொடர்ந்து, நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தின் 752 கோடி ரூபாய் அசையா சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி இருக்கிறது.

இது தொடர்பாக அமலாக்கத்துறை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், அசோசியேட்டட் ஜர்னல் நிறுவனம் மற்றும் யங் இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமாக டெல்லியிலுள்ள நேஷனல் ஹெரால்டு அலுவலகம், லக்னோவில் உள்ள நேரு பவன், மும்பையிலுள்ள நேஷனல் ஹெரால்டு அலுவலம் ஆகிய சொத்துகள் முடக்கப்பட்டிருக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும், சட்ட விரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் சோனியா மற்றும் ராகுல் காந்தி உள்ளிட்ட 7 பேரிடம் மீண்டும் விசாரணை நடத்தி 2-வது குற்றப்பத்திரிகையை அமலாக்கத்துறை விரைவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags: Enforcement departmentNational Herald
Share
Tweet
SendShare
Previous Post

குஜராத்தின் காந்திநகருக்குக் குடியரசு துணைத்தலைவர் பயணம்!

Next Post

ஐ.நா. சபை : பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் கண்டனம்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies