ஜம்மு காஷ்மீர் என்கவுன்ட்டர்: முக்கியத் தீவிரவாதி சுட்டுக்கொலை!
Jan 14, 2026, 02:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜம்மு காஷ்மீர் என்கவுன்ட்டர்: முக்கியத் தீவிரவாதி சுட்டுக்கொலை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 23, 2023, 04:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 2 அதிகாரிகள் உட்பட 4 இராணுவத்தினர் உயிரிழந்த நிலையில், கூட்டு நடவடிக்கைக் குழுவினர் நடத்திய என்கவுன்ட்டரில் பாகிஸ்தான் ஆதரவு லஷ்கர் இ தொய்பா அமைப்பின் முக்கியத் தீவிரவாதி உட்பட 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜௌரி மாவட்டம் காலகோட் தாலுகா பாஜி மால் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு நேற்று ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது, அப்பகுதியில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள், பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில், 2 சிறப்புப் படை கேப்டன்கள் உட்பட 4 இராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். மேலும், 2 வீரர்கள் காயமடைந்தனர்.

இதையடுத்து, பாதுகாப்புப் படையினர் பதிலடித் தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால், தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. அதேசமயம், தீவிரவாதிகள் அடர்ந்த காட்டுப் பகுதியில் பதுங்கி இருந்து தாக்குதல் நடத்தியதால், இரவோடு இரவாக கூடுதல் படை வரவழைக்கப்பட்டது.

இதன் பிறகு, அப்பகுதி முற்றிலுமாக சுற்றி வளைக்கப்பட்டு, தாக்குதல் நடத்தப்பட்டது. தொடர்ந்து, இன்று காலை தீவிரவாதிகளுக்கு எதிராக மீண்டும் தாக்குதல் தொடர்ந்தது. இந்த என்கவுன்ட்டரில் பாகிஸ்தான் ஆதரவு முக்கியத் தீவிரவாதி தனது கூட்டாளியுடன் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து இராணுவ செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “கொல்லப்பட்ட முக்கியத் தீவிரவாதியின் பெயர் குவாரி என்பது தெரியவந்திருக்கிறது. இவன், பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவன். லஷ்கர் இ தொய்பா அமைப்பில் உயர் பதவி வகித்த பாகிஸ்தான் தீவிரவாதி. கடந்த ஒரு வருடமாக தனது குழுவுடன் இணைந்து ரஜோரி மற்றும் பூஞ்ச் ​​பகுதியில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வந்திருக்கிறான்.

டாங்கிரி மற்றும் கண்டி தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்டவன். ஜம்மு காஷ்மீர் பிராந்தியத்தில் மீண்டும் தீவிரவாதத்தை புதுப்பிக்க அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறான். குகைகளில் மறைந்திருந்து ஐ.இ.டி. வெடிபொருளை கையாள்வதில் நிபுணத்துவம் பெற்றவன். துப்பாக்கிச் சுடும் பயற்சியும் பெற்றவன். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் பயிற்சி பெற்றவன்” என்று தெரிவித்திருக்கிறார்.

Tags: encounterjammu kashmirterrorist killed
ShareTweetSendShare
Previous Post

எக்ஸ் தளத்தில் எனக்கு கணக்கு இல்லை – சாரா டெண்டுல்கர்!

Next Post

பிரதமர் மோடி குறித்து அவதூறு: ராகுலுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Related News

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

Load More

அண்மைச் செய்திகள்

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

கோரிக்கை விடுத்த தமிழக அரசு – நிராகரித்த நபார்டு வங்கி!

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies