ஆட்சிக்கு வந்தால் "ஐதராபாத்" பெயர் மாற்றப்படும்: பா.ஜ.க. அதிரடி!
Mar 15, 2026, 02:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆட்சிக்கு வந்தால் “ஐதராபாத்” பெயர் மாற்றப்படும்: பா.ஜ.க. அதிரடி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 25, 2023, 12:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததும் பல்வேறு நகரங்களின் முந்தைய பெயர்கள் மீண்டும் சூட்டப்பட்டன. அதன்படி, ஐதராபாத்தின் பெயர் பாக்யாநகர் என்று மாற்றப்படும் என்று அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா கூறியிருக்கிறார்.

தெலங்கானா மாநிலத்தில் வரும் 30-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இம்மாநிலத்தில் முதல்வர் கே.சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரதீய ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்.) கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக முதல்வராக இருக்கும் கே.சி.ஆர்., மாநில மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவில்லை என்பதால் மக்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள்.

ஆகவே, தெலங்கானாவில் ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸ் கட்சியும், பா.ஜ.க.வும் தீவிர முயற்சி செய்து வருகின்றன. எனவே, இரு கட்சிகளின் தலைவர்களும் அம்மாநிலத்தில் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதனால் தெலங்கானாவில் மும்முனைப் போட்டி நிலவுகிறது. இதையடுத்து, பா.ஜ.க. சார்பில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பலரும் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

அந்த வகையில், அஸ்ஸாம் மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெலங்கானாவில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், “தெலங்கானாவில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த 30 நிமிடங்களில் ஐதராபாத்தின் பெயர் பாக்யாநகர் என்று மாற்றப்படும். இப்படி மாற்றினால் யாரும் எதுவும் செய்துவிட முடியாது.

பாலஸ்தீனத்தை ஆதரிக்கும் ஒவைசி அங்கேயே போய்விடட்டும். அவர்களுக்காக சண்டையிடட்டும். இராமர் கோவில் கட்டப்பட்டு விடும் என்று யாரேனும் நினைத்தது உண்டா? ஜவகர்லால் நேருவுக்கோ, இந்திராவுக்கோ அந்தத் துணிச்சல் இருந்ததா? பா.ஜ.க.வாலும், மோடியாலும்தான் இராமர் கோவில் என்ற கனவு நிறைவேறி இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.

மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததும் பல்வேறு நகரங்களின் முந்தைய பெயர்கள் மீண்டும் சூட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags: ElectionAssam CmTelanganaCompaign
ShareTweetSendShare
Previous Post

ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

Next Post

உலகக்கோப்பையின் பொருளாதாரத்தில் இந்தியா வென்றதா ? தோற்றதா ?

Related News

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

Load More

அண்மைச் செய்திகள்

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies