ஐபிஎல் : மும்பையில் இருந்து ரோஹித் வெளியேற்றம் ?
Mar 15, 2026, 05:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஐபிஎல் : மும்பையில் இருந்து ரோஹித் வெளியேற்றம் ?

2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ளது. இந்த தொடருக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் மாதம் 19ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 25, 2023, 03:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 

இதனை முன்னிட்டு ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவைப்படாத வீரர்களை வெளியேற்றிவிட்டு புதிய வீரர்களை மினி ஏலத்தில் வாங்கிக் கொள்ளும் முயற்சி நடைபெற உள்ளது.

இதனால் ஒவ்வொரு அணி வீரர்களும் எந்த வீரர்களை நீக்கி விட்டு எந்த வீரர்களை வாங்கலாம் என்ற முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஒவ்வொரு சீசனிலும் அணி நிர்வாகம் ஒவ்வொரு யுக்திகளை வைத்து விளையாடும். அந்த வகையில் மும்பை இந்தியன்ஸ் அணி ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வென்று இருக்கிறது.

இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் தங்களுடைய கேப்டன் ரோகித் சர்மாவை விடுவிக்க முடிவெடுத்து இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

இது அந்த அணி இரசிகர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஏனென்றால் ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக வந்த பிறகுதான் அவர்கள் ஐந்து கோப்பையை கைப்பற்றினார்கள்.

கடைசியாக 2020 ஆம் ஆண்டு ரோஹித் சர்மா தலைமையில் மும்பை அணி கோப்பையை வாங்கியது. ஆனால் அதன் பிறகு மூன்று ஆண்டுகள் மும்பை அணியால் தங்களுடைய பழைய ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் தடுமாறி வருகிறார்கள்.

இந்த நிலையில் ரோகித் சர்மா கேப்டனாக சிறந்து விளங்கினாலும் பேட்ஸ்மேனாக தடுமாறி வருகிறார் என்று புகார் எழுந்துள்ளது. 2021 ஆம் ஆண்டு சீசனில் 381 ரன்கள், 2022 ஆம் ஆண்டு சீசனில் 268 ரன்களும், 2023 ஆம் ஆண்டு சீசனில் 332 ரன்கள் என்ற வகையிலே ரோகித் சர்மா அடித்து வருகிறார். அவர் கடைசியாக 2019 ஆம் ஆண்டு தான் 400 ரன்களை தாண்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ரோகித் சர்மாவுக்கு 36 வயது ஆகிவிட்டதால் அவரை வெளியேற்றிவிட்டு இளம் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவை மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணி கொண்டு வர முயற்சிகள் நடைபெறுகிறது.

இதற்கான பேச்சுவார்த்தையில் குஜராத் அணியுடன் ஏற்பட்டபோது ரோகித் சர்மாவை அந்த அணி கேட்பதாகவும் அதற்கு பதில் ஹர்திக் பாண்டியாவை தர தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளது.

ரோகித் சர்மாவுக்கும் வயதாகி வருவதால் அவரை அனுப்பிவிட்டு ஹர்திக் சேர்க்க முயற்சிகள் நடைபெறுகிறது.ஆனால் மும்பை அணி இவ்வாறு திட்டமிட்டு இருப்பதாக செய்தி வெளியானதற்கே அந்த அணி ரசிகர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ரோகித் சர்மா இல்லை என்றால் மும்பை இந்தியன்ஸ் அணியை இல்லை என்றும் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

Tags: sports
ShareTweetSendShare
Previous Post

பூத்துக்குலுங்கும் காட்டு சூரிய காந்தி மலர்கள்

Next Post

சென்னை மெட்ரோவில் பயணிக்க சூப்பர் சலுகை அறிவிப்பு

Related News

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

Load More

அண்மைச் செய்திகள்

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies