பிணைக் கைதிகளை விடுவிக்க இஸ்ரேல் - ஹமாஸ் 4 நாள் போர் நிறுத்தம்!
Jul 1, 2025, 02:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிணைக் கைதிகளை விடுவிக்க இஸ்ரேல் – ஹமாஸ் 4 நாள் போர் நிறுத்தம்!

Web Desk by Web Desk
Nov 22, 2023, 04:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஹமாஸ் தீவிரவாதிகளின் பிடியில் இருக்கும் பிணைக் கைதிகளை விடுவிப்பதற்காக, இஸ்ரேல் அமைச்சரவை 4 நாட்கள் போர் நிறுத்தம் செய்ய ஒப்புதல் வழங்கி இருக்கிறது. மேலும், ஒவ்வொரு 10 பிணைக் கைதிகளை விடுவிக்க கூடுதலாக ஒரு நாள் போர் நிறுத்தம் என்கிற வகையில், போர் நிறுத்த நாட்களை அதிகரிக்கவும் ஒப்புதல் வழங்கி இருக்கிறது.

இஸ்ரேல் நாட்டின் மீது பாலஸ்தீனத்தைச் சேர்ந்த காஸா நகரின் ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த மாதம் 7-ம் தேதி திடீரென ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். மேலும், இஸ்ரேலுக்குள் ஊடுருவி கண்ணில் பட்டவர்களை எல்லாம் கண்மூடித்தனமாக சுட்டுக் கொன்றனர்.

அதோடு, வெளிநாட்டினர் உட்பட 200-க்கும் மேற்பட்டவர்களை பிணைக் கைதிகளாகவும் பிடித்துச் சென்றனர். ஹமாஸ் தீவிரவாதிகளின் இத்தாக்குதலில் வெளிநாட்டினர் உட்பட 1,400 பேர் இஸ்ரேலில் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து, காஸா நகரின் ஹமாஸ் தீவிரவாதிகள் மீது இஸ்ரேல் இராணுவம் பதிலடித் தாக்குதலில் ஈடுபட்டது. முதலில் விமானப்படை மூலம் தாக்குதலைத் தொடங்கிய இஸ்ரேல் இராணுவம், தொடர்ந்து கப்பல்படை மற்றும் காலாட்படைகளையும் களத்தில் இறக்கி விட்டிருக்கிறது.

இஸ்ரேலின் இந்த அதிரடி நடவடிக்கையில், ஹமாஸ் தீவிரவாதிகள் தலைமையகம் உட்பட 1,400 முக்கிய தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன. மேலும், இத்தாக்குதலில் ஹமாஸ் தீவிரவாதிகள் உட்பட 14,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள்.

ஹமாஸ் – இஸ்ரேல் இடையேயான இப்போர் 46-வது நாளாக நடைபெற்று வருகிறது. நீண்ட நாட்களாகப் போர் நடைபெற்று வருவதால், காஸா நகரில் வசிக்கும் பொதுமக்கள் மனிதாபிமான உதவி கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

எனவே,  அம்மக்களுக்கு உதவிகள் கிடைக்க உலக நாடுகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக, அமெரிக்கா உதவியுடன் கத்தார் நாடு போர் நிறுத்த ஒப்பந்தம் செய்வது தொடர்பான மத்தியஸ்தரராக செயல்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக ஹமாஸ் தீவிரவாதிகள் பிடித்துச் சென்ற பிணைக் கைதிகளை விடுதலை செய்வது தொடர்பாகவும், இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீனியர்களை விடுதலை செய்வது தொடர்பாகவும் கத்தார் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இந்த சூழலில், இஸ்ரேல் இராணுவம் 4 நாட்கள் போர் நிறுத்தம் செய்தால் தாங்கள் பிடித்து வைத்திருக்கும் 240 பிணைக் கைதிகளில் 50 பேரை விடுவிப்பதாக ஹமாஸ் தீவிரவாதிகள் நிபந்தனை விதித்தனர்.

இதையடுத்து, இஸ்ரேல் அமைச்சரவை 4 நாட்கள் போர் நிறுத்தம் செய்ய ஒப்புதல் வழங்கி இருக்கிறது. மேலும், ஒவ்வொரு 10 பிணைக் கைதிகளை விடுவிக்க, கூடுதலாக ஒருநாள் போர் நிறுத்தம் என்கிற வகையில் போர் நிறுத்த நாட்களை அதிகரிக்கவும் ஒப்புதல் வழங்கி இருக்கிறது.

எனவே, ஹமாஸ் தீவிரவாதிகள் விரைவில் பிணைக் கைதிகளை விடுவிக்கும் என்றும், பதிலுக்கு இஸ்ரேல் சிறையில் இருக்கும் 150 பாலஸ்தீனர்களை விடுதலை செய்யும் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Tags: IsraelHamashostages
ShareTweetSendShare
Previous Post

பிரபல ரவுடி என்கவுண்டரில் சுட்டுக் கொலை – திருச்சியில் பரபரப்பு!

Next Post

இந்தியா – ஆப்கானிஸ்தான் : டி20 தொடர்!

Related News

மின் மோட்டார் வயர்கள் திருட்டு – போலீஸ், விவசாயிகள் இணைந்து ரோந்து பணி ஈடுபட முடிவு!

தமிழகத்தில் ஹிஸ்புத் தஹ்ரிர் பயங்கரவாதி : குற்றவாளிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்த என்ஐஏ!

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து : பலி எண்ணிக்கை 6 ஆக அதிகரிப்பு!

பாலியல் தொல்லை அளித்த கணவர், மாமனார் : தற்கொலை செய்துகொண்ட பெண்ணின் தந்தை வேதனை!

திண்டுக்கல் : மீண்டும் ஒரு வேங்கை வயல் சம்பவம் – ஆட்சியரிடம் மக்கள் மனு!

சிவகங்கை மாவட்ட எஸ்.பி. காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

Load More

அண்மைச் செய்திகள்

6 பேர் மரணத்திற்கு காரணமான குவாரி உரிமையாளருக்கு முன் ஜாமின்!

பட்டாசு ஆலை விபத்து : உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் : நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

தனியார் பட்டாசு ஆலைகளில் முறையான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் : எல்.முருகன் வலியுறுத்தல்!

பாசிச ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் : நயினார் நாகேந்திரன் உறுதி!

ஈரானால் யுரேனியம் செறிவூட்டலை மீண்டும் தொடங்க முடியும் : சர்வதேச அணுசக்தி முகமையின் தலைவர் ரஃபேல் க்ரோசி!

திண்டுக்கல் : தீவிர சோதனைக்கு பிறகு குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களுக்கு அனுமதி!

அமெரிக்கா : இசை நிகழ்ச்சியின் போது அந்தரத்தில் தொங்கிய பாடகி பியான்ஸ்!

வங்கதேச சணல் – இறக்குமதிக்கு தடை!

மதுரை : சம்பள உயர்வு, காலிப்பணியிடங்களை நிரப்ப கோரி தூய்மை பணியாளர்கள் போராட்டம்!

காசா : குடியிருப்புகள் மீது இஸ்ரேல் தாக்குதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies