2-வது கட்டமாக 17 பிணைக் கைதிகள் விடுதலை!
Jul 27, 2025, 04:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2-வது கட்டமாக 17 பிணைக் கைதிகள் விடுதலை!

Web Desk by Web Desk
Nov 26, 2023, 01:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தற்காலிக அமைதி ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, முதல்கட்டமாக 25 பிணைக் கைதிகளை விடுவித்த ஹமாஸ் தீவிரவாதிகள், 2-வது கட்டமாக 17 பிணைக் கைதிகளை விடுவித்திருக்கிறார்கள்.

இஸ்ரேல் நாட்டின் மீது பாலஸ்தீனத்தைச் சேர்ந்த காஸா நகரின் ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த அக்டோபர் மாதம் 7-ம் தேதி திடீரென ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர்.

மேலும், இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இஸ்ரேலுக்குள் ஊடுருவி கண்ணில் பட்டவர்களை எல்லாம் கண்மூடித்தனமாக சுட்டுக் கொலை செய்தனர்.

மேலும், 200-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாகவும் பிடித்துச் சென்றனர். இத்தாக்குதலில் இஸ்ரேலில் வெளிநாட்டினர் உட்பட 1,400 பேர் உயிரிழந்தனர். தவிர, 3,500 பேர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையடுத்து, காஸா நகரின் மீது இஸ்ரேல் தாக்குதலைத் தொடங்கியது. இத்தாக்குதலில் காஸா நகரமே உருக்குலைந்து போய் விட்டது. அந்நகரைச் சேர்ந்த 14,500 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 25,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் காஸா நகர சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது.

அதேபோல, முக்கியத் தலைவர்கள், தளபதிகள் உட்பட சுமார் 1,000 ஹமாஸ் தீவிரவாதிகளை வேட்டையாடி இருப்பதாகவும், ஹமாஸ் தலைமையகம் உட்பட 1,500 தீவிரவாத இலக்குகளை அழித்திருப்பதாகவும் இஸ்ரேல் இராணுவம் தெரிவித்திருக்கிறது.

அதோடு, ஹமாஸ் தீவிரவாதிகள் அமைத்திருந்த பதுங்குக் குழிகள் மற்றும் சுரங்கப்பாதைகளையும் இஸ்ரேல் இராணுவம் கண்டுபிடித்து அழித்திருக்கிறது. அதேசமயம், இன்னொரு புறம் பிணைக் கைதிகளை விடுவிப்பது தொடர்பாக கத்தார் நாட்டின் உதவியுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.

இப்பேச்சுவார்த்தையில் சுமுகத் தீர்வு எட்டப்பட்டிருக்கிறது. அதாவது, பிணைக் கைதிகளை விடுவிக்க வேண்டுமானால், இஸ்ரேல் சிறையில் இருக்கும் பாலஸ்தீனக் கைதிகளை விடுவிக்க வேண்டும். 4 நாட்களுக்கு போர் நிறுத்த செய்ய வேண்டும் என்று ஹமாஸ் தீவிரவாதிகள் நிபந்தனை விதித்தனர்.

இதற்கு இஸ்ரேல் சம்மதம் தெரிவித்த நிலையில், தற்காலிகமாக போர் நிறுத்தம் செய்யப்பட்டிருக்கிறது. இதையடுத்து, ஒப்பந்தத்தின்படி, முதல்கட்டமாக தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 12 பிணைக் கைதிகள் உட்பட 25 பேரை ஹமாஸ் தீவிரவாதிகள் வெள்ளிக்கிழமை விடுவித்தனர்.

இதற்கு பதிலாக இஸ்ரேல் சிறையிலிருந்த 25 பெண்கள் உட்பட 39 பாலஸ்தீனியர்களை அந்நாடு விடுதலை செய்திருக்கிறது. இதைத் தொடர்ந்து, நேற்று 17 பிணைக் கைதிகளை விடுவித்திருக்கின்றனர். இவர்களில் 4 பேர் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: IsraelHamashostages
ShareTweetSendShare
Previous Post

சனாதன கார்த்திகை தீப திருநாள் – ஹெச். ராஜா வாழ்த்து!

Next Post

நான் கூறியது சரி, மன்னிப்பு கேட்க மாட்டேன் : குஷ்பு உறுதி!

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies