இஸ்ரேல் சிறையில் இருந்து பாலஸ்தீனியர்கள் விடுதலை!
Mar 15, 2026, 08:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இஸ்ரேல் சிறையில் இருந்து பாலஸ்தீனியர்கள் விடுதலை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 25, 2023, 03:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இஸ்ரேலில் இருந்து கடத்திச் சென்ற பிணைக் கைதிகள் 25 பேரை ஹமாஸ் தீவிரவாதிகள் விடுவித்திருக்கும் நிலையில், பாலஸ்தீனத்தைச் சேர்ந்த 39 கைதிகளை இஸ்ரேல் விடுவித்திருக்கிறது.

இஸ்ரேல் மற்றும் காஸா நகரின் ஹமாஸ் தீவிரவாதிகள் இடையே கடந்த மாதம் 7-ம் தேதி முதல் போர் நடந்து வருகிறது. இஸ்ரேல் தாக்குதலில் காஸா நகரமே உருக்குலைந்து போய் விட்டது. மின்சாரம், குடிநீர் இன்று மக்கள் அவதிப்பட்டு வருவதோடு, காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதுமான மருந்துகள் இல்லாமல் ஏராளமானோர் உயிரிழந்தனர்.

இதையடுத்து, காஸா நகர மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையிலான உதவிகளை வழங்க இந்தியா உள்ளிட்ட நாடுகளும், ஐ.நா.வும் நடவடிக்கை மேற்கொண்டன. அதேசமயம், பிணைக் கைதிகளை விடுவிப்பது தொடர்பாக கத்தார் நாட்டு உதவியுடன் அமெரிக்கா நடவடிக்கை மேற்கொண்டது. மேலும், போர் நிறுத்தம் தொடர்பாகவும் பல்வேறு நாடுகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன.

இந்த நிலையில், கத்தார் மற்றும் அமெரிக்கா முயற்சியில் பிணைக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் தீவிரவாதிகள் சம்மதம் தெரிவித்தனர். அதேசமயம், இஸ்ரேல் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பாலஸ்தீனிய கைதிகளை விடுவிக்க வேண்டும். 4 நாட்கள் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதித்தனர். இதற்கு இஸ்ரேல் சம்மதம் தெரிவித்தது.

இதைத் தொடர்ந்து, 4 நாட்களில் 50 பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவிப்பது எனவும், பதிலுக்கு 150 பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுவிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், முதல்கட்டமாக தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 12 பேர் உட்பட 25 பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவித்தது. பதிலுக்கு, இஸ்ரேல் சிறையில் இருந்த 39 பாலஸ்தீனிய கைதிகளை அந்நாடு விடுவித்தது.

இந்த 39 பேரில் 25 பேர் பெண்கள், 14 பேர் இளைஞர்கள். மேற்கண்ட 25 பெண்களும் இஸ்ரேல் இராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியது, கத்திக்குத்து ஆகிய குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டவர்கள். அதேபோல, இளைஞர்கள் கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டவர்கள். இவர்களில், 33 பேர் மேற்குக் கரையில் உள்ள சிறையில் இருந்தும், 6 பேர் ஜெருசலேமில் இருந்தும் விடுதலை செய்யப்பட்டனர்.

விடுதலை செய்யப்பட்டதும் சிறையில் இருந்து வெளியே வந்த பெண்கள், அவர்களது குடும்பத்தினருடன் இணைந்தனர். அவர்களை ஆனந்த கண்ணீருடன் குடும்பத்தினர் வரவேற்றனர். இளைஞர்களை தோளில் தூக்கி சந்தோசத்தை வெளிப்படுத்தினர். தெருக்களில் ஆயிரக்கணக்கானோர் கூடி வாண வேடிக்கை நிகழ்த்தி சந்தோசத்தை வெளிப்படுத்தினர்.

ஒப்பந்தத்தின்படி, ஹமாஸ் 250 பிணைக் கைதிகளையும் விடுவிக்கும்போது, சுமார் 1,000 பாலஸ்தீனியர்கள் இஸ்ரேல் சிறையில் இருந்து விடுதலை செய்யப்படுவார்கள் எனத் தெரிகிறது.

Tags: releasehostagesPalastineIsrael
ShareTweetSendShare
Previous Post

ரிங்கு சிங் வாழ்க்கையை மாற்றிய தோனி !

Next Post

காட்டு யானை தாக்கி ஒருவர் பலி – நீலகிரியில் பீதி

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies