ஐசிசி- யை மிரட்டும் பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு!
Jan 14, 2026, 06:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஐசிசி- யை மிரட்டும் பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு!

Murugesan M by Murugesan M
Nov 28, 2023, 12:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2025 சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் விளையாட இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லுமா? என்பது குறித்து இப்போதே பிரச்னையை கிளப்பி, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஐசிசி) அழுத்தம் கொடுத்து மிரட்டி வருகிறது பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது இந்தியாவில் நடந்து முடிந்த நிலையில், இந்த தொடருக்கு முன்னர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்றது.

ஆசிய கோப்பை பாகிஸ்தானில் நடத்த முடிவெடுத்திருந்த நிலையில் இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் அந்தத் தொடர் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெற்றது.

இந்நிலையில் 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் ட்ராபி தொடர் பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ள நிலையில் இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லுமா? என்பது குறித்து இப்போதே பிரச்னையை கிளப்பி இருக்கிறது பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு.

ஆசியக் கோப்பையில் இந்தியா பாகிஸ்தான் செல்லாமல் மறுப்பு தெரிவித்ததால் போட்டி இலங்கைக்கும் மாற்றப்பட்டது அதே போலவே சாம்பியன்ஸ் ட்ராபி தொடரிலும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் வராமல் தொடரை வேறு நாட்டுக்கு மாற்றுமாறு கோரிக்கை வைக்கலாம் என சந்தேகத்தில் உள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு.

பிசிசிஐ அதிகாரிகள் இது குறித்து கடந்த காலங்களில் பதில் அளிக்கும் போதெல்லாம் பாகிஸ்தான் நாட்டுக்கு இந்திய கிரிக்கெட் அணி செல்வது குறித்து இந்திய அரசு தான் இறுதி முடிவு எடுக்கும் என கூறி உள்ளது. எனவே, இந்திய அணி, பாகிஸ்தான் செல்வதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன.

அதே சமயம், பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு ஏற்கனவே ஆசியக் கோப்பை தொடரை வேறு நாட்டுக்கு மாற்றிய அதிருப்தியில் இருப்பதால், சாம்பியன்ஸ் ட்ராபி ஒப்பந்தத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுடன் இறுதி செய்யாமல் உள்ளது.

ஒருவேளை இந்திய அணி, பாகிஸ்தான் வரவில்லை என்றால் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்புக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என அழுத்தம் கொடுக்கத் துவங்கி உள்ளது.

அதேப்போல, இந்தியா வரவில்லை என்றால் தொடரை இடம் மாற்றுவது குறித்து தன்னிச்சையாக முடிவு எடுக்கக் கூடாது எனவும் உஷாராக ஒப்பந்தத்தில் இந்த விதிமுறைகளை சேர்க்க வேண்டும் என மிரட்டி வருகிறது பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு.

ஒருவேளை இந்திய அணி, சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் பங்கேற்காமல் போனால் அந்த தொடரை நடத்தும் பாகிஸ்தான் மற்றும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இரு தரப்புக்கும் விளம்பர வருவாய், ஒளிபரப்பு வருவாய் உள்ளிட்டவற்றில் பெரும் நஷ்டம் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: CricketICC
ShareTweetSendShare
Previous Post

ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ ரெங்கநாயகி தாயார் சன்னதியில் திருக்கார்த்திகை தீபம்!

Next Post

சென்னை – இரஷ்யா இடையே புதிய சரக்கு கப்பல் போக்குவரத்து!

Related News

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies