விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 12,000: அமித்ஷா அறிவிப்பு!
Jul 27, 2025, 03:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 12,000: அமித்ஷா அறிவிப்பு!

Web Desk by Web Desk
Nov 22, 2023, 06:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராஜஸ்தானில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால், பி.எம்.கிசான் சம்மன் நிதி 6,000 ரூபாயில் இருந்து 12,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருக்கிறார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் வரும் 25-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இம்மாநிலத்தைப் பொறுத்தவரை ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. இதனால், இரு கட்சிகளின் தலைவர்களும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், ராஜஸ்தான் மாநிலம் ஜாலோர் மற்றும் பாலியில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ​”புதிய நாடாளுமன்றக் கட்டடம் திறக்கப்பட்ட பிறகு, நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீட்டை மோடி வழங்கினார்.

ஆனால், கெலாட் அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது? கடந்த 5 ஆண்டுகளில் ராஜஸ்தானில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்பாக 5 லட்சத்திற்கும் அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவில் உள்ள மொத்த பலாத்கார வழக்குகளில் 22% ராஜஸ்தானைச் சேர்ந்தவை. எங்கள் தாய்மார்கள் மற்றும் மகள்களின் பாதுகாப்பை கெலாட் அரசால் உறுதிப்படுத்த முடியாது. ஆனால், பா.ஜ.க. பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் என்று நான் உறுதியளிக்கிறேன்.

அசோக் கெலாட் தனது மகனை முதல்வராக்க விரும்புகிறார். சோனியா தனது மகனை பிரதமராக்க விரும்புகிறார். யாராவது ஜாலோர் மக்களைப் பற்றி நினைக்கிறார்களா? அவர்கள் உங்களைப் பற்றி சிந்திக்க மாட்டார்கள்.

ஆனால், பிரதமர் மோடி உங்கள் அனைவரைப் பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டிருக்கிறார். எங்கள் அரசு அமைந்த பிறகு பி.எம்.கிசான் சம்மன் நிதி 6,000 ரூபாயில் இருந்து 12,000 ரூபாயாக உயர்த்தப்படும்.

தினையை குறைந்த ஆதார விலைக்கு வழங்குவோம். சமையல் எரிவாயு சிலிண்டர்களை 450 ரூபாய்க்கு பா.ஜ.க. தரும். பிரதமர் மோடி எத்தனையோ வளர்ச்சிப் பணிகளைச் செய்திருக்கிறார். சந்திரயான் மூலம் இந்தியாவின் கொடியை சந்திரனை அடையச் செய்தார்.

புதிய நாடாளுமன்றக் கட்டடமும், கர்தவ்ய பாதையும் உருவாக்கப்பட்டன.11-வது இடத்தில் இருந்த இந்திய பொருளாதாரத்தை 5-வது இடத்திற்கு கொண்டு வந்திருக்கிறார்” என்றார்.

Tags: ElectionRajasthanAmit shaCompaign
ShareTweetSendShare
Previous Post

பிரம்மோஸ் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்திய ஐ.என்.எஸ். இம்பால்!

Next Post

உலக அரங்கில் பாரதம் வேகமாக முன்னேறி வருகிறது! – ஆளுநர் ஆர்.என்.ரவி

Related News

கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரதமர் ரோடு ஷோ – உற்சாக வரவேற்பு அளித்த பொதுமக்கள்!

பிரதமர் மோடியிடம் 3 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார் இபிஎஸ்!

பிரதமரிடம் கோரிக்கை மனு – முதல்வர் சார்பில் வழங்கினார் அமைச்சர் தங்கம் தென்னரசு!

ஓலைச்சுவடிகளில் பாதுகாக்கப்பட்டு வரும் அறிவுச்செல்வத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் – பிரதமர் மோடி

மும்பை – புனே விரைவுச் சாலையில் விபத்து – அடுத்தடுத்து மோதிக்கொண்ட 20 வாகனங்கள்!

காங்கேயம் அருகே வனப்பகுதிக்குள் மர்ம பூஜை – 4 பேர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

கோவையில் திருமணத்தை தாண்டிய உறவுக்கு இடையூறாக இருந்த குழந்தையை தாய் கொலை செய்ததாக குற்றச்சாட்டு!

திருச்செந்தூர் – சென்னை ரயில்களில் கூடுதல் பெட்டிகள் – தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தகவல்!

ஏபிஜே அப்துல்கலாம் நினைவு நாள் – தலைவர்கள் புகழாரம்!

அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை – தேசிய மகளிர் ஆணையத் தலைவர்

தொடரும் மழை – மூணாறில் பல இடங்களில் நிலச்சரிவு!

போரில் ஜெயிப்பது மட்டுமே இலக்கு தோல்வியுற்ற ராணுவத்தை எந்த நாடும் மதிக்காது / மேஜர் மதன் குமார்

புழல் அருகே குழந்தை விற்பனை செய்ய முயன்ற 3 பெண்கள் கைது!

ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைதான இளைஞருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்!

அஜித் குமார் கொலை வழக்கு – சகோதரி, ஆட்டோ ஓட்டுநரிடம் சிபிஐ விசாரணை!

தமிழகத்தில் மொழியை வைத்து அரசியல் செய்து இளைஞர்களை ஏமாற்றி வருகின்றனர் – மகாராஷ்டிரா ஆளுநர் ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies