உத்தரகண்ட்: சுரங்கப்பாதை துளையிடும் பணி மீண்டும் தொடக்கம்!
Jul 26, 2025, 11:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உத்தரகண்ட்: சுரங்கப்பாதை துளையிடும் பணி மீண்டும் தொடக்கம்!

Web Desk by Web Desk
Nov 22, 2023, 02:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்தரகண்ட் மாநிலத்தில் சுரங்கத்தில் சிக்கி இருக்கும் தொழிலாளர்களை மீட்பதற்கான நடவடிக்கை மீண்டும் தொடங்கி இருக்கிறது. தொழிலாளர்கள் அனைவரும் நலமுடன் இருப்பதாகவும், நாளை காலை அனைவரும் மீட்கப்படுவார்கள் எனவும் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

உத்தரகண்ட் மாநிலம் உத்தர்காஷி என்கிற இடத்தில் சில்க்யாரா சுரங்கம் தோண்டும் பணி நடைபெற்று வந்தது. இப்பணியில் 41 தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். பணியின்போது திடீரென ஏற்பட்ட நிலச்சரிவால் சுரங்கத்தின் ஒரு பகுதி மூடியது. இதனால் 41 தொழிலாளர்களும் சுரங்கத்திற்குள் சிக்கிக் கொண்டனர்.

இதையடுத்து, தொழிலாளர்களை மீட்கும் பணி கடந்த 10 நாட்களாக நடைபெற்று வருகிறது. அதேசமயம், தொழிலாளர்களுக்குத் தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்டவை வழங்குவதற்காக 6 அங்குல குழாய் ஒன்று அமைக்கப்பட்டது. இக்குழாய் வழியாக கேமரா ஒன்றும் அனுப்பப்பட்டது. அக்கேமரா படம்பிடித்து அனுப்பியதில், தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருப்பது தெரியவந்திருக்கிறது.

இந்த நிலையில், சில்க்யாரா சுரங்கத்தில் சிக்கி இருக்கும் 41 தொழிலாளர்களை மீட்கும் பாதையைத் தயார் செய்வதற்காக, அமெரிக்க ஆஜர் இயந்திரம் மூலம் துளையிடும் பணி ஒரே இரவில் மீண்டும் தொடங்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், “இதுவரை 800 மி.மீ. விட்டம் கொண்ட இரும்புக் குழாய்கள் இடிபாடுகள் வழியாக 32 மீட்டர் வரை சொருகப்பட்டிருக்கிறது.

ஆஜர் இயந்திரம் சுரங்கப்பாதையில் துளையிடும் பணியை மேற்கொண்டபோது அதிர்வு ஏற்பட்டதால் துளையிடும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தற்போது, ஆஜர் இயந்திரம் மூலம் துளையிடும் பணி மீண்டும் தொடங்கப்பட்டிருக்கிறது. எனவே, மீட்புப் பணிகள் தீவிரமாகும்” என்று தெரிவித்தனர்.

இதுகுறித்து எஸ்.பி. அர்பன் யதுவன்ஷி கூறுகையில், “நேற்று இரவு முதல் மீட்புப் பணியில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. 39 மீட்டரை கடந்திருக்கிறோம். தொழிலாளர்கள் அனைவரும் நலமுடன் இருக்கிறார்கள். மீட்பு நடவடிக்கை சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறது. தடைகள் ஏதும் இல்லை என்றால், தொழிலாளர்களை விரைவில் மீட்க முடியும்” என்றார்.

இதனிடையே, சுரங்கத்தில் சிக்கி இருக்கும் தொழிலாளியின் குடும்ப உறுப்பினர் சுனிதா ஹெம்ப்ராம் கூறுகையில், “இங்கே சிக்கியுள்ள எனது மைத்துனருடன் நான் பேசினேன். அவர் நலமுடனும் ஆரோக்கியமாகவும் இருக்கிறார். தொழிலாளர்களுக்கு உணவு, உடைகள் மற்றும் பிற பொருட்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. நாளை காலை அனவரும் மீட்கப்படுவார்கள் என்று நம்புகிறேன். சிக்கிய தொழிலாளர்களுடன் மருத்துவர்களும் உரையாடினர்” என்றார்.

தொழில்நுட்பம், சாலை மற்றும் போக்குவரத்து கூடுதல் செயலாளர் மஹ்மூத் அகமது கூறுகையில், “நள்ளிரவு 12:45 மணியளவில் நாங்கள் ஆகர் இயந்திரம் மூலம் துளையிடத் தொடங்கினோம். இதுவரை நாங்கள் மேலும் 3 குழாய்களை தள்ளிவிட்டோம். கூடுதலாக 800 மி.மீ. குழாய் சுரங்கப்பாதைக்குள் 21 மீட்டர் தள்ளப்பட்டிருக்கிறது.

நாங்கள் சுரங்கப்பாதையின் உள்ளே 45-50 மீட்டர் அடையும் வரை, சரியான நேரத்தை எங்களால் வழங்க முடியாது. நாங்கள் கிடைமட்ட துளையிடல் செய்கிறோம். அங்கிருந்து 8 மீட்டர் தூரத்திற்கு உள்ளே நுழைந்தோம். மீட்புப் பணியில் தடைகள் ஏதும் ஏற்படவில்லை என்றால் இன்று இரவு அல்லது நாளை காலை நல்ல செய்திகள் வரலாம். பைப்லைன் போடுவதற்கு நடுவில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை” என்றார்.

Tags: Uttarkashi TunnelRescueOperation
ShareTweetSendShare
Previous Post

அயோத்தி இராமர் கோயில் குடமுழுக்கு!

Next Post

ஊட்டி மலை இரயில் ரத்து – காரணம் என்ன?

Related News

பிரான்ஸ் அதிபருக்கு அமெரிக்கா கண்டனம்!

ராமநாதபுரம் : டிராக்டர் கவிழ்ந்து விபத்து – 3 பெண்கள் பலி!

சேலம் : சாமி சிலைகளை எடுத்து சென்ற விஏஓ மீது நடவடிக்கை எடுத்திடுக – முதியவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்!

சென்னை : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு கொடுக்க நீண்ட நேரம் காத்திருப்பு!

ராணுவ வீரர்களின்  துணிச்சலுக்கும், அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கும் வணக்கம் செலுத்துவோம் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

டெல்லி : யமுனை நதியில் நீர்வரத்து அதிகரிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தாய்நாட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் மீட்டெடுத்த மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துவோம் – அண்ணாமலை

சென்னை : இறுதி ஊர்வலத்தின் போது நாட்டு வெடி வெடித்து மாணவி படுகாயம்!

திமுகவுக்கு எதிராக போராட்டம் நடத்தினால் போலீசார் அனுமதி வழங்குவதில்லை : இந்து முன்னணியினர் குற்றச்சாட்டு!

நாட்டை காக்க வீர மரணமடைந்த ராணுவ வீரர்களை நினைவுகூர்வோம் – நயினார் நாகேந்திரன்

மியான்மர் : கனமழையால் திரும்பும் திசையெல்லாம் வெள்ளம் – மக்கள் அவதி!

ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – இளைஞரின் புகைப்படம் வெளியீடு!

ராஜகோபுரம் எதிரில் உள்ள சக்கரை குளம் குடிகாரர்களின் கூடாரமாக மாறி உள்ளதால் பக்தர்கள் அதிர்ச்சி!

ரிதன்யா வழக்கு – ஜாமீன் மனு குறித்து காவல்துறை பதிலளிக்க ஆணை!

யூடியூப், இன்ஸ்டாவுக்கு செக் வைத்த மஸ்க் : 9 ஆண்டுக்குப் பின் மீண்டு(ம்) வருகிறது VINE!

18,000 அடி உயரத்தில் சரித்திர வெற்றி : கார்கில் போர் – 26வது வெற்றி தினம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies