ஐபிஎல் : மும்பையில் இருந்து ரோஹித் வெளியேற்றம் ?
Sep 13, 2026, 12:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஐபிஎல் : மும்பையில் இருந்து ரோஹித் வெளியேற்றம் ?

2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ளது. இந்த தொடருக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் மாதம் 19ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 25, 2023, 03:53 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

 

இதனை முன்னிட்டு ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவைப்படாத வீரர்களை வெளியேற்றிவிட்டு புதிய வீரர்களை மினி ஏலத்தில் வாங்கிக் கொள்ளும் முயற்சி நடைபெற உள்ளது.

இதனால் ஒவ்வொரு அணி வீரர்களும் எந்த வீரர்களை நீக்கி விட்டு எந்த வீரர்களை வாங்கலாம் என்ற முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஒவ்வொரு சீசனிலும் அணி நிர்வாகம் ஒவ்வொரு யுக்திகளை வைத்து விளையாடும். அந்த வகையில் மும்பை இந்தியன்ஸ் அணி ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வென்று இருக்கிறது.

இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் தங்களுடைய கேப்டன் ரோகித் சர்மாவை விடுவிக்க முடிவெடுத்து இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

இது அந்த அணி இரசிகர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஏனென்றால் ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக வந்த பிறகுதான் அவர்கள் ஐந்து கோப்பையை கைப்பற்றினார்கள்.

கடைசியாக 2020 ஆம் ஆண்டு ரோஹித் சர்மா தலைமையில் மும்பை அணி கோப்பையை வாங்கியது. ஆனால் அதன் பிறகு மூன்று ஆண்டுகள் மும்பை அணியால் தங்களுடைய பழைய ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் தடுமாறி வருகிறார்கள்.

இந்த நிலையில் ரோகித் சர்மா கேப்டனாக சிறந்து விளங்கினாலும் பேட்ஸ்மேனாக தடுமாறி வருகிறார் என்று புகார் எழுந்துள்ளது. 2021 ஆம் ஆண்டு சீசனில் 381 ரன்கள், 2022 ஆம் ஆண்டு சீசனில் 268 ரன்களும், 2023 ஆம் ஆண்டு சீசனில் 332 ரன்கள் என்ற வகையிலே ரோகித் சர்மா அடித்து வருகிறார். அவர் கடைசியாக 2019 ஆம் ஆண்டு தான் 400 ரன்களை தாண்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ரோகித் சர்மாவுக்கு 36 வயது ஆகிவிட்டதால் அவரை வெளியேற்றிவிட்டு இளம் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவை மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணி கொண்டு வர முயற்சிகள் நடைபெறுகிறது.

இதற்கான பேச்சுவார்த்தையில் குஜராத் அணியுடன் ஏற்பட்டபோது ரோகித் சர்மாவை அந்த அணி கேட்பதாகவும் அதற்கு பதில் ஹர்திக் பாண்டியாவை தர தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளது.

ரோகித் சர்மாவுக்கும் வயதாகி வருவதால் அவரை அனுப்பிவிட்டு ஹர்திக் சேர்க்க முயற்சிகள் நடைபெறுகிறது.ஆனால் மும்பை அணி இவ்வாறு திட்டமிட்டு இருப்பதாக செய்தி வெளியானதற்கே அந்த அணி ரசிகர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ரோகித் சர்மா இல்லை என்றால் மும்பை இந்தியன்ஸ் அணியை இல்லை என்றும் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

Tags: sports
Share
Tweet
SendShare
Previous Post

பூத்துக்குலுங்கும் காட்டு சூரிய காந்தி மலர்கள்

Next Post

சென்னை மெட்ரோவில் பயணிக்க சூப்பர் சலுகை அறிவிப்பு

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies