ஜம்மு காஷ்மீர் என்கவுன்ட்டர்: முக்கியத் தீவிரவாதி சுட்டுக்கொலை!
Jul 7, 2025, 03:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜம்மு காஷ்மீர் என்கவுன்ட்டர்: முக்கியத் தீவிரவாதி சுட்டுக்கொலை!

Web Desk by Web Desk
Nov 23, 2023, 04:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 2 அதிகாரிகள் உட்பட 4 இராணுவத்தினர் உயிரிழந்த நிலையில், கூட்டு நடவடிக்கைக் குழுவினர் நடத்திய என்கவுன்ட்டரில் பாகிஸ்தான் ஆதரவு லஷ்கர் இ தொய்பா அமைப்பின் முக்கியத் தீவிரவாதி உட்பட 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜௌரி மாவட்டம் காலகோட் தாலுகா பாஜி மால் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு நேற்று ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது, அப்பகுதியில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள், பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில், 2 சிறப்புப் படை கேப்டன்கள் உட்பட 4 இராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். மேலும், 2 வீரர்கள் காயமடைந்தனர்.

இதையடுத்து, பாதுகாப்புப் படையினர் பதிலடித் தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால், தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. அதேசமயம், தீவிரவாதிகள் அடர்ந்த காட்டுப் பகுதியில் பதுங்கி இருந்து தாக்குதல் நடத்தியதால், இரவோடு இரவாக கூடுதல் படை வரவழைக்கப்பட்டது.

இதன் பிறகு, அப்பகுதி முற்றிலுமாக சுற்றி வளைக்கப்பட்டு, தாக்குதல் நடத்தப்பட்டது. தொடர்ந்து, இன்று காலை தீவிரவாதிகளுக்கு எதிராக மீண்டும் தாக்குதல் தொடர்ந்தது. இந்த என்கவுன்ட்டரில் பாகிஸ்தான் ஆதரவு முக்கியத் தீவிரவாதி தனது கூட்டாளியுடன் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து இராணுவ செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “கொல்லப்பட்ட முக்கியத் தீவிரவாதியின் பெயர் குவாரி என்பது தெரியவந்திருக்கிறது. இவன், பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவன். லஷ்கர் இ தொய்பா அமைப்பில் உயர் பதவி வகித்த பாகிஸ்தான் தீவிரவாதி. கடந்த ஒரு வருடமாக தனது குழுவுடன் இணைந்து ரஜோரி மற்றும் பூஞ்ச் ​​பகுதியில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வந்திருக்கிறான்.

டாங்கிரி மற்றும் கண்டி தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்டவன். ஜம்மு காஷ்மீர் பிராந்தியத்தில் மீண்டும் தீவிரவாதத்தை புதுப்பிக்க அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறான். குகைகளில் மறைந்திருந்து ஐ.இ.டி. வெடிபொருளை கையாள்வதில் நிபுணத்துவம் பெற்றவன். துப்பாக்கிச் சுடும் பயற்சியும் பெற்றவன். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் பயிற்சி பெற்றவன்” என்று தெரிவித்திருக்கிறார்.

Tags: encounterjammu kashmirterrorist killed
ShareTweetSendShare
Previous Post

எக்ஸ் தளத்தில் எனக்கு கணக்கு இல்லை – சாரா டெண்டுல்கர்!

Next Post

பிரதமர் மோடி குறித்து அவதூறு: ராகுலுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Related News

வார விடுமுறை – திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்கள்!

வார விடுமுறை – ஏற்காட்டிற்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்!

தலாய் லாமா பிறந்த நாள் கொண்டாட்டம் – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு பங்கேற்பு!

இபிஎஸ் சுற்றுப்பயணத்திற்கு பாஜக முழு ஆதரவு – நயினார் நாகேந்திரன்

பாஜகவில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் – வானதி சீனிவாசன்

தலாய் லாமா பிறந்த நாள் – பிரதமர் மோடி வாழ்த்து!

Load More

அண்மைச் செய்திகள்

உதகை அருகே சாலையோர பள்ளத்தில் உள்ள வீட்டின் மீது கவிழந்த கார்!

திருப்பத்தூரில் குழந்தை உள்ளிட்ட 8 பேரை கடித்த வெறிநாய் – பொதுமக்கள் அச்சம்!

அலங்காநல்லூர் அருகே சகோதரர்கள் மீது தாக்கும் நடத்திய போலீஸ் – வெளியானது வீடியோ!

பரதநாட்டிய கலைஞர் லித்திகா ஸ்ரீயின் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சி – அண்ணாமலை பங்கேற்பு!

வார விடுமுறை – குற்றலா அருவிகளில் ஆனந்த குளியல் போட்ட சுற்றுலா பயணிகள்!

நாமக்கல் அருகே வட்டார போக்குவரத்து அலுவலர், மனைவியுடன் தற்கொலை? – தண்டவாளத்தில் கிடந்த உடல்கள்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து – ஒருவர் பலி!

இஸ்ரேலுக்கு எதிரான போருக்கு பிறகு முதன்முறையாக பொதுவெளியில் தோன்றிய ஈரான் உச்ச தலைவர் கமேனி – மொஹரம் விழாவில் பங்கேற்பு!

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு விழா : 10-ஆம் கால யாகசாலை பூஜை கோலாகலம்!

டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி பிறந்தநாள் – தலைவர்கள் புகழாரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies