பிணைக் கைதிகளை விடுவிக்க இஸ்ரேல் - ஹமாஸ் 4 நாள் போர் நிறுத்தம்!
Jun 24, 2026, 08:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிணைக் கைதிகளை விடுவிக்க இஸ்ரேல் – ஹமாஸ் 4 நாள் போர் நிறுத்தம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 22, 2023, 04:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஹமாஸ் தீவிரவாதிகளின் பிடியில் இருக்கும் பிணைக் கைதிகளை விடுவிப்பதற்காக, இஸ்ரேல் அமைச்சரவை 4 நாட்கள் போர் நிறுத்தம் செய்ய ஒப்புதல் வழங்கி இருக்கிறது. மேலும், ஒவ்வொரு 10 பிணைக் கைதிகளை விடுவிக்க கூடுதலாக ஒரு நாள் போர் நிறுத்தம் என்கிற வகையில், போர் நிறுத்த நாட்களை அதிகரிக்கவும் ஒப்புதல் வழங்கி இருக்கிறது.

இஸ்ரேல் நாட்டின் மீது பாலஸ்தீனத்தைச் சேர்ந்த காஸா நகரின் ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த மாதம் 7-ம் தேதி திடீரென ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். மேலும், இஸ்ரேலுக்குள் ஊடுருவி கண்ணில் பட்டவர்களை எல்லாம் கண்மூடித்தனமாக சுட்டுக் கொன்றனர்.

அதோடு, வெளிநாட்டினர் உட்பட 200-க்கும் மேற்பட்டவர்களை பிணைக் கைதிகளாகவும் பிடித்துச் சென்றனர். ஹமாஸ் தீவிரவாதிகளின் இத்தாக்குதலில் வெளிநாட்டினர் உட்பட 1,400 பேர் இஸ்ரேலில் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து, காஸா நகரின் ஹமாஸ் தீவிரவாதிகள் மீது இஸ்ரேல் இராணுவம் பதிலடித் தாக்குதலில் ஈடுபட்டது. முதலில் விமானப்படை மூலம் தாக்குதலைத் தொடங்கிய இஸ்ரேல் இராணுவம், தொடர்ந்து கப்பல்படை மற்றும் காலாட்படைகளையும் களத்தில் இறக்கி விட்டிருக்கிறது.

இஸ்ரேலின் இந்த அதிரடி நடவடிக்கையில், ஹமாஸ் தீவிரவாதிகள் தலைமையகம் உட்பட 1,400 முக்கிய தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன. மேலும், இத்தாக்குதலில் ஹமாஸ் தீவிரவாதிகள் உட்பட 14,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள்.

ஹமாஸ் – இஸ்ரேல் இடையேயான இப்போர் 46-வது நாளாக நடைபெற்று வருகிறது. நீண்ட நாட்களாகப் போர் நடைபெற்று வருவதால், காஸா நகரில் வசிக்கும் பொதுமக்கள் மனிதாபிமான உதவி கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

எனவே,  அம்மக்களுக்கு உதவிகள் கிடைக்க உலக நாடுகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக, அமெரிக்கா உதவியுடன் கத்தார் நாடு போர் நிறுத்த ஒப்பந்தம் செய்வது தொடர்பான மத்தியஸ்தரராக செயல்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக ஹமாஸ் தீவிரவாதிகள் பிடித்துச் சென்ற பிணைக் கைதிகளை விடுதலை செய்வது தொடர்பாகவும், இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீனியர்களை விடுதலை செய்வது தொடர்பாகவும் கத்தார் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இந்த சூழலில், இஸ்ரேல் இராணுவம் 4 நாட்கள் போர் நிறுத்தம் செய்தால் தாங்கள் பிடித்து வைத்திருக்கும் 240 பிணைக் கைதிகளில் 50 பேரை விடுவிப்பதாக ஹமாஸ் தீவிரவாதிகள் நிபந்தனை விதித்தனர்.

இதையடுத்து, இஸ்ரேல் அமைச்சரவை 4 நாட்கள் போர் நிறுத்தம் செய்ய ஒப்புதல் வழங்கி இருக்கிறது. மேலும், ஒவ்வொரு 10 பிணைக் கைதிகளை விடுவிக்க, கூடுதலாக ஒருநாள் போர் நிறுத்தம் என்கிற வகையில் போர் நிறுத்த நாட்களை அதிகரிக்கவும் ஒப்புதல் வழங்கி இருக்கிறது.

எனவே, ஹமாஸ் தீவிரவாதிகள் விரைவில் பிணைக் கைதிகளை விடுவிக்கும் என்றும், பதிலுக்கு இஸ்ரேல் சிறையில் இருக்கும் 150 பாலஸ்தீனர்களை விடுதலை செய்யும் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Tags: IsraelHamashostages
ShareTweetSendShare
Previous Post

பிரபல ரவுடி என்கவுண்டரில் சுட்டுக் கொலை – திருச்சியில் பரபரப்பு!

Next Post

இந்தியா – ஆப்கானிஸ்தான் : டி20 தொடர்!

Related News

முதலமைச்சர் விஜய்யின் பேச்சால் அமளி; சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு

இடைத் தேர்தலில் சீட் கிடைக்குமா ?; முன்னாள் அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு சிக்கல்

ரூ.340 கோடிக்கு ‘நோ’ சொன்ன முன்னாள் காதலி : எலான் மஸ்க்கை அதிரவைத்த ஆஷ்லி செயிண்ட் கிளேர் – சிறப்பு தொகுப்பு!

ஆபத்தான ரசாயனத்துக்கு ஐரோப்பாவில் தடை : மெல்ல கொல்லும் நஞ்சாகிறதா நமது உணவு? – சிறப்பு கட்டுரை!

பாகிஸ்தான் அரசுக்கு எதிர்ப்பு – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 19-வது நாளாக போராட்டம், நீடிக்கும் பதற்றம்!

பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலக மாட்டேன் – துரைமுருகன் முடிவால் திமுகவில் குழப்பம்!

Load More

அண்மைச் செய்திகள்

கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை வீசும் வாய்ப்பு உள்ளது – ஓபிஎஸ் பேச்சால் சபையில் சிரிப்பலை!

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 2 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies