நாட்டின் திறன், துணிச்சல் தீவிரவாதத்தை நசுக்கி விட்டது: பிரதமர் மோடி!
Sep 12, 2026, 02:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாட்டின் திறன், துணிச்சல் தீவிரவாதத்தை நசுக்கி விட்டது: பிரதமர் மோடி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 26, 2023, 02:20 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மும்பை கொடூரத் தாக்குதல் நடந்த தினம் இன்று. ஆனால், நமது நாட்டின் திறன் மற்றும் துணிச்சல்தான் அந்தத் தாக்குதலில் இருந்து மீண்டு, தீவிரவாதத்தை நசுக்கியது என்று மனதின் குரல் (மன் கி பாத்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.

2014-ம் ஆண்டு மே மாதம் பாரதப் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார். இதன் பிறகு, அந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் மனதின் குரல் (மன் கி பாத்) என்கிற நிகழ்ச்சியின் மூலம் அகில இந்திய வானொலி வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.

ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் ஒலிபரப்பாகும் இந்நிகழ்ச்சி கடந்த ஏப்ரல் மாதம் 100-வது எபிசோடை நிறைவு செய்தது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழலில், நவம்பர் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக் கிழமையான இன்று நடந்த மனதின் குரல் (மன் கி பாத்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், “நாட்டை கட்டமைக்கும் பணியில் மக்கள் ஈடுபடும்போது, தேசம் முன்னேறிச் செல்வதை யாராலும் தடுக்க முடியாது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பல மாற்றங்களை மக்கள் முன்னெடுத்து வருகின்றனர். நவம்பர் 26-ம் தேதியை அவ்வளவு எளிதில் யாராலும் மறந்துவிட முடியாது.

நாட்டில் கொடூரத் தாக்குதல் நடந்த தினம் இன்று. ஆனால், நம் நாட்டின் திறன் மற்றும் துணிச்சல்தான், அந்தத் தாக்குதலில் இருந்து மீண்டு, தீவிரவாதத்தை நசுக்கியது. மும்பை தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேசமயம், இன்றைய தினம் மற்றொரு முக்கியமான நாளாகும். 1949-ம் ஆண்டு இதே நாளில்தான், அரசியல் அமைப்பை, அரியலமைப்பு சபை ஏற்றுக் கொண்டது.

ஆகவே, நம் நாட்டு மக்கள் அனைவருக்கும் அரசியலமைப்பு தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அரசியலமைப்புச் சட்டத்தைத் உருவாக்க 2 ஆண்டுகள், 11 மாதங்கள் மற்றும் 18 நாட்களானது.

தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்களில் உள்நாட்டு பொருட்கள் 4 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகமாகி இருக்கிறது. உள்ளூர் பொருட்களுக்கான ஆதரவு பிரசாரம்தான், நாட்டிற்கு பல வாய்ப்புகளை திறந்திருக்கிறது.

நமது பொருளாதாரத்திற்கு வலிமையை அளித்திருக்கிறது. நாட்டின் சமமான வளர்ச்சியை உறுதி செய்திருக்கிறது.

சர்வதேச பொருளாதாரம் ஏற்றத்தாழ்வு கண்டபோது, உள்ளூர் பொருட்களுக்கான நமது ஆதரவானது, இந்திய பொருளாதாரத்தை வலுவாக்க உதவியது.

மேலும், 21-ம் நூற்றாண்டின் மிகப்பெரிய சவால்களில் ஒன்று நீர் பாதுகாப்பு. தண்ணீரைப் பாதுகாப்பது உயிரைக் காப்பாற்றுவதைக் காட்டிலும் குறைவானதல்ல.

தண்ணீரை பாதுகாப்பது நம் அனைவரின் பொறுப்பு. தேசத்தை கட்டியெழுப்புவதில் பொதுமக்களும் பங்கு கொள்ளும்போது, அது நாட்டை முன்னேற்ற பாதைக்குக் கூட்டி செல்கிறது. இன்று, இந்தியாவில் மக்கள் பல மாற்றங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்த ஆண்டு இந்தியா நிறைய சாதனைகளை புரிந்திருக்கிறது.

மேலும், தீபாவளி பண்டிகையையொட்டி, 2-வது ஆண்டாக ரொக்கமாக பணம் செலுத்தும் பழக்கம் குறைந்திருக்கிறது. மக்கள் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தி வருகின்றனர். டிஜிட்டல் புரட்சியின் வெற்றி இதை சாத்தியமாக்கி இருக்கிறது.

இன்னொரு காரியம் செய்யலாம், ஒரு மாதத்திற்கு யு.பி.ஐ. மூலமாகவோ அல்லது எந்தவொரு டிஜிட்டல் பரிவர்த்தனை மூலமாகவோ பணம் செலுத்துவது என்று முடிவு செய்யுங்கள்.

ஒரு மாதத்திற்குப் பிறகு, உங்கள் அனுபவங்களையும் புகைப்படங்களையும் என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்” என்றார்.

Tags: pm modi speechMaan ki baatNovember 26
Share
Tweet
SendShare
Previous Post

இரண்டு குழந்தைகளை தத்தெடுக்கும் சமந்தா!

Next Post

டெல்டாகாரன் என்று சொல்வதற்கு ஸ்டாலினுக்கு எந்த தகுதியும் இல்லை! – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies