2-வது கட்டமாக 17 பிணைக் கைதிகள் விடுதலை!
Mar 15, 2026, 06:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2-வது கட்டமாக 17 பிணைக் கைதிகள் விடுதலை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 26, 2023, 01:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தற்காலிக அமைதி ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, முதல்கட்டமாக 25 பிணைக் கைதிகளை விடுவித்த ஹமாஸ் தீவிரவாதிகள், 2-வது கட்டமாக 17 பிணைக் கைதிகளை விடுவித்திருக்கிறார்கள்.

இஸ்ரேல் நாட்டின் மீது பாலஸ்தீனத்தைச் சேர்ந்த காஸா நகரின் ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த அக்டோபர் மாதம் 7-ம் தேதி திடீரென ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர்.

மேலும், இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இஸ்ரேலுக்குள் ஊடுருவி கண்ணில் பட்டவர்களை எல்லாம் கண்மூடித்தனமாக சுட்டுக் கொலை செய்தனர்.

மேலும், 200-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாகவும் பிடித்துச் சென்றனர். இத்தாக்குதலில் இஸ்ரேலில் வெளிநாட்டினர் உட்பட 1,400 பேர் உயிரிழந்தனர். தவிர, 3,500 பேர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையடுத்து, காஸா நகரின் மீது இஸ்ரேல் தாக்குதலைத் தொடங்கியது. இத்தாக்குதலில் காஸா நகரமே உருக்குலைந்து போய் விட்டது. அந்நகரைச் சேர்ந்த 14,500 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 25,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் காஸா நகர சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது.

அதேபோல, முக்கியத் தலைவர்கள், தளபதிகள் உட்பட சுமார் 1,000 ஹமாஸ் தீவிரவாதிகளை வேட்டையாடி இருப்பதாகவும், ஹமாஸ் தலைமையகம் உட்பட 1,500 தீவிரவாத இலக்குகளை அழித்திருப்பதாகவும் இஸ்ரேல் இராணுவம் தெரிவித்திருக்கிறது.

அதோடு, ஹமாஸ் தீவிரவாதிகள் அமைத்திருந்த பதுங்குக் குழிகள் மற்றும் சுரங்கப்பாதைகளையும் இஸ்ரேல் இராணுவம் கண்டுபிடித்து அழித்திருக்கிறது. அதேசமயம், இன்னொரு புறம் பிணைக் கைதிகளை விடுவிப்பது தொடர்பாக கத்தார் நாட்டின் உதவியுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.

இப்பேச்சுவார்த்தையில் சுமுகத் தீர்வு எட்டப்பட்டிருக்கிறது. அதாவது, பிணைக் கைதிகளை விடுவிக்க வேண்டுமானால், இஸ்ரேல் சிறையில் இருக்கும் பாலஸ்தீனக் கைதிகளை விடுவிக்க வேண்டும். 4 நாட்களுக்கு போர் நிறுத்த செய்ய வேண்டும் என்று ஹமாஸ் தீவிரவாதிகள் நிபந்தனை விதித்தனர்.

இதற்கு இஸ்ரேல் சம்மதம் தெரிவித்த நிலையில், தற்காலிகமாக போர் நிறுத்தம் செய்யப்பட்டிருக்கிறது. இதையடுத்து, ஒப்பந்தத்தின்படி, முதல்கட்டமாக தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 12 பிணைக் கைதிகள் உட்பட 25 பேரை ஹமாஸ் தீவிரவாதிகள் வெள்ளிக்கிழமை விடுவித்தனர்.

இதற்கு பதிலாக இஸ்ரேல் சிறையிலிருந்த 25 பெண்கள் உட்பட 39 பாலஸ்தீனியர்களை அந்நாடு விடுதலை செய்திருக்கிறது. இதைத் தொடர்ந்து, நேற்று 17 பிணைக் கைதிகளை விடுவித்திருக்கின்றனர். இவர்களில் 4 பேர் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: IsraelHamashostages
ShareTweetSendShare
Previous Post

சனாதன கார்த்திகை தீப திருநாள் – ஹெச். ராஜா வாழ்த்து!

Next Post

நான் கூறியது சரி, மன்னிப்பு கேட்க மாட்டேன் : குஷ்பு உறுதி!

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies