சமூக சேவையில் வெள்ளி விழா: தமிழரை பாராட்டிய பிரதமர் மோடி!
Sep 8, 2025, 03:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சமூக சேவையில் வெள்ளி விழா: தமிழரை பாராட்டிய பிரதமர் மோடி!

Web Desk by Web Desk
Nov 26, 2023, 07:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடந்த 25 வருடங்களாக 1,500-க்கும் மேற்பட்ட ஏழைக் குழந்தைகளுக்கு உதவி செய்து வரும் தமிழரான லோகநாதன் என்பவரை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டி இருக்கிறார்.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் மனதின் குரல் (மன் கி பாத்) என்கிற நிகழ்ச்சி மூலம் அகில இந்திய வானொலி வாயிலாக நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். அப்போது, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான நாட்டு மக்களின் சேவைகளை பாராட்டுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

அந்த வகையில், இன்று மனதின் குரல் (மன் கி பாத்) நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, தனது சிறுவயது முதலே தனது ஊதியத்தில் ஒரு பகுதியை ஏழைக் குழந்தைகளுக்கு கொடுத்து உதவி வரும் தமிழகத்தின் கோவை மாவட்டம் சூலூர் அருகேயுள்ள அப்பநாயக்கன் பட்டியைச் சேர்ந்த லோகநாதன் என்பவரை பாராட்டி இருக்கிறார்.

இதுகுறித்து பிரதமர் மோடி பேசுகையில், “நண்பர்களே நான் எப்போதும் ஒன்றை உறுதியாகக் கூறி வருகிறேன். இருக்கும் இடத்தை தூய்மையாக வைத்துக் கொள்வது என்பது ஒருநாள் அல்லது ஒரு வாரத்துக்கான பிரசாரம் என்பது இல்லை. இது வாழ்நாள் முழுவதும் செயல்படுத்தப்பட வேண்டிய முயற்சியாகும்.

அந்த வகையில், தமிழகத்தின் கோவையில் வசித்து வரும் லோகநாதன் குறித்து நான் உங்களிடம் கூற விரும்புகிறேன். இவர், தனது சிறு வயதில் இருந்தே ஏழைக் குழந்தைகள் கிழிந்த ஆடைகள் அணிவதைப் பார்த்து மனம் உடைந்தார்.

இதனால், ஏழைக் குழந்தைகளுக்கு உதவி செய்ய முடிவு செய்தவர், தனது சம்பாத்தியத்தில் ஒரு பகுதியை ஏழை குழந்தைகளுக்கு வழங்கத் தொடங்கினார்.  பணப் பற்றாக்குறை ஏற்பட்டபோதும்கூட லோகநாதன் கழிப்பறைகளை சுத்தம் செய்து பணம் சம்பாதித்து வழங்கி வருகிறார்.

கடந்த 25 ஆண்டுகளாக லோகநாதன் முழு அர்ப்பணிப்புடன் இப்பணியில் ஈடுபட்டு வருகிறார். இதுவரை 1,500-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு உதவி செய்திருக்கிறார். அவரது இந்த முயற்சிக்காக மீண்டும் ஒருமுறை பாராட்டுகிறேன்.

நாடு முழுவதும் நடக்கும் இது போன்ற பல முயற்சிகள் நமக்கு ஊக்கமளிப்பதோடு மட்டுமல்லாமல், புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற விருப்பத்தையும் தூண்டுகின்றன” என்று புகழ்ந்து பேசினார்.

லோகநாதன் 10 வயதிலேயே தனது தந்தையை இழந்தவர். இவரது தாயார் தான், இளநீர் வியாபாரம் செய்து லோகநாதன் உட்பட 3 குழந்தைகளையும் காப்பாற்றினார். 3 பேரையும் படிக்க வைக்க முடியாத நிலையில், லோகநாதன் 6-ம் வகுப்போடு படிப்பை நிறுத்தி விட்டார்.

இதன் பிறகு தாய்க்கு உதவுவது, கிடைத்த வேலைகளை செய்வது என்று இருந்து வந்தார். வட மாநிலங்களுக்கு அடிக்கடி சென்று வந்த வகையில், தொழிலாளர்கள், குழந்தைகள் படும் கஷ்டத்தைப் பார்த்து உதவி செய்யத் தொடங்கினார். இதற்காக கழிப்பறையை சுத்தம் செய்து குழந்தைகளுக்கு உதவி செய்து வருகிறார்.

Tags: PM ModiPraisedMaan ki baatLoganathan
ShareTweetSendShare
Previous Post

இஸ்ரேல் தாக்குதலில் மூத்த தளபதி பலி: ஹமாஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Next Post

இந்தியா – ஆஸ்திரேலியா டி20 போட்டி : விற்று தீர்ந்த டிக்கெட்கள்!

Related News

மும்பை : ஆயிரக்கணக்கான விநாயகர் சிலைகள் கிர்கான் சௌபட்டி கடற்கரையில் கரைப்பு!

உத்தராகண்ட் : தண்டவாளம் மீது பாறைகள், மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு!

தூத்துக்குடி அருகே போலீசாரின் சிறப்பு கவனிப்புக்கு பிறகு மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்ட ரவுடி!

ஆஸ்திரேலியாவில் குடும்பத்தினரை கொலை செய்த பெண்ணுக்கு 33 ஆண்டுகள் சிறை தண்டனை!

தெலுங்கானா : வெள்ளத்தில் சிக்கியிருந்த பேருந்தில் இருந்து பயணிகள் பத்திரமாக மீட்பு

பிரான்ஸ் : நிலச்சரிவால் திகைத்த மக்கள் – வீடியோ வைரல்!

Load More

அண்மைச் செய்திகள்

திருவண்ணாமலை : ஆவணி மாத பௌர்ணமியையொட்டி பக்தர்கள் கிரிவலம்!

“குட் பேட் அக்லி” திரைப்படத்தில் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம்

பீகார் : காங்., எம்.பியை தோளில் சுமந்த விவசாயிகள் – விவசாயிகளை காங்கிரஸ் அவமதித்து விட்டதாக பாஜக கண்டனம்!

குறைந்த யமுனை நீர்மட்டம் – சீராகும் டெல்லியின் நிலைமை!

ஜிஎஸ்டி வரிக்குறைப்புக்கு தமிழக அரசும், திமுக கூட்டணி கட்சிகளும் நன்றி தெரிவிக்கவில்லை : தமிழிசை செளந்தரராஜன்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் – சாம்பியன் பட்டம் வென்றார் சபலென்கா!

உத்தரகாசி பகுதியில் மீண்டும் மேகவெடிப்பு!

வெளிநாடு பயணங்களை நிறைவு செய்து சென்னை திரும்பினார் முதலமைச்சர் ஸ்டாலின்!

தருமபுரி : பட்டா மாறுதலை ரத்து செய்ய கோரி பொதுமக்கள் காவல் நிலையம் முற்றுகை!

மதிமுகவில் இருந்து மல்லை சத்யா நீக்கம் – வைகோ நடவடிக்கை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies