கொல்கத்தா அணிக்கு மீண்டும் திரும்பும் கெளதம் கம்பிர்!
Jan 14, 2026, 04:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கொல்கத்தா அணிக்கு மீண்டும் திரும்பும் கெளதம் கம்பிர்!

Murugesan M by Murugesan M
Nov 22, 2023, 04:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் ஆலோசகராக செயல்பட்டு வந்த இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கெளதம் கம்பீர், திடீரென பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அணிகளின் எணிக்கையை 10 ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்ட போது, லக்னோ மற்றும் குஜராத் அணிகள் அறிமுகம் செய்யப்பட்டன.

இதில் லக்னோ அணியை சுமார் ரூ.7 ஆயிரம் கோடிக்கும் அதிக தொகை கொடுத்து சஞ்சீவ் கொயங்கா வாங்கினார். இதையடுத்து உடனடியாக லக்னோ அணியின் ஆலோசகராக கெளதம் கம்பீர் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதன் காரணமாக லக்னோ அணியை கட்டமைக்கும் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து கெளதம் கம்பீர் அறிவுறுத்தலின் பேரில் லக்னோ அணியின் பயிற்சியாளராக ஆண்டி பிளவர், பவுலிங் பயிற்சியாளாராக மார்னே மோர்கல், பீல்டிங் பயிற்சியாளராக ஜான்டி ரோட்ஸ் உள்ளிட்டோர் ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.

அது மட்டுமல்லாமல் லக்னோ அணியின் கேப்டனாக நட்சத்திர வீரர் கேஎல் ராகுலை ஏலத்தில் விடாமலேயே ஒப்பந்தம் செய்தது. இதன்பின் கெளதம் கம்பீர் தலைமையில் லக்னோ அணி ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்று தரமான வீரர்களை சிறந்த தொகை கொடுத்து வாங்கியது.

அதேபோல் இளம் வீரர்களான ஆயுஷ் பதோனி, ஆவேஷ் கான், மோசின் கான், தீபக் ஹூடா உள்ளிட்டோரையும் வாங்கி அசத்தியது.

இதன்பின் நடைபெற்ற 2 ஐபிஎல் தொடர்களிலும் லக்னோ அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. இருந்தாலும் லக்னோ அணி கோப்பையை வெல்ல முடியாததால், அந்த அணி நிர்வாகம் பயிற்சியாளர்களை மாற்ற முடிவு செய்தது.

அதன்படி பயிற்சியாளர் ஆண்டி பிளவர் ஒப்பந்தம் முடிவடைந்த சூழலில், புதிய பயிற்சியாளராக ஜஸ்டின் லாங்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து லக்னோ அணியில் இருந்து கெளதம் கம்பீர் விலகவுள்ளதாக தகவல் வெளியாகியது. இதற்கேற்ப கவுதம் கம்பீர் அண்மையில் ஷாரூக் கானை சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார்.

இந்த நிலையில் லக்னோ அணியில் ஆலோசகர் பதவியில் இருந்து விலகுவதாக கெளதம் கம்பீர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், லக்னோ அணியுடனான மிகச்சிறந்த பயணம் முடிவுக்கு வந்துள்ளது. இந்த அற்புதமான பயணத்திற்கு துணையாக இருந்த அனைத்து வீரர்கள், பயிற்சியாளர்கள், ஊழியர்கள் மற்றும் அனைவருக்கும் நன்றி கூட கடமைப்பட்டுள்ளேன்.

❤️❤️ LSG Brigade! pic.twitter.com/xfG3YBu6l4

— Gautam Gambhir (@GautamGambhir) November 22, 2023

குறிப்பாக அனைத்து வகையிலும் எனக்கு ஆதரவளித்த லக்னோ அணி உரிமையாளர் சஞ்சீய் கொயங்காவிற்கு நன்றி கூறி கொள்கிறேன். வரும் காலங்களில் லக்னோ அணி மிகச்சிறந்த சாதனை படைத்து, ஒவ்வொரு லக்னோ அணி ரசிகனையும் பெருமை கொள்ள வைக்கும் என்று தெரிவித்துள்ளார்.

கெளதம் கம்பீர் அறிவித்த சில நிமிடங்களிலேயே, கொல்கத்தா அணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், வெல்கம் பேக் கவுதம் கம்பீர் என்று பதிவிட்டுள்ளது. இதன் மூலம் கொல்கத்தா அணியின் ஆலோசகராக கெளதம் கம்பீர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது.

கொல்கத்தா அணியின் கேப்டனாக 2 முறை கோப்பையை வென்று கொடுத்துள்ள கெளதம் கம்பீர், இம்முறை ஆலோசகராக களமிறங்கவுள்ளார்.

இதனால் கேகேஆர் அணியில் ஏராளமான மாற்றங்கள் நடக்கலாம் என்று பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் கெளதம் கம்பீருக்கு முழு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.

Tags: iplipl cricketgautam gambhir
ShareTweetSendShare
Previous Post

மழைநீரில் சிக்கிய சென்னை மாநகரப் பேருந்து!

Next Post

வாழ்க்கை மதிப்புகளை நன்னெறிக் கல்வி நமக்கு உணர்த்துகிறது! – குடியரசுத் தலைவர்

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies