டெல்டாகாரன் என்று சொல்வதற்கு ஸ்டாலினுக்கு எந்த தகுதியும் இல்லை! - அண்ணாமலை குற்றச்சாட்டு!
Aug 17, 2025, 03:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

டெல்டாகாரன் என்று சொல்வதற்கு ஸ்டாலினுக்கு எந்த தகுதியும் இல்லை! – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Nov 26, 2023, 02:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகம் முழுவதும், மணல் கொள்ளை தொடர்கிறது எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலையின் ”என் மண் என் மக்கள்” பாதயாத்திரை துறையூர் தொகுதியில் நடைப்பெற்றது. இந்த பாதயாத்திரையில் ஆயிரக்கணக்காணோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பேசிய அண்ணாமலை,

தமிழகத்தில் 6 முறை ஆட்சி செய்தும் துறையூர் தொகுதியில், ரயில் வசதி இல்லை, அரசுக் கல்லூரிகள் இல்லை. அடிப்படை வசதிகளை கூட நிறைவேற்றாமல் வைத்திருக்கிறது.

கல்விக்கேற்ற வேலைவாய்ப்பை உருவாக்காமல் இளைஞர்கள் வேலைக்காக வெளியூர், வெளி மாநிலங்களுக்குச் செல்லும் நிலையில்தான் 60 ஆண்டு கால ஆட்சி உள்ளது.

வறுமையை ஒழித்து, ஏழை மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டிய திமுக அரசு, சாதாரண ஏழை எளிய குழந்தைகளுக்கும் மருத்துவக் கல்விக்கான வாய்ப்புகளை வழங்கும் நீட் தேர்வை ஒழிப்போம் என்றும், சனாதன தர்மத்தை ஒழிப்போம் என்றும் மடைமாற்றும் செயல்களில் ஈடுபட்டு வருகிறது. விலைவாசி உயர்வு, மின் கட்டண உயர்வு உள்ளிட்ட மக்கள் பிரச்சினைகள் எதுவும் தெரியாமல், பொம்மை முதலமைச்சராக இருக்கிறார் ஸ்டாலின், திமுகவினரின் மணல் கடத்தலை தடுக்க வந்த துறையூர் வருவாய் ஆய்வாளரை, திமுக ஊராட்சித் தலைவரே ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியது, தூத்துக்குடி கிராம நிர்வாக அலுவலர் அவரது அலுவலகத்திலேயே கொலை செய்யப்பட்டது என, தமிழகம் முழுவதும், மணல் கொள்ளை தொடர்கிறது.

ஆனால் மணல் கடத்தல் தொடர்பான விசாரணைக்கு அரசு அலுவலர்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் அழைத்தால், திமுக அரசு பதறுகிறது.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில், நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கடந்த 9 ஆண்டுகளில் 67 சதவீதம் உயர்ந்துள்ளது. 2013-14 ஆம் ஆண்டு ஒரு குவிண்டாலுக்கு 1310 ரூபாயாக இருந்த கொள்முதல் விலை தற்போது ஒரு குவிண்டாலுக்கு 2183 ரூபாயாக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 46 லட்ச விவசாயிகளுக்கு வருடம் 6000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 4 ஆண்டுகளில் 18.8 லட்சம் விவசாயிகளுக்கு பிரதம மந்திரி கிசான் கடன் அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக கடந்த 4 ஆண்டுகளில் தமிழகத்திற்கு வழங்கப்பட்ட கடன் தொகை 48,545 கோடி ரூபாய். 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு வழங்கப்பட்ட நிதி 48,506 கோடி ரூபாய்.

தமிழகத்தில் பயிர் காப்பீடுக்கு செலவிட்ட நிதி 1231 கோடி ரூபாய். நீர்ப்பாசன மேம்பாட்டிற்கு மத்திய அரசு வழங்கிய நிதி 2961 கோடி ரூபாய். காவிரி நதியின் மேம்பாட்டிற்கு வழங்கிய நிதி 264 கோடி ரூபாய்.

45 கிலோ மூட்டை யூரியா விவசாயிகளுக்கு 242 ரூபாய்க்கு நமது மத்திய அரசு வழங்குகிறது. இதன் சந்தை விலை ஒரு மூட்டைக்கு 3000 ரூபாய் ஆகும்.

இந்தியாவில் உள்ள அனைத்து விவசாயிகளும் மானிய விலையில் யூரியா வாங்க மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் செலவிட்ட தொகை 4,24,500 கோடி ரூபாய். தமிழகத்திற்கு மட்டும் செலவிட்ட தொகை சுமார் 16,980 கோடி ரூபாய் ஆகும்.

தமிழகத்தில் மானிய விலையில் உரம் வாங்கி பயன் பெற்றவர்களின் மொத்த எண்ணிக்கை 27,35,187 பேர். இது பாரதப் பிரதமர் மோடி தமிழக விவசாயிகள் நலன் காக்க செய்தது.

ஆனால், திமுக தேர்தல் வாக்குறுதி எண் 43 ல், “விவசாய உற்பத்தி பாதிக்கப்படும் வகையில், விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல், விளைநிலங்களை வேறு பயன்பாட்டிற்கு மாற்றுவதைத் தடுத்திட நடவடிக்கைகள் மேற்கொண்டு, விளைநிலங்களை பாதுகாக்கப்படும்.” என்று கூறியிருந்தனர்.

ஆனால், சமீபத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் தங்கள் விவசாய நிலத்தைக் காக்கப் போராடிய விவசாயிகள் மீது குண்டாஸ் வழக்கு பதிவு செய்தது திமுக. பாஜக போராட்டம் அறிவித்தபின்னர் தான், விவசாயிகள் மீது போடப்பட்ட குண்டாஸ் வழக்கை திமுக நிறுத்திவைத்தது.

டெல்டாகாரன் என்று சொல்வதற்கு ஸ்டாலினுக்கு எந்த தகுதியும் இல்லை. துறையூர் தொகுதிக்கு திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளான, பாதாள சாக்கடைத் திட்டம், புதிய பேருந்து நிலையம், புறவழிச்சாலை, அரசு மருத்துவமனைகள் நவீனப்படுத்தல், சமுதாயக் கூடம், பச்சைமலையில் அதிகமாக விளையும் முந்திரி மகசூலுக்காக முந்திரி பதப்படுத்தும் தொழிற்சாலை என துறையூருக்கு கொடுத்த எந்த வாக்குறுதிகளும் திமுக நிறைவேற்றவில்லை.

தமிழகத்தில் கடந்த 30 மாதங்களாக நடக்கும் மக்கள் விரோத திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டிய ஆட்சி.

இளைஞர்கள் மேம்பாடு, வேலைவாய்ப்பு, கல்விக்கேற்ற வேலை, வேலைக்கேற்ற ஊதியம் என அனைவருக்குமான, சாமானிய மக்களுக்கான ஆட்சியை பாஜகவால் மட்டும்தான் தர முடியும்.

வரும் பாராளுமன்றத் தேர்தலில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி
நல்லாட்சியைத் தொடரச் செய்வோம். தமிழகம் முழுவதும் பாஜக வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்போம் எனத் தெரிவித்தார்.

Tags: k annamalaidmk fails
ShareTweetSendShare
Previous Post

நாட்டின் திறன், துணிச்சல் தீவிரவாதத்தை நசுக்கி விட்டது: பிரதமர் மோடி!

Next Post

கேலோ இந்திய விளையாட்டுப் போட்டியின் லோகோ இன்று வெளியீடு!

Related News

மயிலாப்பூரில் சுதந்திர போராட்ட தியாகி ஆர்யா பெயரில் அறக்கட்டளை தொடக்கம்!

ராமநாதபுரம் அருகே ரயில் வரும் நேரத்தில் கேட்டை மூடாமல் இருந்த கேட்கீப்பர் பணியிடை நீக்கம்!

நெல்லையில் பாஜக மண்டல மாநாடு – சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார் மத்திய அமைச்சர் அமித் ஷா!

கூட்டணி அமைக்கும் அதிகாரத்தை ராமதாசுக்கு வழங்கி பாமக சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம்!

நாமக்கல் அருகே பெண்ணை மிரட்டி கல்லீரல் எடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு!

மேலூர் அருகே காதல் விவகாரத்தில் இளைஞர் கொலை – போலீஸ் விசாரணை!

Load More

அண்மைச் செய்திகள்

பெரியார் விருதுகளை திரும்ப பெற உத்தரவிடக் கோரிய வழக்கு – தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

The Bengal Files படத்தின் ட்ரெய்லரை திரையிட விடாமல் தடுத்த விவகாரம் – அண்ணாமலை கண்டனம்!

திருச்செந்தூர் கோயிலில் ரூ.100 கட்டண தரிசனத்தை ரத்து செய்து பொது தரிசன வழியில் அனுமதி – பக்தர்கள் வரவேற்பு!

இந்தியா மீதான வரி விதிப்பு முட்டாள்தனமான நடவடிக்கை – அமெரிக்க பொருளாதார நிபுணர்கள் விமர்சனம்!

தனக்கு தானே விருது அறிவித்துக்கொண்ட அசிம் முனீர் – சமூக வலைதளங்களில் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

புதினை வரவேற்க அமெரிக்க போர் விமானங்கள் – ரஷ்யாவிற்கு விடுக்கப்பட்ட மறைமுக எச்சரிக்கையா?

அலாஸ்காவில் நடக்க முடியாமல் தடுமாறிய ட்ரம்ப்!

உக்ரைன் போரை நிறுத்தினால் ட்ரம்பை நோபல் பரிசுக்கு பரிந்துரைப்பேன் – ஹிலாரி கிளிண்டன்

ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கை -155 பாக் வீரர்கள் உயிரிழந்தது அம்பலம்!

கோவை அம்ருதா விஸ்வ வித்யா பீடத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகல கொண்டாட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies