இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தம்: மேலும் 2 நாட்கள் நீட்டிப்பு!
Oct 25, 2025, 08:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம்: மேலும் 2 நாட்கள் நீட்டிப்பு!

Web Desk by Web Desk
Nov 28, 2023, 12:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

50 பிணைக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் – இஸ்ரேல் இடையே 4 நாட்கள் போர் நிறுத்தம் செய்யப்பட்டிருந்த நிலையில், கூடுதலாக 10 பிணைக் கைதிகளை விடுவிக்க மேலும் 2 நாட்களுக்கு போர் நிறுத்தம் நீட்டிக்கப்பட்டிருக்கிறது.

இஸ்ரேல் நாட்டின் மீது பாலஸ்தீனத்தைச் சேர்ந்த காஸா நகரின் ஹமாஸ் தீவிரவாதிகள், கடந்த அக்டோபர் மாதம் 7-ம் தேதி திடீர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். மேலும், இஸ்ரேலுக்குள் ஊடுருவி ஏராளமானோரை சுட்டுக் கொன்றதோடு, 200-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாகவும் பிடித்துச் சென்றனர். இத்தாக்குதலில் இஸ்ரேலில் வெளிநாட்டினர் உட்பட 1,400 பேர் உயிரிழந்தனர்.

இதையடுத்து, ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான போரை இஸ்ரேல் தொடங்கியது. விமானப்படை, கப்பல்படை, தரைப்படை என முப்படைகளையும் ஏவிவிட்டு நடத்தி வரும் தாக்குதலில் காஸா நகரமே உருக்குலைந்து போய்க் கிடக்கிறது. பலி எண்ணிக்கை 15,000 பேரை நெருங்கி இருக்கும் நிலையில், 25,000 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மேலும், ஹமாஸ் தீவிரவாதிகளின் தலைமையகம் உட்பட 1,500 தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டிருப்பதோடு, ஹமாஸ் அமைப்பின் முக்கியத் தலைவர்கள் மற்றும் தளபதிகள் உட்பட 1,000-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளும் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

அதேபோல, ஹமாஸ் தீவிரவாதிகளின் பதுங்குக் குழிகள், சுரங்கப் பாதைகளையும் இஸ்ரேல் இராணுவம் கண்டுபிடித்து அழித்திருக்கிறது.

இதனிடையே, பிணைக் கைதிகளை விடுவிப்பது தொடர்பாக கத்தார் நாட்டு உதவியுடன் அமெரிக்கா முயற்சி மேற்கொண்டது. இதன் பயனாக 50 பிணைக் கைதிகளை விடுவிக்க 4 நாட்கள் போர் நிறுத்தம் செய்ய உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி, ஹமாஸ் பிணைக் கைதிகளை விடுவித்தது. பதிலுக்கு இஸ்ரேல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதிகளை அந்நாடு விடுவித்தது.

இந்த நிலையில், போர் நிறுத்த ஒப்பந்தம் இன்று காலையுடன் நிறைவடைந்தது. அதேசமயம், போர் நிறுத்த ஒப்பந்தம் காலாவதியானதும் போர் தொடரும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்திருந்தார். எனவே, கத்தார் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் போர் நிறுத்தத்தை நீட்டிக்க பேச்சுவார்த்தை நடத்தின. இதன் பலனாக மேலும் 2 நாட்களுக்கு போர் நிறுத்தம் நீட்டிக்கப்பட்டிருக்கிறது.

போர் நிறுத்தம் செய்யப்பட்ட 4 நாட்களுக்குப் பிறகு, ஒவ்வொரு 10 பிணைக் கைதிகளை விடுவிக்க கூடுதலாக ஒரு நாள் போர் நிறுத்தம் நீட்டிக்கப்படும் என்று இஸ்ரேல் ஏற்கெனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags: WARIsraelHamasCease Fire
ShareTweetSendShare
Previous Post

உலக காலநிலை மாநாடு: நவம்பர் 30-ம் தேதி பிரதமர் மோடி துபாய் பயணம்!

Next Post

பழனியில் ரோப்கார் சேவை நிறுத்தம் – ஏன்?

Related News

இந்தியாவை தொடர்ந்து ஆப்கனிஸ்தானும் அதிரடி : பாகிஸ்தானுக்குள் பாயும் நதியின் குறுக்கே அணை கட்ட முடிவு!

டெல்லியில் மாசு : மேக விதைப்பு பலன் தருமா? – செயற்கை மழை எப்படி சாத்தியம்!

AI தளங்களுக்கு கடிவாளம் போடும் இந்தியா – கடுமையான விதிகளை விதிக்க திட்டம்!

தீஸ்தா நதிநீர் பிரச்னையில் மாஸ்டர் பிளான் : சீனா-வங்கதேசம் கைகோர்ப்பு – இந்தியாவை பாதிக்குமா?

அடுத்த தலைமுறை போருக்கு தயாராகும் இந்திய ராணுவம் : களமிறக்கப்படும் பைரவ் கமாண்டோ படை ‘அஷ்னி’ ட்ரோன் பிரிவு!

புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கை : மீண்டும் தலைதூக்க சதி செய்கிறதா PFI?

Load More

அண்மைச் செய்திகள்

ஆந்திராவை உலுக்கிய பேருந்து விபத்து : தூக்கத்திலேயே துடிதுடித்து பலியான சோகம்!

சமூக நீதி பற்றிப் பேசும் திமுக கூட்டணிக்குள்ளே சமூக நீதி இல்லை – நயினார் நாகேந்திரன்

இந்தியாவில் சிறு, குறு தொழில்கள் துறை வளர்ச்சி அடைந்து வருகிறது : பிரதமர் மோடி

கண்டுபிடிப்பது கஷ்டமாம் : பிரான்சில் கொள்ளை போன நெப்போலியன் கால நகைகள்!

ISIS அமைப்புடன் தொடர்புடைய 2 தீவிரவாதிகள் டெல்லியில் கைது!

ஐரோப்பாவில் இப்படி ஒரு நாடா?

திருவாரூர் : காதலனை காப்பாற்றுவதற்காக, தண்ணீரில் குதித்த காதலி – வெளியான சிசிடிவி காட்சி!

SIR க்கு தயாராக உள்ளோம் – தேர்தல் ஆணையம் தகவல்!

நாகை : டயர் வெடித்து தாறுமாறாக ஓடிய அரசு பேருந்து!

பி.எம்., ஸ்ரீ : கேரளாவை பார்த்தாவது மனம் மாறுங்கள், முதல்வர் ஸ்டாலின் – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies