பிணைக் கைதிகளை விடுவிக்க இஸ்ரேல் - ஹமாஸ் 4 நாள் போர் நிறுத்தம்!
Aug 8, 2026, 10:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிணைக் கைதிகளை விடுவிக்க இஸ்ரேல் – ஹமாஸ் 4 நாள் போர் நிறுத்தம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 22, 2023, 04:02 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஹமாஸ் தீவிரவாதிகளின் பிடியில் இருக்கும் பிணைக் கைதிகளை விடுவிப்பதற்காக, இஸ்ரேல் அமைச்சரவை 4 நாட்கள் போர் நிறுத்தம் செய்ய ஒப்புதல் வழங்கி இருக்கிறது. மேலும், ஒவ்வொரு 10 பிணைக் கைதிகளை விடுவிக்க கூடுதலாக ஒரு நாள் போர் நிறுத்தம் என்கிற வகையில், போர் நிறுத்த நாட்களை அதிகரிக்கவும் ஒப்புதல் வழங்கி இருக்கிறது.

இஸ்ரேல் நாட்டின் மீது பாலஸ்தீனத்தைச் சேர்ந்த காஸா நகரின் ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த மாதம் 7-ம் தேதி திடீரென ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். மேலும், இஸ்ரேலுக்குள் ஊடுருவி கண்ணில் பட்டவர்களை எல்லாம் கண்மூடித்தனமாக சுட்டுக் கொன்றனர்.

அதோடு, வெளிநாட்டினர் உட்பட 200-க்கும் மேற்பட்டவர்களை பிணைக் கைதிகளாகவும் பிடித்துச் சென்றனர். ஹமாஸ் தீவிரவாதிகளின் இத்தாக்குதலில் வெளிநாட்டினர் உட்பட 1,400 பேர் இஸ்ரேலில் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து, காஸா நகரின் ஹமாஸ் தீவிரவாதிகள் மீது இஸ்ரேல் இராணுவம் பதிலடித் தாக்குதலில் ஈடுபட்டது. முதலில் விமானப்படை மூலம் தாக்குதலைத் தொடங்கிய இஸ்ரேல் இராணுவம், தொடர்ந்து கப்பல்படை மற்றும் காலாட்படைகளையும் களத்தில் இறக்கி விட்டிருக்கிறது.

இஸ்ரேலின் இந்த அதிரடி நடவடிக்கையில், ஹமாஸ் தீவிரவாதிகள் தலைமையகம் உட்பட 1,400 முக்கிய தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன. மேலும், இத்தாக்குதலில் ஹமாஸ் தீவிரவாதிகள் உட்பட 14,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள்.

ஹமாஸ் – இஸ்ரேல் இடையேயான இப்போர் 46-வது நாளாக நடைபெற்று வருகிறது. நீண்ட நாட்களாகப் போர் நடைபெற்று வருவதால், காஸா நகரில் வசிக்கும் பொதுமக்கள் மனிதாபிமான உதவி கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

எனவே,  அம்மக்களுக்கு உதவிகள் கிடைக்க உலக நாடுகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக, அமெரிக்கா உதவியுடன் கத்தார் நாடு போர் நிறுத்த ஒப்பந்தம் செய்வது தொடர்பான மத்தியஸ்தரராக செயல்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக ஹமாஸ் தீவிரவாதிகள் பிடித்துச் சென்ற பிணைக் கைதிகளை விடுதலை செய்வது தொடர்பாகவும், இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீனியர்களை விடுதலை செய்வது தொடர்பாகவும் கத்தார் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இந்த சூழலில், இஸ்ரேல் இராணுவம் 4 நாட்கள் போர் நிறுத்தம் செய்தால் தாங்கள் பிடித்து வைத்திருக்கும் 240 பிணைக் கைதிகளில் 50 பேரை விடுவிப்பதாக ஹமாஸ் தீவிரவாதிகள் நிபந்தனை விதித்தனர்.

இதையடுத்து, இஸ்ரேல் அமைச்சரவை 4 நாட்கள் போர் நிறுத்தம் செய்ய ஒப்புதல் வழங்கி இருக்கிறது. மேலும், ஒவ்வொரு 10 பிணைக் கைதிகளை விடுவிக்க, கூடுதலாக ஒருநாள் போர் நிறுத்தம் என்கிற வகையில் போர் நிறுத்த நாட்களை அதிகரிக்கவும் ஒப்புதல் வழங்கி இருக்கிறது.

எனவே, ஹமாஸ் தீவிரவாதிகள் விரைவில் பிணைக் கைதிகளை விடுவிக்கும் என்றும், பதிலுக்கு இஸ்ரேல் சிறையில் இருக்கும் 150 பாலஸ்தீனர்களை விடுதலை செய்யும் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Tags: IsraelHamashostages
Share
Tweet
SendShare
Previous Post

பிரபல ரவுடி என்கவுண்டரில் சுட்டுக் கொலை – திருச்சியில் பரபரப்பு!

Next Post

இந்தியா – ஆப்கானிஸ்தான் : டி20 தொடர்!

Related News

ஆடி வெள்ளி – தங்கத் தேரில் காஞ்சி காமாட்சி அம்மன் முப்பெரும் தேவியர்!

இன்று திருவண்ணாமலை வருகிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா – பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டம் – திமுக புறக்கணிப்பு!

இந்தியாவுடன் மீண்டும் மோத தயாராகும் அசீம் முனீர் : சீனா, துருக்கி உதவியுடன் ட்ரோன்கள், ஏவுகணைகளை குவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

பழனி கோயில் நில முறைகேடு விவகாரம் சார்பதிவாளர் – ஜஸ்டின் மணிகண்டனுக்கு 21-ம் தேதி வரை நீதிமன்ற காவல்!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மீது நடவடிக்கை? : உரிமைக் குழு விசாரணைக்கு அனுப்ப சபாநாயகர் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தான், சவுதி அரேபியா, துருக்கி இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

ரீல்ஸ் மோகம் மற்றும் போதைப் பொருள் புழக்கத்தால் தமிழகத்தில் பெருகும் வன்முறைக் கலாச்சாரம் – நயினார் நாகேந்திரன்

வெளிநடப்பு செய்தால், பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டியிருக்கும் – உள்துறை அமைச்சர் அமித் ஷா

இன்றைய தங்கம் விலை!

திமுக நிர்வாகிகள் பலர் சாராய ஆலை நடத்துகின்றனர் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

ஆதவ் அர்ஜுனா தான் எம்எல்ஏ சீட் வாங்கி கொடுத்தார் – ரகசியம் உடைத்த திமுக எம்எல்ஏ!

டாஸ்மாக் மதுபான கடையில் கூடுதல் தொகை வசூலித்தால் காவல்துறையிடம் புகார் அளிக்கலாம் – உயர் நீதிமன்றம்

தேசிய கைத்தறி தினம் – நெசவு ஆடைகளை வாங்கி, கட்சி நிர்வாகிகளுக்கு அன்பளிப்பாக வழங்கிய பாஜக நிர்வாகி!

விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார் முதலமைச்சர் விஜய் மனைவி சங்கீதா!

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி – அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.க்களை கடிந்து கொண்ட சிபிஆர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies