கிரிக்கெட்டில் அரசியல் செய்யும் பாகிஸ்தான் !
Mar 15, 2026, 03:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கிரிக்கெட்டில் அரசியல் செய்யும் பாகிஸ்தான் !

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் இமாத் வாசிம் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 25, 2023, 08:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் இமாத் வாசிம் 34 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்து இருக்கிறார்.

இவரை அடுத்த பாகிஸ்தான் அணியின் டி20 கேப்டனாக நியமிக்க வேண்டும் என முன்னாள் வீரர்கள் பலர் கூறிய நிலையில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.

பாகிஸ்தான் கிரிக்கெட்டில் வீரர்கள் தேர்வில் நிறைய அரசியல் இருக்கிறது. நல்ல டி20 வீரராக அறியப்பட்ட இமாத் வாசிம், அந்த அரசியலில் சிக்கி கடந்த சில மாதங்களாக அணியில் இடமின்றி தவித்து வந்தார்.

அணியில் தேர்வு செய்யப்படாமல் தொடர்ந்து முதுகில் குத்தப்பட்ட நிலையில் 34 வயதில் ஓய்வை அறிவித்து இருக்கிறார் இமாத் வாசிம்.

இனி சர்வதேச போட்டிகள் அல்லாத பல நாடுகளில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடர்களில் பங்கேற்க உள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

பாகிஸ்தான் டி20 அணியின் சிறந்த சுழற் பந்துவீச்சு ஆல் – ரவுண்டராக அறியப்பட்ட இமாத் வாசிம் 2015 ஜூலை மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் இலங்கை அணிக்கு எதிராக அறிமுகம் ஆனார்.

கடைசியாக 2020 யில் ஒருநாள் போட்டியில் விளையாடினார். அதன் பின் அவருக்கு ஒருநாள் அணியில் காரணமே இல்லாமல் இடம் மறுக்கப்பட்டது ஆனாலும், டி20 அணியில் அவ்வப்போது இடம் பெற்று வந்தார்.

கடைசியாக 2023 ஏப்ரல் மாதம் பாகிஸ்தான் அணிக்காக விளையாடினார். பாகிஸ்தான் அணிக்கு எதிரான அந்தப் போட்டியில் பேட்டிங்கில் 31 ரன்கள் குவித்த இமாத் வாசிம், 2 விக்கெட்களையும் வீழ்த்தினார்.

ஆனால், அதன் பின் அவருக்கு டி20 அணியில் இடம் கிடைக்கவில்லை. அதனால் மனம் நொந்தப் போன அவர் ஒருநாள் போட்டி உலகக்கோப்பை அணியில் இடம் கிடைக்கும் என எதிர்பார்த்தார். அதுவும் கிடைக்கவில்லை.

அதை அடுத்து அவர் உலகக்கோப்பைத் தொடரின் போது வர்ணனையாளர் பணியை செய்தார். அப்போது வாசிம் அக்ரம், உள்ளூர் போட்டிகளில் ஆடாமல் இவருக்கு தொலைக்காட்சியில் என்ன வேலை? என கேள்விகள் எழும்பியது.

இந்நிலையில் உலகக்கோப்பை தொடருக்கு பின் பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் குழு மாறி விட்டது. தேர்வுக் குழு தலைவர் மாறி விட்டார்.

ஆனாலும், இமாத் வாசிம் புறக்கணிக்கப்படுவதாக எண்ணிய நிலையில் தற்போது இனியும் காலம் தாழ்த்தக் கூடாது என அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்து இருக்கிறார்.

இவர் அடுத்த கேப்டன் ஆவார் என முன்னாள் வீரர்கள் மட்டுமே கூறி வந்தனர். பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு இவரை கண்டு கொள்ளக் கூட இல்லை என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

Tags:
ShareTweetSendShare
Previous Post

ஆதித்யா எல்-1 இறுதிக்கட்ட பயணத்தில் உள்ளது – இஸ்ரோ தலைவர் சோம்நாத் !

Next Post

ராஜஸ்தான் தேர்தல்: 74.13% வாக்குப்பதிவு!

Related News

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies