பிரதமர் மோடி கடவுள் கொடுத்த வரம்: ம.பி. முதல்வர் புகழாரம்!
Jul 29, 2026, 02:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் மோடி கடவுள் கொடுத்த வரம்: ம.பி. முதல்வர் புகழாரம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 25, 2023, 06:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவுக்கு கடவுள் கொடுத்த வரம். அவரது தலைமையில் நாடு அடைந்துள்ள முன்னேற்றம் கற்பனை செய்ய முடியாதது என்று மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் கூறியிருக்கிறார்.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் கடந்த 17-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3-ம் தேதி நடைபெற்று, தேர்தல் முடிவுகள் வெளியிடப்படவிருக்கிறது. இந்த சூழலில், மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் தனது மனைவியுடன் உஜ்ஜைனியிலுள்ள புகழ்பெற்ற மகாகாலேஷ்வர் கோவிலில் பிரார்த்தனை செய்தார்.

பழமையான சக்தி பீட மாதா ஹர்சித்தி கோவில் மற்றும் மங்கல்நாத் கோவிலிலும் முதல்வர் சௌஹான் வழிபாடு செய்தார். மகாகாள் கோவிலின் கருவறைக்குள் சென்ற முதல்வர், சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தார். பின்னர், கோவிலில் உள்ள நந்தி மண்டபத்தில் அமர்ந்து, கோவில் பூசாரி மந்திரங்களை ஓத, முதல்வர் சௌஹான் பாபா மகாகாளை வணங்கினார்.

தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய சௌஹான், பாபா மகாகாள் கோவிலுக்குச் சென்றது எனது அதிர்ஷ்டம். மாநில மற்றும் நாட்டு மக்களின் மகிழ்ச்சிக்காகவும், நலனுக்காகவும் பிரார்த்தனை செய்தேன். பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவுக்கு கடவுள் கொடுத்த வரம். அவரது தலைமையில் நாடு அடைந்துள்ள முன்னேற்றம் கற்பனை செய்ய முடியாதது மற்றும் ஆச்சரியமானது.

அனைத்து மாநிலங்களிலும் வெற்றி பெற்று, பா.ஜ.க. சாதிக்கும் என்று எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. மேலும், 2024-ல் மத்தியில் மீண்டும் பிரதமர் மோடி தலைமையில் பா.ஜ.க. ஆட்சி அமைக்கப்படும். ராகுல் காந்தி தேசிய அவமானமாகி விட்டார். காங்கிரஸ் தனது அறிவை இழந்துவிட்டது.

உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வியடைந்ததால் நாடு முழுவதும் சோகத்தில் இருக்க, காங்கிரஸ்காரர்கள் மகிழ்ச்சியில் கிண்டல் செய்தனர். இந்த வெளிப்பாடு தேசத் துரோகத்தின் உச்சம். காங்கிரஸ் குருடாகி, ராகுல் காந்தி தேசிய அவமானமாகி விட்டார்” என்றார்.

Tags: Madya PradeshCM Sivaraj Singh Chouhanujjain
ShareTweetSendShare
Previous Post

சோமாலியாவில் வெள்ளப்பெருக்கு: 96 பேர் பலி

Next Post

சீனா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் : இந்தியர்கள் அசத்தல் !

Related News

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies