போக்சோ வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு விலங்கு - நாராயணன் திருப்பதி கண்டனம்!
Mar 15, 2026, 06:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

போக்சோ வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு விலங்கு – நாராயணன் திருப்பதி கண்டனம்!

Murugesan M by Murugesan M
Nov 22, 2023, 02:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஊட்டியில், போக்சோ வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவரை வாக்குமூலம் அளிக்க நீதிமன்றத்திற்கு விலங்கிட்டு அழைத்து சென்ற கொடூரம் வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும், காவல் துறையும் வெட்கி தலை குனிய வேண்டிய செயல் என்றும் தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

ஊட்டியில், போக்சோ வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவரை வாக்குமூலம் அளிக்க நீதிமன்றத்திற்கு விலங்கிட்டு அழைத்து சென்ற கொடூரம் வன்மையாக கண்டிக்கத்தக்கது, கடும் குற்றச்செயலும் கூட. அக்டோபர் 6ம் தேதியன்று அளிக்கப்பட்ட புகார் மீது முதல் தகவல் அறிக்கை நவம்பர் 2ம் தேதி பதியப்பட்டதோடு,…

— Narayanan Thirupathy (@narayanantbjp) November 22, 2023

ஊட்டியில், போக்சோ வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவரை வாக்குமூலம் அளிக்க நீதிமன்றத்திற்கு விலங்கிட்டு அழைத்து சென்ற கொடூரம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. கடும் குற்றச்செயலும் கூட.

அக்டோபர் 6ம் தேதியன்று அளிக்கப்பட்ட புகார் மீது முதல் தகவல் அறிக்கை நவம்பர் 2 -ம் தேதி பதியப்பட்டதோடு, குற்றம் சாட்டப்பட்ட நபரை கைது செய்யாமல் தப்பிக்க விட்டது வெட்கக்கேடு.

பின்னர் நவம்பர் 7 -ம் தேதி வாக்குமூலம் அளிக்க பேருந்தில் அழைத்து சென்று நீதிமன்றம் வரையில் அந்த சிறுமிக்கு கைவிலங்கிட்டு அழைத்து சென்றதுடன், திரும்பி வரும்போதும் பொது மக்கள் முன்னிலையில் கைதி போன்று அழைத்து சென்ற அவலம் தமிழக அரசும், காவல் துறையும் வெட்கி தலை குனிய வேண்டிய செயல்.

அதன் பின்னர் அந்த சிறுமியின் தாய் சிறுமியின் கைப்பட எழுதிய புகாரை விசாரிக்க நீலகிரி மாவட்ட கண்காணிப்பாளரால் அனுப்பப்பட்ட காவல் துறை அதிகாரியால் மிரட்டப்பட்டதாகவும், கைவிலங்கிட்டு அழைத்து சென்றதாக பொய் புகார் அளித்ததாகவும் மற்றொரு கடிதத்தை அச்சிறுமியிடம் எழுதி வாங்கிக் கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த குற்றச்சாட்டை தீவிரமாக விசாரித்து தொடர்புடைய காவல்துறை அதிகாரிகள் மீது, ஒரு குழந்தையின் கண்ணியத்தை குலைக்கும் விதமாகவும், மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காகவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Tags: narayanan thiruppathidmk fails
ShareTweetSendShare
Previous Post

திமுக பேசுவது ஒன்று, செயல்படுவது ஒன்று – வானதி சீனிவாசன் விளாசல்!

Next Post

சந்திரயான் – 4 : 2 ஆண்டுகளில் விண்ணில் ஏவப்படும்!

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies