2-வது கட்டமாக 17 பிணைக் கைதிகள் விடுதலை!
Jul 29, 2026, 07:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2-வது கட்டமாக 17 பிணைக் கைதிகள் விடுதலை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 26, 2023, 01:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தற்காலிக அமைதி ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, முதல்கட்டமாக 25 பிணைக் கைதிகளை விடுவித்த ஹமாஸ் தீவிரவாதிகள், 2-வது கட்டமாக 17 பிணைக் கைதிகளை விடுவித்திருக்கிறார்கள்.

இஸ்ரேல் நாட்டின் மீது பாலஸ்தீனத்தைச் சேர்ந்த காஸா நகரின் ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த அக்டோபர் மாதம் 7-ம் தேதி திடீரென ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர்.

மேலும், இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இஸ்ரேலுக்குள் ஊடுருவி கண்ணில் பட்டவர்களை எல்லாம் கண்மூடித்தனமாக சுட்டுக் கொலை செய்தனர்.

மேலும், 200-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாகவும் பிடித்துச் சென்றனர். இத்தாக்குதலில் இஸ்ரேலில் வெளிநாட்டினர் உட்பட 1,400 பேர் உயிரிழந்தனர். தவிர, 3,500 பேர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையடுத்து, காஸா நகரின் மீது இஸ்ரேல் தாக்குதலைத் தொடங்கியது. இத்தாக்குதலில் காஸா நகரமே உருக்குலைந்து போய் விட்டது. அந்நகரைச் சேர்ந்த 14,500 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 25,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் காஸா நகர சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது.

அதேபோல, முக்கியத் தலைவர்கள், தளபதிகள் உட்பட சுமார் 1,000 ஹமாஸ் தீவிரவாதிகளை வேட்டையாடி இருப்பதாகவும், ஹமாஸ் தலைமையகம் உட்பட 1,500 தீவிரவாத இலக்குகளை அழித்திருப்பதாகவும் இஸ்ரேல் இராணுவம் தெரிவித்திருக்கிறது.

அதோடு, ஹமாஸ் தீவிரவாதிகள் அமைத்திருந்த பதுங்குக் குழிகள் மற்றும் சுரங்கப்பாதைகளையும் இஸ்ரேல் இராணுவம் கண்டுபிடித்து அழித்திருக்கிறது. அதேசமயம், இன்னொரு புறம் பிணைக் கைதிகளை விடுவிப்பது தொடர்பாக கத்தார் நாட்டின் உதவியுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.

இப்பேச்சுவார்த்தையில் சுமுகத் தீர்வு எட்டப்பட்டிருக்கிறது. அதாவது, பிணைக் கைதிகளை விடுவிக்க வேண்டுமானால், இஸ்ரேல் சிறையில் இருக்கும் பாலஸ்தீனக் கைதிகளை விடுவிக்க வேண்டும். 4 நாட்களுக்கு போர் நிறுத்த செய்ய வேண்டும் என்று ஹமாஸ் தீவிரவாதிகள் நிபந்தனை விதித்தனர்.

இதற்கு இஸ்ரேல் சம்மதம் தெரிவித்த நிலையில், தற்காலிகமாக போர் நிறுத்தம் செய்யப்பட்டிருக்கிறது. இதையடுத்து, ஒப்பந்தத்தின்படி, முதல்கட்டமாக தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 12 பிணைக் கைதிகள் உட்பட 25 பேரை ஹமாஸ் தீவிரவாதிகள் வெள்ளிக்கிழமை விடுவித்தனர்.

இதற்கு பதிலாக இஸ்ரேல் சிறையிலிருந்த 25 பெண்கள் உட்பட 39 பாலஸ்தீனியர்களை அந்நாடு விடுதலை செய்திருக்கிறது. இதைத் தொடர்ந்து, நேற்று 17 பிணைக் கைதிகளை விடுவித்திருக்கின்றனர். இவர்களில் 4 பேர் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: IsraelHamashostages
ShareTweetSendShare
Previous Post

சனாதன கார்த்திகை தீப திருநாள் – ஹெச். ராஜா வாழ்த்து!

Next Post

நான் கூறியது சரி, மன்னிப்பு கேட்க மாட்டேன் : குஷ்பு உறுதி!

Related News

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies