பிணைக் கைதிகளை விடுவிக்க இஸ்ரேல் - ஹமாஸ் 4 நாள் போர் நிறுத்தம்!
Oct 2, 2025, 09:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிணைக் கைதிகளை விடுவிக்க இஸ்ரேல் – ஹமாஸ் 4 நாள் போர் நிறுத்தம்!

Web Desk by Web Desk
Nov 22, 2023, 04:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஹமாஸ் தீவிரவாதிகளின் பிடியில் இருக்கும் பிணைக் கைதிகளை விடுவிப்பதற்காக, இஸ்ரேல் அமைச்சரவை 4 நாட்கள் போர் நிறுத்தம் செய்ய ஒப்புதல் வழங்கி இருக்கிறது. மேலும், ஒவ்வொரு 10 பிணைக் கைதிகளை விடுவிக்க கூடுதலாக ஒரு நாள் போர் நிறுத்தம் என்கிற வகையில், போர் நிறுத்த நாட்களை அதிகரிக்கவும் ஒப்புதல் வழங்கி இருக்கிறது.

இஸ்ரேல் நாட்டின் மீது பாலஸ்தீனத்தைச் சேர்ந்த காஸா நகரின் ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த மாதம் 7-ம் தேதி திடீரென ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். மேலும், இஸ்ரேலுக்குள் ஊடுருவி கண்ணில் பட்டவர்களை எல்லாம் கண்மூடித்தனமாக சுட்டுக் கொன்றனர்.

அதோடு, வெளிநாட்டினர் உட்பட 200-க்கும் மேற்பட்டவர்களை பிணைக் கைதிகளாகவும் பிடித்துச் சென்றனர். ஹமாஸ் தீவிரவாதிகளின் இத்தாக்குதலில் வெளிநாட்டினர் உட்பட 1,400 பேர் இஸ்ரேலில் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து, காஸா நகரின் ஹமாஸ் தீவிரவாதிகள் மீது இஸ்ரேல் இராணுவம் பதிலடித் தாக்குதலில் ஈடுபட்டது. முதலில் விமானப்படை மூலம் தாக்குதலைத் தொடங்கிய இஸ்ரேல் இராணுவம், தொடர்ந்து கப்பல்படை மற்றும் காலாட்படைகளையும் களத்தில் இறக்கி விட்டிருக்கிறது.

இஸ்ரேலின் இந்த அதிரடி நடவடிக்கையில், ஹமாஸ் தீவிரவாதிகள் தலைமையகம் உட்பட 1,400 முக்கிய தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன. மேலும், இத்தாக்குதலில் ஹமாஸ் தீவிரவாதிகள் உட்பட 14,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள்.

ஹமாஸ் – இஸ்ரேல் இடையேயான இப்போர் 46-வது நாளாக நடைபெற்று வருகிறது. நீண்ட நாட்களாகப் போர் நடைபெற்று வருவதால், காஸா நகரில் வசிக்கும் பொதுமக்கள் மனிதாபிமான உதவி கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

எனவே,  அம்மக்களுக்கு உதவிகள் கிடைக்க உலக நாடுகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக, அமெரிக்கா உதவியுடன் கத்தார் நாடு போர் நிறுத்த ஒப்பந்தம் செய்வது தொடர்பான மத்தியஸ்தரராக செயல்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக ஹமாஸ் தீவிரவாதிகள் பிடித்துச் சென்ற பிணைக் கைதிகளை விடுதலை செய்வது தொடர்பாகவும், இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீனியர்களை விடுதலை செய்வது தொடர்பாகவும் கத்தார் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இந்த சூழலில், இஸ்ரேல் இராணுவம் 4 நாட்கள் போர் நிறுத்தம் செய்தால் தாங்கள் பிடித்து வைத்திருக்கும் 240 பிணைக் கைதிகளில் 50 பேரை விடுவிப்பதாக ஹமாஸ் தீவிரவாதிகள் நிபந்தனை விதித்தனர்.

இதையடுத்து, இஸ்ரேல் அமைச்சரவை 4 நாட்கள் போர் நிறுத்தம் செய்ய ஒப்புதல் வழங்கி இருக்கிறது. மேலும், ஒவ்வொரு 10 பிணைக் கைதிகளை விடுவிக்க, கூடுதலாக ஒருநாள் போர் நிறுத்தம் என்கிற வகையில் போர் நிறுத்த நாட்களை அதிகரிக்கவும் ஒப்புதல் வழங்கி இருக்கிறது.

எனவே, ஹமாஸ் தீவிரவாதிகள் விரைவில் பிணைக் கைதிகளை விடுவிக்கும் என்றும், பதிலுக்கு இஸ்ரேல் சிறையில் இருக்கும் 150 பாலஸ்தீனர்களை விடுதலை செய்யும் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Tags: IsraelHamashostages
ShareTweetSendShare
Previous Post

பிரபல ரவுடி என்கவுண்டரில் சுட்டுக் கொலை – திருச்சியில் பரபரப்பு!

Next Post

இந்தியா – ஆப்கானிஸ்தான் : டி20 தொடர்!

Related News

விஜயதசமி பண்டிகை – கோயில்களில் சிறப்பு பூஜை, திரளான பக்தர்கள் வழிபாடு!

ட்ரம்பின் வரிவிதிப்பால் பாதிப்பில்லை- இந்தியாவின் வளர்ச்சியை பாதிக்காது என கணிப்பு!

இந்தியாவின் 5-ஆம் தலைமுறை போர் விமானங்கள் : ஒப்பந்தத்தை பெற 7 நிறுவனங்கள் போட்டா போட்டி!

கட்டாய விடுப்பில் அமெரிக்க அரசு ஊழியர்கள் : முடங்கியது அமெரிக்காவின் அரசு நிர்வாகம்!

பாகிஸ்தானில் நெருக்கடியோ நெருக்கடி : லண்டனில் ஜாலியாக பொழுதை போக்கும் ஷெபாஸ் ஷெரீப்!

காசா போரை நிறுத்த 20 அம்ச திட்டம் : 100% ஆதரவா? ‘யு’ டர்ன் போட்ட பாகிஸ்தான்!

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய குடும்பங்களில் கையிருப்பாக 25,000 டன் தங்கம் : உலக தங்க சந்தையில் டான் ஆக ஆதிக்கம் செலுத்தும் இந்தியா!

சவால்களுக்கே சவால் விடும் “டெத் டிராப்” – மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கில்லாடி “மிஸ்டர் பீஸ்ட்”!

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

இணையத்தை கலக்கும் இளம் பஞ்சாப் பாடகி : 6 நாட்களில் 30 லட்சம் பார்வைகளை கடந்த “That Girl” பாடல்!

பக்ராமை கைப்பற்ற துடிக்கும் அமெரிக்கா : இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?

ஆர்எஸ்எஸ் என்பது தேசிய உணர்வின் நல்லொழுக்க அவதாரம் : பிரதமர் மோடி

திமுக அராஜகத்திற்கு தமிழக மக்கள் முடிவுரை எழுதுவார்கள் – அண்ணாமலை

பிலிப்பைன்ஸ் : சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அதிர்ந்த கட்டடங்கள்!

மலக்குழியில் சிக்கி அப்பாவி தொழிலாளர்கள் பலியாகும் கொடூரம் எப்போது ஓயும்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

டாஸ்மாக் விவகாரத்தில் மவுனம் சாதித்த செந்தில் பாலாஜி, கரூர் சம்பவத்தில் பதறுவது ஏன்? – அதிமுக கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies