உத்தரகண்ட்: சுரங்கப்பாதை துளையிடும் பணி மீண்டும் தொடக்கம்!
Oct 26, 2025, 03:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உத்தரகண்ட்: சுரங்கப்பாதை துளையிடும் பணி மீண்டும் தொடக்கம்!

Web Desk by Web Desk
Nov 22, 2023, 02:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்தரகண்ட் மாநிலத்தில் சுரங்கத்தில் சிக்கி இருக்கும் தொழிலாளர்களை மீட்பதற்கான நடவடிக்கை மீண்டும் தொடங்கி இருக்கிறது. தொழிலாளர்கள் அனைவரும் நலமுடன் இருப்பதாகவும், நாளை காலை அனைவரும் மீட்கப்படுவார்கள் எனவும் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

உத்தரகண்ட் மாநிலம் உத்தர்காஷி என்கிற இடத்தில் சில்க்யாரா சுரங்கம் தோண்டும் பணி நடைபெற்று வந்தது. இப்பணியில் 41 தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். பணியின்போது திடீரென ஏற்பட்ட நிலச்சரிவால் சுரங்கத்தின் ஒரு பகுதி மூடியது. இதனால் 41 தொழிலாளர்களும் சுரங்கத்திற்குள் சிக்கிக் கொண்டனர்.

இதையடுத்து, தொழிலாளர்களை மீட்கும் பணி கடந்த 10 நாட்களாக நடைபெற்று வருகிறது. அதேசமயம், தொழிலாளர்களுக்குத் தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்டவை வழங்குவதற்காக 6 அங்குல குழாய் ஒன்று அமைக்கப்பட்டது. இக்குழாய் வழியாக கேமரா ஒன்றும் அனுப்பப்பட்டது. அக்கேமரா படம்பிடித்து அனுப்பியதில், தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருப்பது தெரியவந்திருக்கிறது.

இந்த நிலையில், சில்க்யாரா சுரங்கத்தில் சிக்கி இருக்கும் 41 தொழிலாளர்களை மீட்கும் பாதையைத் தயார் செய்வதற்காக, அமெரிக்க ஆஜர் இயந்திரம் மூலம் துளையிடும் பணி ஒரே இரவில் மீண்டும் தொடங்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், “இதுவரை 800 மி.மீ. விட்டம் கொண்ட இரும்புக் குழாய்கள் இடிபாடுகள் வழியாக 32 மீட்டர் வரை சொருகப்பட்டிருக்கிறது.

ஆஜர் இயந்திரம் சுரங்கப்பாதையில் துளையிடும் பணியை மேற்கொண்டபோது அதிர்வு ஏற்பட்டதால் துளையிடும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தற்போது, ஆஜர் இயந்திரம் மூலம் துளையிடும் பணி மீண்டும் தொடங்கப்பட்டிருக்கிறது. எனவே, மீட்புப் பணிகள் தீவிரமாகும்” என்று தெரிவித்தனர்.

இதுகுறித்து எஸ்.பி. அர்பன் யதுவன்ஷி கூறுகையில், “நேற்று இரவு முதல் மீட்புப் பணியில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. 39 மீட்டரை கடந்திருக்கிறோம். தொழிலாளர்கள் அனைவரும் நலமுடன் இருக்கிறார்கள். மீட்பு நடவடிக்கை சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறது. தடைகள் ஏதும் இல்லை என்றால், தொழிலாளர்களை விரைவில் மீட்க முடியும்” என்றார்.

இதனிடையே, சுரங்கத்தில் சிக்கி இருக்கும் தொழிலாளியின் குடும்ப உறுப்பினர் சுனிதா ஹெம்ப்ராம் கூறுகையில், “இங்கே சிக்கியுள்ள எனது மைத்துனருடன் நான் பேசினேன். அவர் நலமுடனும் ஆரோக்கியமாகவும் இருக்கிறார். தொழிலாளர்களுக்கு உணவு, உடைகள் மற்றும் பிற பொருட்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. நாளை காலை அனவரும் மீட்கப்படுவார்கள் என்று நம்புகிறேன். சிக்கிய தொழிலாளர்களுடன் மருத்துவர்களும் உரையாடினர்” என்றார்.

தொழில்நுட்பம், சாலை மற்றும் போக்குவரத்து கூடுதல் செயலாளர் மஹ்மூத் அகமது கூறுகையில், “நள்ளிரவு 12:45 மணியளவில் நாங்கள் ஆகர் இயந்திரம் மூலம் துளையிடத் தொடங்கினோம். இதுவரை நாங்கள் மேலும் 3 குழாய்களை தள்ளிவிட்டோம். கூடுதலாக 800 மி.மீ. குழாய் சுரங்கப்பாதைக்குள் 21 மீட்டர் தள்ளப்பட்டிருக்கிறது.

நாங்கள் சுரங்கப்பாதையின் உள்ளே 45-50 மீட்டர் அடையும் வரை, சரியான நேரத்தை எங்களால் வழங்க முடியாது. நாங்கள் கிடைமட்ட துளையிடல் செய்கிறோம். அங்கிருந்து 8 மீட்டர் தூரத்திற்கு உள்ளே நுழைந்தோம். மீட்புப் பணியில் தடைகள் ஏதும் ஏற்படவில்லை என்றால் இன்று இரவு அல்லது நாளை காலை நல்ல செய்திகள் வரலாம். பைப்லைன் போடுவதற்கு நடுவில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை” என்றார்.

Tags: Uttarkashi TunnelRescueOperation
ShareTweetSendShare
Previous Post

அயோத்தி இராமர் கோயில் குடமுழுக்கு!

Next Post

ஊட்டி மலை இரயில் ரத்து – காரணம் என்ன?

Related News

விளம்பரங்களை விரும்ப செய்த ஜாம்பவான்!

படிப்பில் பட்டையை கிளப்பும் பேராசிரியர் : 150+ டிகிரிகளை முடித்து அசத்தல் சாதனை!

அவுரங்காபாத் ரயில் நிலையம் சத்ரபதி சாம்பாஜிநகர் என மாற்றம்!

டெல்லி : உள்ளாடையில் மறைத்து தங்க கட்டிகளை எடுத்து வந்த பெண்!

தயாரான இறுதிச்சடங்கு திட்ட ஏற்பாடுகள் : புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் இங்கிலாந்து மன்னர் சார்லஸ்!

கரீபியன் கடல் பகுதிக்கு விமானம் தாங்கிக் கப்பல் அனுப்பும் அமெரிக்கா!

Load More

அண்மைச் செய்திகள்

திருவள்ளூர் : நெல் கொள்முதல் நிலையங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மத்திய குழுவினர்!

இந்திய ஜனநாயகம் பல நாடுகளுக்கு ஒரு எடுத்துக்காட்டு – மச்சாடோ

ஸ்பெயின் : வெள்ளத்தில் பலியானோரின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி பேரணி!

தஞ்சாவூர் : பூங்காவில் மழை நீருடன் தேங்கி நிற்கும் கழிவுநீர்!

“மாரி”யை பாராட்டு மழையில் நனைய வைப்பதற்கு காலம் இது இல்லை முதலமைச்சர் ஸ்டாலின் – தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்!

பங்கு சந்தையை சீர்குலைக்க காங்கிரஸ் முயற்சிப்பது ஏன்? – அண்ணாமலை கேள்வி!

முழுநேர சினிமா விமர்சகராக முதல்வர் மாறிவிட்டார் – இபிஎஸ் விமர்சனம்!

இந்தியாவை சேர்ந்த எஜுகேட் கேர்ள்ஸ் நிறுவனத்துக்கு ரமோன் மகசேசே விருது!

காற்றழுத்த தாழ்வு மண்டலம் முன்பே புயலாக மாற வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

நீலகிரி குடியிருப்பு பகுதியில் உலா வந்த சிறுத்தை, கரடி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies