பிரதமர் மோடி கடவுள் கொடுத்த வரம்: ம.பி. முதல்வர் புகழாரம்!
Jul 26, 2025, 05:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் மோடி கடவுள் கொடுத்த வரம்: ம.பி. முதல்வர் புகழாரம்!

Web Desk by Web Desk
Nov 25, 2023, 06:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவுக்கு கடவுள் கொடுத்த வரம். அவரது தலைமையில் நாடு அடைந்துள்ள முன்னேற்றம் கற்பனை செய்ய முடியாதது என்று மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் கூறியிருக்கிறார்.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் கடந்த 17-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3-ம் தேதி நடைபெற்று, தேர்தல் முடிவுகள் வெளியிடப்படவிருக்கிறது. இந்த சூழலில், மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் தனது மனைவியுடன் உஜ்ஜைனியிலுள்ள புகழ்பெற்ற மகாகாலேஷ்வர் கோவிலில் பிரார்த்தனை செய்தார்.

பழமையான சக்தி பீட மாதா ஹர்சித்தி கோவில் மற்றும் மங்கல்நாத் கோவிலிலும் முதல்வர் சௌஹான் வழிபாடு செய்தார். மகாகாள் கோவிலின் கருவறைக்குள் சென்ற முதல்வர், சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தார். பின்னர், கோவிலில் உள்ள நந்தி மண்டபத்தில் அமர்ந்து, கோவில் பூசாரி மந்திரங்களை ஓத, முதல்வர் சௌஹான் பாபா மகாகாளை வணங்கினார்.

தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய சௌஹான், பாபா மகாகாள் கோவிலுக்குச் சென்றது எனது அதிர்ஷ்டம். மாநில மற்றும் நாட்டு மக்களின் மகிழ்ச்சிக்காகவும், நலனுக்காகவும் பிரார்த்தனை செய்தேன். பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவுக்கு கடவுள் கொடுத்த வரம். அவரது தலைமையில் நாடு அடைந்துள்ள முன்னேற்றம் கற்பனை செய்ய முடியாதது மற்றும் ஆச்சரியமானது.

அனைத்து மாநிலங்களிலும் வெற்றி பெற்று, பா.ஜ.க. சாதிக்கும் என்று எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. மேலும், 2024-ல் மத்தியில் மீண்டும் பிரதமர் மோடி தலைமையில் பா.ஜ.க. ஆட்சி அமைக்கப்படும். ராகுல் காந்தி தேசிய அவமானமாகி விட்டார். காங்கிரஸ் தனது அறிவை இழந்துவிட்டது.

உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வியடைந்ததால் நாடு முழுவதும் சோகத்தில் இருக்க, காங்கிரஸ்காரர்கள் மகிழ்ச்சியில் கிண்டல் செய்தனர். இந்த வெளிப்பாடு தேசத் துரோகத்தின் உச்சம். காங்கிரஸ் குருடாகி, ராகுல் காந்தி தேசிய அவமானமாகி விட்டார்” என்றார்.

Tags: ujjainMadya PradeshCM Sivaraj Singh Chouhan
ShareTweetSendShare
Previous Post

சோமாலியாவில் வெள்ளப்பெருக்கு: 96 பேர் பலி

Next Post

சீனா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் : இந்தியர்கள் அசத்தல் !

Related News

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

பிரதமர் மோடி தமிழகம் வருகை – அரியலூர் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மதுரையில் திமுக நிர்வாகிக்கு சொந்தமான ஐடி நிறுவனத்தில் GST நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை!

செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் குழாய்களில் இணைப்பு பணி!

ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள இலவச கழிப்பறைகளில் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

ஆண்டிப்பட்டி பகுதியில் வாட்டர் ஆப்பிள் எனப்படும் நீர்க்குமிழி பழ சீசன் தொடங்கியது – விவசாயிகள் மகிழ்ச்சி!

கோயம்பேடு அருகே தனிநபர் ஆக்கிரமித்துள்ள சாலை – பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் வலியுறுத்தல்!

பிரிட்டன் : 5 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகைக்கு ஆசைப்பட்டு, கால்களை வெட்டி கொண்ட மருத்துவர் கைது!

பிரதமரை எதிர்ப்பதாக நினைத்து, காங்கிரஸ் கட்சியினர் தேசத்தை எதிர்க்கின்றனர் : சிவராஜ் சிங் சௌகான்

இந்திய ராணுவம் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் தயார்நிலை இருக்க வேண்டும் : முப்படைகளின் தலைமை தளபதி அனில் சௌகன்

நீலகிரிக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்!

அமர்நாத் யாத்திரை : தற்போது வரை 3 லட்சத்து 60 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்! 

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies