இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தம்: மேலும் 2 நாட்கள் நீட்டிப்பு!
Jan 14, 2026, 03:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம்: மேலும் 2 நாட்கள் நீட்டிப்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 28, 2023, 12:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

50 பிணைக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் – இஸ்ரேல் இடையே 4 நாட்கள் போர் நிறுத்தம் செய்யப்பட்டிருந்த நிலையில், கூடுதலாக 10 பிணைக் கைதிகளை விடுவிக்க மேலும் 2 நாட்களுக்கு போர் நிறுத்தம் நீட்டிக்கப்பட்டிருக்கிறது.

இஸ்ரேல் நாட்டின் மீது பாலஸ்தீனத்தைச் சேர்ந்த காஸா நகரின் ஹமாஸ் தீவிரவாதிகள், கடந்த அக்டோபர் மாதம் 7-ம் தேதி திடீர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். மேலும், இஸ்ரேலுக்குள் ஊடுருவி ஏராளமானோரை சுட்டுக் கொன்றதோடு, 200-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாகவும் பிடித்துச் சென்றனர். இத்தாக்குதலில் இஸ்ரேலில் வெளிநாட்டினர் உட்பட 1,400 பேர் உயிரிழந்தனர்.

இதையடுத்து, ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான போரை இஸ்ரேல் தொடங்கியது. விமானப்படை, கப்பல்படை, தரைப்படை என முப்படைகளையும் ஏவிவிட்டு நடத்தி வரும் தாக்குதலில் காஸா நகரமே உருக்குலைந்து போய்க் கிடக்கிறது. பலி எண்ணிக்கை 15,000 பேரை நெருங்கி இருக்கும் நிலையில், 25,000 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மேலும், ஹமாஸ் தீவிரவாதிகளின் தலைமையகம் உட்பட 1,500 தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டிருப்பதோடு, ஹமாஸ் அமைப்பின் முக்கியத் தலைவர்கள் மற்றும் தளபதிகள் உட்பட 1,000-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளும் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

அதேபோல, ஹமாஸ் தீவிரவாதிகளின் பதுங்குக் குழிகள், சுரங்கப் பாதைகளையும் இஸ்ரேல் இராணுவம் கண்டுபிடித்து அழித்திருக்கிறது.

இதனிடையே, பிணைக் கைதிகளை விடுவிப்பது தொடர்பாக கத்தார் நாட்டு உதவியுடன் அமெரிக்கா முயற்சி மேற்கொண்டது. இதன் பயனாக 50 பிணைக் கைதிகளை விடுவிக்க 4 நாட்கள் போர் நிறுத்தம் செய்ய உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி, ஹமாஸ் பிணைக் கைதிகளை விடுவித்தது. பதிலுக்கு இஸ்ரேல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதிகளை அந்நாடு விடுவித்தது.

இந்த நிலையில், போர் நிறுத்த ஒப்பந்தம் இன்று காலையுடன் நிறைவடைந்தது. அதேசமயம், போர் நிறுத்த ஒப்பந்தம் காலாவதியானதும் போர் தொடரும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்திருந்தார். எனவே, கத்தார் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் போர் நிறுத்தத்தை நீட்டிக்க பேச்சுவார்த்தை நடத்தின. இதன் பலனாக மேலும் 2 நாட்களுக்கு போர் நிறுத்தம் நீட்டிக்கப்பட்டிருக்கிறது.

போர் நிறுத்தம் செய்யப்பட்ட 4 நாட்களுக்குப் பிறகு, ஒவ்வொரு 10 பிணைக் கைதிகளை விடுவிக்க கூடுதலாக ஒரு நாள் போர் நிறுத்தம் நீட்டிக்கப்படும் என்று இஸ்ரேல் ஏற்கெனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags: WARIsraelHamasCease Fire
ShareTweetSendShare
Previous Post

உலக காலநிலை மாநாடு: நவம்பர் 30-ம் தேதி பிரதமர் மோடி துபாய் பயணம்!

Next Post

பழனியில் ரோப்கார் சேவை நிறுத்தம் – ஏன்?

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies