இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் மீது பணமோசடி வழக்கு !
Jul 27, 2025, 09:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் மீது பணமோசடி வழக்கு !

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் மீது ஐபிசி பிரிவு 420யின் கீழ் ஏமாற்றுதல் மற்றும் பணமோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Web Desk by Web Desk
Nov 24, 2023, 12:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்தவர் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்.

இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் மோசடியில் ஈடுபட்ட காரணத்தால் இவருக்கு வாழ்நாள் முழுவதும் கிரிக்கெட் விளையாட தடை விதித்து பி.சி.சி.ஐ உத்தரவிட்டது.

பின்னர் 2019 ஆம் ஆண்டு இவரின் வாழ்நாள் தடை 7 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது. அந்த தடை கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தோடு நிறைவடைந்தது.

தடைகாலம் முடிவடைந்ததை தொடர்ந்து அவர் 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கானப் போட்டியில் கேரள கிரிக்கெட் சங்கம் சார்பாக விளையாடினார்.

மேலும் 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்திற்கு இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் இரண்டு முறையும் இவரை எந்த அணி நிர்வாகமும் தேர்ந்தெடுக்கவில்லை.

இந்நிலையில் கண்ணூரை சேர்ந்த சரீஷ் பாலகோபாலன் என்பவர் ஸ்ரீசாந்த் மற்றும் அவரது நண்பர்கள் உட்பட 3 பேர் மீது கேரள போலீசில் பணமோசடி புகார் அளித்துள்ளார்.

அவர் அந்த புகாரில், ‘கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்தின் நண்பர்கள் ராஜிவ் குமார், வெங்கடேஷ் கினி ஆகியோர் கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் என்னை அணுகினர். அவர்கள் கர்நாடக மாநிலம் கொல்லூரில் விளையாட்டு பயிற்சி மையம் துவங்க இருப்பதாகவும், அதில் ஸ்ரீசாந்த் பங்குதாரராக இருப்பதாகவும் தெரிவித்தனர்.

அந்த விளையாட்டு பயிற்சி மையத்திற்கு நான் முதலீடு செய்தால் என்னையும் பங்குதாரராக நியமித்தாக தெரிவித்தனர். இதனையடுத்து பல்வேறு தேதிகளில் ரூ.18.7 லட்சம் முதலீடு செய்தேன். ஆனால் தற்போது வரை விளையாட்டு பயிற்சி மையம் தொடங்கப்படவில்லை. மேலும் பணத்தையும் திரும்ப தராமல் ஏமாற்றி வருகின்றனர்’ என்று தெரிவித்திருந்தார்.

புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் ஸ்ரீசாந்த் மற்றும் அவரின் நண்பர்கள் மீது ஐபிசி பிரிவு 420யின் கீழ் ஏமாற்றுதல் மற்றும் பணமோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags: sports
ShareTweetSendShare
Previous Post

அமைச்சர் பொன்முடிக்கு அமலாக்கத்துறை சம்மன்!

Next Post

தேசிய ஹாக்கி : மணிப்பூர் -பெங்கால் : சமநிலையில் முடிவு!

Related News

திமுக ஆட்சியில் கஞ்சா கிடைக்கும், ஆனால் சமூக நீதி கிடைக்காது – அன்புமணி விமர்சனம்

தூத்துக்குடி பயணத்தை முடித்துக் கொண்டு திருச்சி சென்ற பிரதமருக்கு உற்சாக வரவேற்பு!

பயங்கரவாதிகளை அழித்ததில் “மேக் இன் இந்தியா” திட்டத்தில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் முக்கிய பங்காற்றின – பிரதமர் மோடி

தூத்துக்குடியில் ரூ. 4,900 கோடி மதிப்பிலான திட்டங்கள் – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

Load More

அண்மைச் செய்திகள்

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies