உத்தரகண்ட்: சுரங்கப்பாதை துளையிடும் பணி மீண்டும் தொடக்கம்!
Jul 29, 2026, 12:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உத்தரகண்ட்: சுரங்கப்பாதை துளையிடும் பணி மீண்டும் தொடக்கம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 22, 2023, 02:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்தரகண்ட் மாநிலத்தில் சுரங்கத்தில் சிக்கி இருக்கும் தொழிலாளர்களை மீட்பதற்கான நடவடிக்கை மீண்டும் தொடங்கி இருக்கிறது. தொழிலாளர்கள் அனைவரும் நலமுடன் இருப்பதாகவும், நாளை காலை அனைவரும் மீட்கப்படுவார்கள் எனவும் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

உத்தரகண்ட் மாநிலம் உத்தர்காஷி என்கிற இடத்தில் சில்க்யாரா சுரங்கம் தோண்டும் பணி நடைபெற்று வந்தது. இப்பணியில் 41 தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். பணியின்போது திடீரென ஏற்பட்ட நிலச்சரிவால் சுரங்கத்தின் ஒரு பகுதி மூடியது. இதனால் 41 தொழிலாளர்களும் சுரங்கத்திற்குள் சிக்கிக் கொண்டனர்.

இதையடுத்து, தொழிலாளர்களை மீட்கும் பணி கடந்த 10 நாட்களாக நடைபெற்று வருகிறது. அதேசமயம், தொழிலாளர்களுக்குத் தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்டவை வழங்குவதற்காக 6 அங்குல குழாய் ஒன்று அமைக்கப்பட்டது. இக்குழாய் வழியாக கேமரா ஒன்றும் அனுப்பப்பட்டது. அக்கேமரா படம்பிடித்து அனுப்பியதில், தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருப்பது தெரியவந்திருக்கிறது.

இந்த நிலையில், சில்க்யாரா சுரங்கத்தில் சிக்கி இருக்கும் 41 தொழிலாளர்களை மீட்கும் பாதையைத் தயார் செய்வதற்காக, அமெரிக்க ஆஜர் இயந்திரம் மூலம் துளையிடும் பணி ஒரே இரவில் மீண்டும் தொடங்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், “இதுவரை 800 மி.மீ. விட்டம் கொண்ட இரும்புக் குழாய்கள் இடிபாடுகள் வழியாக 32 மீட்டர் வரை சொருகப்பட்டிருக்கிறது.

ஆஜர் இயந்திரம் சுரங்கப்பாதையில் துளையிடும் பணியை மேற்கொண்டபோது அதிர்வு ஏற்பட்டதால் துளையிடும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தற்போது, ஆஜர் இயந்திரம் மூலம் துளையிடும் பணி மீண்டும் தொடங்கப்பட்டிருக்கிறது. எனவே, மீட்புப் பணிகள் தீவிரமாகும்” என்று தெரிவித்தனர்.

இதுகுறித்து எஸ்.பி. அர்பன் யதுவன்ஷி கூறுகையில், “நேற்று இரவு முதல் மீட்புப் பணியில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. 39 மீட்டரை கடந்திருக்கிறோம். தொழிலாளர்கள் அனைவரும் நலமுடன் இருக்கிறார்கள். மீட்பு நடவடிக்கை சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறது. தடைகள் ஏதும் இல்லை என்றால், தொழிலாளர்களை விரைவில் மீட்க முடியும்” என்றார்.

இதனிடையே, சுரங்கத்தில் சிக்கி இருக்கும் தொழிலாளியின் குடும்ப உறுப்பினர் சுனிதா ஹெம்ப்ராம் கூறுகையில், “இங்கே சிக்கியுள்ள எனது மைத்துனருடன் நான் பேசினேன். அவர் நலமுடனும் ஆரோக்கியமாகவும் இருக்கிறார். தொழிலாளர்களுக்கு உணவு, உடைகள் மற்றும் பிற பொருட்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. நாளை காலை அனவரும் மீட்கப்படுவார்கள் என்று நம்புகிறேன். சிக்கிய தொழிலாளர்களுடன் மருத்துவர்களும் உரையாடினர்” என்றார்.

தொழில்நுட்பம், சாலை மற்றும் போக்குவரத்து கூடுதல் செயலாளர் மஹ்மூத் அகமது கூறுகையில், “நள்ளிரவு 12:45 மணியளவில் நாங்கள் ஆகர் இயந்திரம் மூலம் துளையிடத் தொடங்கினோம். இதுவரை நாங்கள் மேலும் 3 குழாய்களை தள்ளிவிட்டோம். கூடுதலாக 800 மி.மீ. குழாய் சுரங்கப்பாதைக்குள் 21 மீட்டர் தள்ளப்பட்டிருக்கிறது.

நாங்கள் சுரங்கப்பாதையின் உள்ளே 45-50 மீட்டர் அடையும் வரை, சரியான நேரத்தை எங்களால் வழங்க முடியாது. நாங்கள் கிடைமட்ட துளையிடல் செய்கிறோம். அங்கிருந்து 8 மீட்டர் தூரத்திற்கு உள்ளே நுழைந்தோம். மீட்புப் பணியில் தடைகள் ஏதும் ஏற்படவில்லை என்றால் இன்று இரவு அல்லது நாளை காலை நல்ல செய்திகள் வரலாம். பைப்லைன் போடுவதற்கு நடுவில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை” என்றார்.

Tags: Uttarkashi TunnelRescueOperation
ShareTweetSendShare
Previous Post

அயோத்தி இராமர் கோயில் குடமுழுக்கு!

Next Post

ஊட்டி மலை இரயில் ரத்து – காரணம் என்ன?

Related News

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies