கொல்கத்தா அணிக்கு மீண்டும் திரும்பும் கெளதம் கம்பிர்!
Jul 26, 2025, 07:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கொல்கத்தா அணிக்கு மீண்டும் திரும்பும் கெளதம் கம்பிர்!

Web Desk by Web Desk
Nov 22, 2023, 04:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் ஆலோசகராக செயல்பட்டு வந்த இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கெளதம் கம்பீர், திடீரென பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அணிகளின் எணிக்கையை 10 ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்ட போது, லக்னோ மற்றும் குஜராத் அணிகள் அறிமுகம் செய்யப்பட்டன.

இதில் லக்னோ அணியை சுமார் ரூ.7 ஆயிரம் கோடிக்கும் அதிக தொகை கொடுத்து சஞ்சீவ் கொயங்கா வாங்கினார். இதையடுத்து உடனடியாக லக்னோ அணியின் ஆலோசகராக கெளதம் கம்பீர் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதன் காரணமாக லக்னோ அணியை கட்டமைக்கும் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து கெளதம் கம்பீர் அறிவுறுத்தலின் பேரில் லக்னோ அணியின் பயிற்சியாளராக ஆண்டி பிளவர், பவுலிங் பயிற்சியாளாராக மார்னே மோர்கல், பீல்டிங் பயிற்சியாளராக ஜான்டி ரோட்ஸ் உள்ளிட்டோர் ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.

அது மட்டுமல்லாமல் லக்னோ அணியின் கேப்டனாக நட்சத்திர வீரர் கேஎல் ராகுலை ஏலத்தில் விடாமலேயே ஒப்பந்தம் செய்தது. இதன்பின் கெளதம் கம்பீர் தலைமையில் லக்னோ அணி ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்று தரமான வீரர்களை சிறந்த தொகை கொடுத்து வாங்கியது.

அதேபோல் இளம் வீரர்களான ஆயுஷ் பதோனி, ஆவேஷ் கான், மோசின் கான், தீபக் ஹூடா உள்ளிட்டோரையும் வாங்கி அசத்தியது.

இதன்பின் நடைபெற்ற 2 ஐபிஎல் தொடர்களிலும் லக்னோ அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. இருந்தாலும் லக்னோ அணி கோப்பையை வெல்ல முடியாததால், அந்த அணி நிர்வாகம் பயிற்சியாளர்களை மாற்ற முடிவு செய்தது.

அதன்படி பயிற்சியாளர் ஆண்டி பிளவர் ஒப்பந்தம் முடிவடைந்த சூழலில், புதிய பயிற்சியாளராக ஜஸ்டின் லாங்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து லக்னோ அணியில் இருந்து கெளதம் கம்பீர் விலகவுள்ளதாக தகவல் வெளியாகியது. இதற்கேற்ப கவுதம் கம்பீர் அண்மையில் ஷாரூக் கானை சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார்.

இந்த நிலையில் லக்னோ அணியில் ஆலோசகர் பதவியில் இருந்து விலகுவதாக கெளதம் கம்பீர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், லக்னோ அணியுடனான மிகச்சிறந்த பயணம் முடிவுக்கு வந்துள்ளது. இந்த அற்புதமான பயணத்திற்கு துணையாக இருந்த அனைத்து வீரர்கள், பயிற்சியாளர்கள், ஊழியர்கள் மற்றும் அனைவருக்கும் நன்றி கூட கடமைப்பட்டுள்ளேன்.

❤️❤️ LSG Brigade! pic.twitter.com/xfG3YBu6l4

— Gautam Gambhir (@GautamGambhir) November 22, 2023

குறிப்பாக அனைத்து வகையிலும் எனக்கு ஆதரவளித்த லக்னோ அணி உரிமையாளர் சஞ்சீய் கொயங்காவிற்கு நன்றி கூறி கொள்கிறேன். வரும் காலங்களில் லக்னோ அணி மிகச்சிறந்த சாதனை படைத்து, ஒவ்வொரு லக்னோ அணி ரசிகனையும் பெருமை கொள்ள வைக்கும் என்று தெரிவித்துள்ளார்.

கெளதம் கம்பீர் அறிவித்த சில நிமிடங்களிலேயே, கொல்கத்தா அணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், வெல்கம் பேக் கவுதம் கம்பீர் என்று பதிவிட்டுள்ளது. இதன் மூலம் கொல்கத்தா அணியின் ஆலோசகராக கெளதம் கம்பீர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது.

கொல்கத்தா அணியின் கேப்டனாக 2 முறை கோப்பையை வென்று கொடுத்துள்ள கெளதம் கம்பீர், இம்முறை ஆலோசகராக களமிறங்கவுள்ளார்.

இதனால் கேகேஆர் அணியில் ஏராளமான மாற்றங்கள் நடக்கலாம் என்று பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் கெளதம் கம்பீருக்கு முழு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.

Tags: ipl cricketgautam gambhiripl
ShareTweetSendShare
Previous Post

மழைநீரில் சிக்கிய சென்னை மாநகரப் பேருந்து!

Next Post

வாழ்க்கை மதிப்புகளை நன்னெறிக் கல்வி நமக்கு உணர்த்துகிறது! – குடியரசுத் தலைவர்

Related News

பிரதமர் மோடியை ஆரத்தழுவி வரவேற்ற மாலத்தீவு அதிபர் முய்சு!

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை : கைது செய்யப்பட்ட அசாமை சேர்ந்த நபரிடம் விசாரணை!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

சிவன் கோயில் உரிமை யாருக்கு? : தாய்லாந்து- கம்போடியா ராணுவ மோதல் பின்னணி!

Load More

அண்மைச் செய்திகள்

அசீம் முனீரை அவமானப்படுத்திய சீனா : பூட்டிய அறையில் நடந்தது என்ன? – பாக்.,கிற்கு இறுதி எச்சரிக்கை!

பில்லியனர் ஆனா சுந்தர் பிச்சை : சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies