விஜய் ஹசாரே கிரிக்கெட் : தமிழக அணி அபார வெற்றி !
Jan 14, 2026, 08:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விஜய் ஹசாரே கிரிக்கெட் : தமிழக அணி அபார வெற்றி !

Murugesan M by Murugesan M
Nov 26, 2023, 12:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தமிழக அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் கோவாவை வீழ்த்தியது.

விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தமாக 38 அணிகள் பங்கேற்றுள்ளது.

இந்த 38 அணிகளும் 5 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடிக்கும் அணிகள், 2-வது இடம் பெறும் ஒரு சிறந்த அணி என்று 6 அணிகள் நேரடியாக கால்இறுதிக்கு தகுதி பெறும்.

இந்நிலையில் மொத்தம் 135 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் நேற்று மட்டும் மொத்தமாக 18 போட்டிகள் நடைபெற்றது. இந்த தொடரில் முதல் முதலாக தமிழக அணி தனது முதல் போட்டியில் விளையாடியது.

இதில் தமிழகம் மற்றும் கோவா ஆகிய இரு அணிகளும் விளையாடிய இப்போட்டியில் டாஸ் வென்ற கோவா பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் தமிழக அணி பேட்டிங் செய்தது. தமிழகத்தின் தொடக்க வீரராக சாய் சுதர்சன் மற்றும் நாராயண் களமிறங்கினர்.

இதில் நாராயண் ஆரம்பத்திலேயே ஆட்டமிழக்க சாய் சுதர்சன் நின்று அதிரடியாக விளையாடி அணிக்கு ரன்களை சேர்த்தார். சாய் சுதர்சன் மொத்தமாக 10 பௌண்டரீஸ் மற்றும் 1 சிக்சர் என மொத்தமாக 144 பந்துகளில் 125 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார்.

அதேபோல் தினேஷ் கார்த்திக் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 6 பௌண்டரீஸ் மற்றும் 2 சிக்சர்கள் என மொத்தமாக 31 பந்துகளில் 47 ரன்களை அடித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

அதேபோல் பாபா அப்ரஜித் 40 ரன்களும், விஜய் ஷங்கர் மற்றும் பாபா இந்திரஜித் தலா 24 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியாக 50 ஓவர்கள் முடிவில் தமிழகத்தின் ஸ்கோர் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 296 ரன்களை எடுத்திருந்தது.

297 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கோவா அணியின் தொடங்க வீரர்களாக இஷான் கடேகர் மற்றும் ஸ்னேஹல் ஆகியோர் களமிறங்கினர்.

இதில் ஸ்னேஹல் 55 ரன்களும், அடுத்து களமிறங்கிய கிஷ்ணமூர்த்தி சித்தார்த் 61 ரன்களும், தர்ஷன் மிசல் 36 ரன்களும் எடுத்தனர். இறுதியாக 50 ஓவர்கள் முடிவில் கோவாவின் ஸ்கோர் 10 விக்கெட்கள் இழப்பிற்கு 263 ரன்களை எடுத்திருந்தது.

தமிழக அணியில் அதிகபட்சமாக சந்தீப் 4 விக்கெட்கள், ரவி ஸ்ரீனிவாசன் 3 விக்கெட்கள், பாபா அபரஜித் 2 விக்கெட்கள், நடராஜன் 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

இதனால் தமிழக அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Tags: tamilagam cricket team
ShareTweetSendShare
Previous Post

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பிரதமர் மோடி!

Next Post

கேரளா பல்கலைக்கழக விழா: கூட்ட நெரிசலில் சிக்கி 4 மாணவர்கள் உயிரிழப்பு!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies