கொல்கத்தா அணிக்கு மீண்டும் திரும்பும் கெளதம் கம்பிர்!
Sep 13, 2026, 01:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கொல்கத்தா அணிக்கு மீண்டும் திரும்பும் கெளதம் கம்பிர்!

Murugesan M by Murugesan M
Nov 22, 2023, 04:46 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் ஆலோசகராக செயல்பட்டு வந்த இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கெளதம் கம்பீர், திடீரென பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அணிகளின் எணிக்கையை 10 ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்ட போது, லக்னோ மற்றும் குஜராத் அணிகள் அறிமுகம் செய்யப்பட்டன.

இதில் லக்னோ அணியை சுமார் ரூ.7 ஆயிரம் கோடிக்கும் அதிக தொகை கொடுத்து சஞ்சீவ் கொயங்கா வாங்கினார். இதையடுத்து உடனடியாக லக்னோ அணியின் ஆலோசகராக கெளதம் கம்பீர் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதன் காரணமாக லக்னோ அணியை கட்டமைக்கும் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து கெளதம் கம்பீர் அறிவுறுத்தலின் பேரில் லக்னோ அணியின் பயிற்சியாளராக ஆண்டி பிளவர், பவுலிங் பயிற்சியாளாராக மார்னே மோர்கல், பீல்டிங் பயிற்சியாளராக ஜான்டி ரோட்ஸ் உள்ளிட்டோர் ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.

அது மட்டுமல்லாமல் லக்னோ அணியின் கேப்டனாக நட்சத்திர வீரர் கேஎல் ராகுலை ஏலத்தில் விடாமலேயே ஒப்பந்தம் செய்தது. இதன்பின் கெளதம் கம்பீர் தலைமையில் லக்னோ அணி ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்று தரமான வீரர்களை சிறந்த தொகை கொடுத்து வாங்கியது.

அதேபோல் இளம் வீரர்களான ஆயுஷ் பதோனி, ஆவேஷ் கான், மோசின் கான், தீபக் ஹூடா உள்ளிட்டோரையும் வாங்கி அசத்தியது.

இதன்பின் நடைபெற்ற 2 ஐபிஎல் தொடர்களிலும் லக்னோ அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. இருந்தாலும் லக்னோ அணி கோப்பையை வெல்ல முடியாததால், அந்த அணி நிர்வாகம் பயிற்சியாளர்களை மாற்ற முடிவு செய்தது.

அதன்படி பயிற்சியாளர் ஆண்டி பிளவர் ஒப்பந்தம் முடிவடைந்த சூழலில், புதிய பயிற்சியாளராக ஜஸ்டின் லாங்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து லக்னோ அணியில் இருந்து கெளதம் கம்பீர் விலகவுள்ளதாக தகவல் வெளியாகியது. இதற்கேற்ப கவுதம் கம்பீர் அண்மையில் ஷாரூக் கானை சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார்.

இந்த நிலையில் லக்னோ அணியில் ஆலோசகர் பதவியில் இருந்து விலகுவதாக கெளதம் கம்பீர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், லக்னோ அணியுடனான மிகச்சிறந்த பயணம் முடிவுக்கு வந்துள்ளது. இந்த அற்புதமான பயணத்திற்கு துணையாக இருந்த அனைத்து வீரர்கள், பயிற்சியாளர்கள், ஊழியர்கள் மற்றும் அனைவருக்கும் நன்றி கூட கடமைப்பட்டுள்ளேன்.

❤️❤️ LSG Brigade! pic.twitter.com/xfG3YBu6l4

— Gautam Gambhir (@GautamGambhir) November 22, 2023

குறிப்பாக அனைத்து வகையிலும் எனக்கு ஆதரவளித்த லக்னோ அணி உரிமையாளர் சஞ்சீய் கொயங்காவிற்கு நன்றி கூறி கொள்கிறேன். வரும் காலங்களில் லக்னோ அணி மிகச்சிறந்த சாதனை படைத்து, ஒவ்வொரு லக்னோ அணி ரசிகனையும் பெருமை கொள்ள வைக்கும் என்று தெரிவித்துள்ளார்.

கெளதம் கம்பீர் அறிவித்த சில நிமிடங்களிலேயே, கொல்கத்தா அணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், வெல்கம் பேக் கவுதம் கம்பீர் என்று பதிவிட்டுள்ளது. இதன் மூலம் கொல்கத்தா அணியின் ஆலோசகராக கெளதம் கம்பீர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது.

கொல்கத்தா அணியின் கேப்டனாக 2 முறை கோப்பையை வென்று கொடுத்துள்ள கெளதம் கம்பீர், இம்முறை ஆலோசகராக களமிறங்கவுள்ளார்.

இதனால் கேகேஆர் அணியில் ஏராளமான மாற்றங்கள் நடக்கலாம் என்று பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் கெளதம் கம்பீருக்கு முழு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.

Tags: iplipl cricketgautam gambhir
Share
Tweet
SendShare
Previous Post

மழைநீரில் சிக்கிய சென்னை மாநகரப் பேருந்து!

Next Post

வாழ்க்கை மதிப்புகளை நன்னெறிக் கல்வி நமக்கு உணர்த்துகிறது! – குடியரசுத் தலைவர்

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies